Thursday, 8 August 2013

திருப்பூர் இணை(னி)ய நண்பர்கள்



நேற்று 07-08-2013 மாலை 6 மணியளவில் திருப்பூரில், வழக்கறிஞர் சே.ஜெ.உமர்கயான் அவர்களின் அலுவலகத்தில் நடந்த நட்புக் கூட்டத்தின் ஒற்றை சொற்ச் சுருக்கமே "திருப்பூர் இணைய நண்பர்கள்" என்பது.

இந்த அமைப்பு, இணைய தளங்களில் இயங்கும் சமூக மாற்றத்தை விரும்பும் அனைவருக்குமானதாகும். சமூக சீர்கேடுகளை களையும் அனைவருக்குமானதாகும்.

இணையத்தில் மட்டுமே சந்தித்த முகங்களை, நேரில் காணுகின்ற பொழுது ஒருவித நெருடலை கொடுத்தது. சந்திக்க எண்ணிய சிலரை இதன் வாயிலாக சந்தித்தது ஓர் சந்தோஷ மிகுதி. அவ்வகையில் கூட்டத்தினை ஒருங்கிணைப்பு செய்திட்ட தோழர், டி.வி.எஸ்.சோமு அவர்களுக்கும், எனக்கு இதனை தெரியப்படுத்தி அழைத்திட்ட ஐயா.பாரதி வாஸன் அவர்களுக்கும் எனது மகிழ்வான நன்றிகள். மேலும் உமர்கயான் அவர்களோடு உரையாடியதும் ஒரு தனி மகிழ்வாக அமைந்தது.

பலதரப்பட்ட கட்சி, அமைப்பு சார்ந்தவர்கள் இப்படி ஓர் பொது தளத்தில் இணைவது எத்துனை சாத்தியக் கூறுகளுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது வியப்பே ! 

இந்த இணைப்பு இணையத்திலே சாத்தியமானது இன்னும் வியப்பே !

வாருங்கள் இணைய தோழர்களே எங்களோடு சேர்ந்து, பின் நாமாக பயணிக்க ஓர் பொது தளமாக திருப்பூர் இணைய நண்பர்கள் அமைப்பின் வாயிலாக....



தோழமையுடன்
- பழனி ஷஹான்

Saturday, 3 August 2013

மென் அமைதி



மென் அமைதி கொண்டாயடி
பெண்ணே
என் அமைதி பறித்தாயடி
நிலவே !

வன் கொடுமை செய்யாதடி
கண்ணே
வானுலகம் நானேற வாய்ப்பளிக்காதடி
உயிரே !

பாதகமற்ற சொல்லொன்றை கூறியிடடி
பாவையே
பாரிதனில் நாம் இருவர்
பள்ளி கொண்டு வாழ்ந்திடவே !

என் நாமம் நீயறிவாய்
உன் நாடி நானறிவேன்
நம் ஜோடி ஊரல்ல உலகறியும்
துணையே !

கணியன் பூங்குன்றனாரின்
வார்த்தைகளில் வாழ்வமைப்போம்
உன்னூரும் என்னூரும்
அவன் கூற்றில் நேர் கொள்ளட்டுமே !

ஊனென்ற உலகை
நான் கண்டு சில காலமாயிற்றடி அன்பே
உன் ஊமை நிலையை கைவிட்டு
என் விரதம் தீர்த்துடடி அன்னமே !


  - பழனி ஷஹான்