Sunday, 30 November 2014

குமரி மற்றும் நெல்லை பயணமும்: கொடிக்கால் சேக் அப்துல்லாஹ் அவர்களுடனான சந்திப்பும்


(கன்னியாகுமரி செல்லும் வழியில்)

26.09.2014 வெள்ளி அன்று பழனியிலிருந்து கிளம்பியது எங்களது பழனிபாபாவின் வாழ்வை ஆவணப்படுத்தும் தொடர்ச்சியான மற்றும் நீண்ட பயணத்தின் ஒரு பகுதியாய் அமைந்த மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட மாவட்டங்களை உள்ளடக்கிய பயணம்.

வெள்ளி இரவு மதுரையை அடைந்த நானும், தோழர்.உமர்கயான் அவர்களும், அங்கு குருஜெயச்சந்திரன் எனும் தோழரைச் சந்தித்து உரையாடினோம். அரைமணி நேரங்களுக்கும் மேலாக நடைபெற்ற அந்த உரையாடலின் நடுவிலேயே தேநீர் உபசரிப்புகளும் நடந்து முடிந்தது. மதுரையில் உள்ள ஆதீணம் அருணகிரிநாதர் அவர்களுடனான எங்களின் சந்திப்பை, குருஜெயச்சந்திரன் அவர்களின் மூலமாக உறுதிசெய்துவிட்டு, நாங்கள் மதுரையில் இருந்து நெல்லை நோக்கி பயணமானோம்.
(நெல்லையில் உமர்கயான், நான், வழக்கறிஞர்.அப்துல் ஜப்பார்)

இரவு 10:30 மணி அளவில் நெல்லை மண்ணை அடைந்த எங்களை, சட்டக் கல்லூரி தோழர்.அலீஃப் மீரான் அவர்கள் வரவேற்று, உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அலீஃப் மீரான் அவர்களின் சொந்த ஹோட்டலில் இரவு உணவுகளை முடித்துக் கொண்டு, அங்கிருந்து அருகிலுள்ள ஒரு விடுதியில் (லாட்ஜ்) அறையெடுத்து தங்க ஏற்ப்பாடும் செய்து தந்தார்.

மறுநாள் சனிக்கிழமை காலை விடிந்ததும், நாங்கள் நெல்லை மாநகருக்குள்ளேயே சில சந்திப்புகளை ஏற்ப்பாடு செய்து இருந்தோம். அதற்க்காக வெளியே கிளம்ப இருந்த நேரம், மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பளர்களில் ஒருவரான லேனா குமார் அவர்கள், அறைக்கு வந்து எங்களைச் சந்தித்தார். இவர் வருவதற்கு முன்பாக, நெல்லை மாவட்ட மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர், வழக்கறிஞர்.அப்துல் ஜப்பார் அவர்களும் அறைக்கு வந்து சந்தித்துச் சென்றார்.

வெளியே கிளம்புவதற்க்காக ஆயத்தமாகி, அறையை காலி செய்துவிட்டு வெளியேறினோம். நேரே மேலப்பாளையத்தில் உள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்த சிலரைச் சந்தித்துப் பேசினோம். அப்துல் ஜப்பார் அவர்கள் மேலும் சிலரை சந்திக்க ஏற்ப்பாடு செய்திருந்தார், அவர்களின் காலதாமத்தால் எங்களால் அவர்களை சந்திக்க நேரமில்லாமல், உடனே அங்கிருந்து வள்ளியூர் அருகே உள்ள ஏர்வாடிக்குப் பயணமானோம்.
(தமுமுக மாநில நிர்வாகிகளான அப்துல் சமது மற்றும் தமீமுன் அன்சாரி, உமர்கயான் மற்றும் பழனி ஷஹான்)

(நான், அப்துல் சமது மற்றும் உமர்கயான்)

