
24-10-2013 அன்று, திருப்பூர் பதியம் திரைப்பட அமைப்பாளரும், புகைப்பட நிபுணரும், தமிழ் ஆர்வலரும், பெரியாரியவாதியுமாக இயங்கி வரும் ஐயா 'பாரதி வாசன்' அவர்களிடமிருந்து இரண்டு மகிழ்வான அன்பளிப்புகள் பெற்றேன். அதில் ஒன்று, தோழர்.எச்.பீர் முஹம்மது அவர்கள் எழுதிய, "குர்து தேசிய இனப் போராட்டம்" எனும் ஆய்வு நூல். மற்றொன்று இந்த ஒளிப் படங்கள்.
அவருடனான மதிப்புத் தோழமை இன்னும் வளர வேண்டும் என்று ஆவல். அன்பளிப்புகளுக்காக மட்டுமில்லை அன்பிற்காகவும், நல்லறிவிற்காகவும்.