ஏர்வாடிக்கு மதியம் 2  மணி அளவில் சென்றடைந்த நாங்கள், அங்கு தமுமுக மாநில அமைப்பினர் ஒருவரின் இல்ல திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டு, மேலும் மதிய உணவையும் அங்கேயே முடித்துக் கொண்டோம். அங்கு தமுமுக மூத்த தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான, பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களையும், தமுமுக மாநில தலைவரான திரு.ஜே.எம்.ரிபாஃபி, அப்துல் சமது, மாநில பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி உள்ளிடோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் அவர்களுடன் உரையாடிவிட்டு அங்கிருந்து நாங்கள் கன்னியாகுமரி பயணமானோம்.
(கொடிக்கால் சேக் அப்துல்லா அவர்களுக்கு சால்வை அணிவிக்கையில் உடன் உமர்கயான்) 
மாலை 4:30 மணி அளவில்
கன்னியாகுமரி சென்றடைந்த நாங்கள் அங்கு, பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள, 'அமைதி இல்லத்தில்' பண்முகப் போராளியான மதிப்பிற்குரிய கொடிக்கால் செல்லப்பா எனும் கொடிக்கால் சேக் அப்துல்லா அவர்களை சந்தித்து உரையாடினோம். ஒரு ஆத்திகராக, கம்யூனிஸ்ட்டாக பிறகு இசுலாமியராக கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சமூக விடுதலைக்கான போராட்டை முன்னெடுத்துக் கொண்டுவருபவரும், இலக்கிய உலகில் தனியொரு ஆளுமையை பெற்றவரும்தான் கொடிக்கால் அவர்கள். அவருக்கும் பழனிபாபாவிற்கு இடையேயான சந்திப்புகள், தொடர்புகள், அரசியல் பேச்சுக்களை முழுமையாக கேட்டறிந்துவிட்டு, மாலை 6:30 மணி அளவில் கன்னியாகுமரி கடற்கரைக்கு அவரோடு சென்று, மேலும் பல சுவாரசியமான விடயங்களை பேசிக் கொண்டோம்.
(கொடிக்கால் அவர்களோடு பழனி ஷஹான்)
PALANI SHAHAN WITH AN KODIKKAL SHEIK ABDULLA)

இந்த சந்திப்பின்போது, கொடிக்கால் அவர்கள் தன்னுடைய கடந்து வந்த பயணங்களை முழுமையாக விளக்கிப் பேசினார். தலித் சமூகத்தில் பிறந்தது, இந்து மதத்தின் தீண்டாமையில் உழன்றது, அதிலிருந்து வெளியேறி பகுத்தறிவு பெற்று ஆத்திகராய் வலம் வந்தது, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பல பகுதிகளுக்கும் பயணித்தது, மாநில பொறுப்புகளில் இருந்தது, தா.பாண்டியன், நல்லக்கண்ணு அய்யா ஆகியோருடன் இருந்து களம் கண்டது, திமுக தலைவர் கலைஞர் உடனான நட்பு, பிறகு தீண்டாமையில் இருந்து எப்படியும் வெளியேறி, தன்மானம் அடைந்தே தீர வேண்டும் என்கிற தனது தீர தேடுதலின் இறுதியாக இசுலாத்தை ஏற்றது, இன்றளவும் தூய இசுலாமியர் இருந்து களம் கண்டு வருவது, கலை, இலக்கியத் தடத்தில் ஆளுமை செலுத்தியது, கலைஞரிடமிருந்தும், திருமாவளவன் அவர்களிடமிருந்தும் என தான் வாங்கிய பல விருதுகளையும் காண்பித்தவர், எங்களுக்கு அவர் எழுதிய "புறப்படுங்கள் இசுலாத்தை நோக்கி" என்கிற பரவலாக அதிர்வலைகளை ஏற்ப்படுத்திய, பல மொழிகளிலும் மொழி செய்யப்பட்ட புத்தகத்தின் ஆங்கில பதிப்பை பரிசாக வழங்கினார்.
(உமர்கயான் அவர்கள் கொடிக்காலிடமிருந்து புத்தகத்தினை பெறும்போது)

தொடர்ந்து கொடிக்கால் அவர்களோடு, பழனிபாபாவிற்கும், அவருக்குமான பல விடயங்களைப் பேசிவிட்டு, மேலும் கடற்கரையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக செலவழித்துவிட்டு, நாங்கள் நாகர் கோவில் அருகே உள்ள திட்டுவிழை எனும் ஊருக்கு பயணமானோம். இந்தப் பயணத்தில் எங்களோடு நாகர்கோவில் வரை, கொடிக்கால் அவர்களும் வந்தார். நாகர்கோவில் வந்ததும் இறங்கிய அவர் மேலும், சில நிமிடங்கள் நின்றபடியே பேசிவிட்டு, ஆட்டோ ஒன்றைப் பிடித்து அவரது வீட்டிற்கு புறப்படத் தயாரானார். எங்களின் வருகையையும், சந்திப்பையும் குறித்து பலமுறை தனது மகிழ்வைத் தெரிவித்துக் கொள்ள அவர் மறக்கவே இல்லை. எங்களைவிட்டு பிரிய முற்ப்படும்போதும் அவர் தனது மகிழ்வை தெரிவித்துக் கொண்டு, மேலும் தொடர்ந்து களத்தில் பயணிப்போம் எனவும் உற்சாகத்தை அளித்துவிட்டு பிரிந்தார். அவரை பிரியாவிடையோடு அணுப்பிவிட்டு நாங்கள் திட்டுவிழைக்கு பயணமானோம்.
(கொடிக்கால் அவர்களோடு கன்னியாகுமரி கடற்கரையில் நான்)
(கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள ஒரு கிருத்துவ தேவாலயத்தில்)

நாகர்கோவிலி கொடிக்கால் அவர்களை சரியா 8:15 மணிக்கு பிரிந்து பயணமான நாங்கள், சரியாக 9:20 மணி அளவில் திட்டுவிழையை அடைந்தோம். காலையிலிருந்தே எங்களது வருகையை எதிர்பார்த்து, மதிய உணவும் தயார் செய்து காத்திருந்த அண்ணன் தமிழரசன் அப்துல்காதர் அவர்களை நாங்கள் இரவில்தான் சந்திக்க நேர்ந்தது. 

(திட்டுவிழை நுழைவில்)

காலையிலிருந்து காந்திருந்த தமிழரசன் அப்துல் காதர் அண்ணன், எங்களைக் கண்டதும் மகிழ்ந்து வரவேற்றார். உடனே அருகிலிருந்த தேநீர் கடையில், நேநீர் வாங்கிக் கொடுத்த அவர், உடனே எதிரே உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அவர்கள் ஊரில் புரோட்டா உட்பட எல்லா உணவுவகைகளும் அருமையாக இருக்கும், இதுதான் எங்களூரின் சிறப்பு என்று கூறிக் கொண்டே, பலவிதாமான உணவுகளை எங்களுக்கு வரவைத்தார். உண்மையில் சாப்பாட்டில் நானும் சரி, உமர்கயானும் சரி மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் உள்ளவர்கள். எங்களிடத்தில் சாப்பாட்டை குவித்து வைத்து சாப்பிடச் சொல்லி அன்புக் கொடுமை செய்துவிட்டார் அவர். நாங்கள் அதிகாமக சாப்பிடும் சாப்பாட்டின் அளவு புரோட்டா எனில் மூன்று, தோசை எனில் இரண்டு, இட்லி எனில் நான்கு எனத்தான் இருக்கும். இதைத்தாண்டி எங்கள் வயிறு 'நோ எண்ட்ரி" அறிகுறியை வெளிப்படுத்திவிடும், அப்படிபட்ட எங்களுக்கு விருந்து எனும் பெயரில் டேபிள் முழுவதும் உணவை பரப்பி வைத்தால் எப்படி இருக்கும்? எவ்வளவு சிரமப்பட்டிருப்போம், பட்டோம்.
(உமர்கயான் மற்றும் தமிரசன் அப்துல்காதர்)

ஹோட்டலில் இருந்து புறப்பட்டு இரவு 11 மணி அளவில் அவரின் வீட்டிற்குச் சென்றடைந்தோம். அங்கு தேநீர், பழங்களின் கலவையாக ஒரு இனிப்பு பண்டத்தையும் கொடுத்தார்கள், மிகவும் சிரமப்பட்டு தள்ளிக் கொண்டிருக்க, வாழைப்பழங்கள் வந்தன. மெது,மெதுவாக அவைகளை உட்கொண்டுவிட்டு, அப்படியே கதைக்கத் தொடங்கினோம். இரவு 3 மணி வரை கதைப்பு ஓடி இருக்கும். பலவகையான அரசியல் நிகழ்வுகளைப் பேசிவிட்டு அயர்ந்துபோனோம்.
மறுநாள் அதிகாலை 6 மணிக்கு முழித்த எங்களை அழைத்துக் கொண்டும் வாய்க்காலுக்குச் சென்றார் அப்துல் காதர். வாய்க்கால் கரை அருகே இருந்த வேப்ப மரத்திலிருந்து குச்சிகளை ஒடித்து அதனைக் கொண்டு பல் துவக்கினோம். அடுத்ததாக நீர் நிரம்பி ஓடும் வாய்க்காலுக்குள் குடித்து ஆட்டம் போட்டு, குளித்து முடித்தோம். சுற்றிலும் மலைத் தொடர்கள், வயல் வெளிகளில் அப்படி ஒரு பசுமை, கேரளத்தின் மொத்த சாயலில் தென்னந்தோப்புகள் என ஒரே இயற்கைத் திருவிழாவாக இருந்தது. இப்படியான ஒரு விடயத்தை அணுபவித்து எவ்வளவோ ஆண்டுகளாகியிருந்தது.
(உமர்கயான், தமிழரசன் அப்துல் காதர், பழனி ஷஹான்)

உடல் தேகம் சில்லிட்டுப் போன குளியலை முடித்துக் கொண்டு, வீடு திரும்பினோம். வீட்டிற்குள் நுழைந்ததும், அடுத்து கிளம்புவதற்க்கான பணிகளில் தீவிரமானோம். காலை 7:30 மணிக்கெல்லாம் புறப்பட்டுவிட்டோம். புறப்பட்டுக் கொண்டிருந்த எங்களை இருக்கச் சொல்லி, அப்துல் காதர் அண்ணனும் சரி, அவரின் துணைவியாரும் சரி பலமுறை சொல்லிவிட்டார்கள். ஆனால் என்ன செய்ய எங்களின் நேரமிண்மை அப்படி இருந்தது. காலையில் அரபு கல்வி கற்ப்பதற்க்காக பாடசாலைகளுக்கு செல்ல தயராகிக் கொண்டிருந்த, அவரின் பிள்ளைகளிடம் சிறிது நேரத்தை கழித்துவிட்டு, காலை உணவில் கையை வைத்தோம்.
(தமிழரசன் அப்துல் காதர் அவர்களின் பிள்ளைகளுடன்)

எல்லோரும் ஒன்று சேர்ந்து, ஒரு பெரிய தட்டில் சோற்றை வைத்து உணவருந்தினோம். இதுவும் பல காலங்கள் ஆகிப் போயிருந்த சில நினைவுகளை, அந்த நேரத்திலேயே ஈர்த்து தந்தது. உணவை சாபிட்டு முடித்ததும், கொடுக்கப்பட்ட நேநீரைக் குடித்துவிட்டு, அவர்களிடமிருந்து பிரியா விடையைப் பெற்று, பலமுறை இருக்கச் சொல்லிய வற்ப்புறுத்தல்களைக் கடந்து, எங்களது பயணம் நெல்லையை நோக்கியது.

காலை 10 மணி அளவில் நெல்லை பாளையங்கோட்டைடை அடந்த நாங்கள், அங்கு, "தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின்" தலைவர் திரு.ஜான்பாண்டியன் அவர்களை, அவரது தமிழின வேந்தர் இல்லத்தில் சந்தித்தோம்.


பழனிபாபா அவர்களுக்கு ஜான்பாண்டியன் அவர்களுக்குமான நினைவுகளை கேட்டு பதிந்து கொண்ட நாம் அங்கிருந்து கிளம்பினோ. (இந்த சந்திப்பு குறிப்பு விரிவாக இதே வலைப்பூவில் எழுதியுள்ளேன்). நெல்லையிலிருந்து கிளம்பத் தயாரான எங்களை, இறுதியாக் அலீஃப் மீரான் அவர்கள் சந்தித்து, திருநெல்வேலி அல்வா பொட்டளங்களையும் அளித்து, விடை கொடுத்து, வழியனுப்பி வைத்தார்.
மதியம் 1 மணி அளவில் நெல்லையில் இருந்து கிளம்பிய எங்களது பயணம், மாலை 6;30 மணி அளவில் பழனியை அடைந்தது. பழனியில் நான் எனது பயணத்தை முடிக்க, அதிலிருந்து கிளம்பிய உமர்கயான் அவர்கள் இரவு 8:30 மணிக்கு திருப்பூரை அடைந்து பயணத்தை முழுமையாக முடித்து வைத்தார்.

விரைவில் புரட்சியாளர்.பழனிபாபாவின் வரலாற்றை, பல அறியப்படாத சுவாரசியமான தகவல்களோடும், அதிர்வலைகளை தோற்றுவிக்கிற அரசியல் நிகழ்வுகளோடும், வைப்போம், என்கிற உறுதியில் நிறைவு செய்கிறேன்.

தோழமையுடன்
பழனி ஷஹான்.











No comments:

Post a Comment