Sunday, 30 November 2014

பழ.நெடுமாறன் உடன் சந்திப்பு - பழனி ஷஹான்



                    புரட்சியாளர்.பழனிபாபா அவர்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் பயணத்தில், தமிழ்தேசிய தளத்தில் பரவலாக செயல்பட்டுவரும், மூத்த அரசியல்வாதி அய்யா பழ.நெடுமாறன் (NEDUMARAN.PALA) அவர்களை கோவையில் சந்தித்தேன்.
(பழ.நெடுமாறன் அவர்களுடன் பழனி ஷஹான்)
PALANI SHAHAN WITH AN PALA.NEDUMARAN)

கடந்த ஆகஸ்ட் மாதம், 11-ம் தேதி, கோயம்புத்தூரில் அய்யா நெடுமாறன் அவர்களைச் சந்தித்து உரையாடினேன். பழனிபாபாவிற்கும் அவருக்குமான தொடர்புகள், சிறை சந்திப்புகள், மேடை அனுபவங்கள், இவைகளைத் தாண்டி தமிழீழ மற்றும் விடுதலைப் புலிகளுடனும் அதன் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களுடன் பழனிபாபாவிற்கு இருந்த தொடர்பும் என, பல விடயங்களைக் கேட்டுத் தொடர்ந்தேன்.

இவை தவிர, பழனிபாபா குறித்தான கட்டுரையையு, மேலும் பல கேள்விகளையும் முன்வைத்து அவருக்கு ஒரு கடிதம், (அவரே அனுப்பக் கேட்டு கொண்டபடியால்) அனுப்பி, பதில்களைப் பெற்றேன். விரைவில் வெளிவர இருக்கும் பழனிபாபாவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில், பல எதிர்பாரத அரசியல் அதிர்வலைகள் தவிர்க்க இயலாதது என்பதனை மட்டும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

தோழமையுடன்
பழனி ஷஹான்.

குமரி மற்றும் நெல்லை பயணமும்: கொடிக்கால் சேக் அப்துல்லாஹ் அவர்களுடனான சந்திப்பும்


(கன்னியாகுமரி செல்லும் வழியில்)

26.09.2014 வெள்ளி அன்று பழனியிலிருந்து கிளம்பியது எங்களது பழனிபாபாவின் வாழ்வை ஆவணப்படுத்தும் தொடர்ச்சியான மற்றும் நீண்ட பயணத்தின் ஒரு பகுதியாய் அமைந்த மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட மாவட்டங்களை உள்ளடக்கிய பயணம்.

வெள்ளி இரவு மதுரையை அடைந்த நானும், தோழர்.உமர்கயான் அவர்களும், அங்கு குருஜெயச்சந்திரன் எனும் தோழரைச் சந்தித்து உரையாடினோம். அரைமணி நேரங்களுக்கும் மேலாக நடைபெற்ற அந்த உரையாடலின் நடுவிலேயே தேநீர் உபசரிப்புகளும் நடந்து முடிந்தது. மதுரையில் உள்ள ஆதீணம் அருணகிரிநாதர் அவர்களுடனான எங்களின் சந்திப்பை, குருஜெயச்சந்திரன் அவர்களின் மூலமாக உறுதிசெய்துவிட்டு, நாங்கள் மதுரையில் இருந்து நெல்லை நோக்கி பயணமானோம்.
(நெல்லையில் உமர்கயான், நான், வழக்கறிஞர்.அப்துல் ஜப்பார்)

இரவு 10:30 மணி அளவில் நெல்லை மண்ணை அடைந்த எங்களை, சட்டக் கல்லூரி தோழர்.அலீஃப் மீரான் அவர்கள் வரவேற்று, உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அலீஃப் மீரான் அவர்களின் சொந்த ஹோட்டலில் இரவு உணவுகளை முடித்துக் கொண்டு, அங்கிருந்து அருகிலுள்ள ஒரு விடுதியில் (லாட்ஜ்) அறையெடுத்து தங்க ஏற்ப்பாடும் செய்து தந்தார்.

மறுநாள் சனிக்கிழமை காலை விடிந்ததும், நாங்கள் நெல்லை மாநகருக்குள்ளேயே சில சந்திப்புகளை ஏற்ப்பாடு செய்து இருந்தோம். அதற்க்காக வெளியே கிளம்ப இருந்த நேரம், மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பளர்களில் ஒருவரான லேனா குமார் அவர்கள், அறைக்கு வந்து எங்களைச் சந்தித்தார். இவர் வருவதற்கு முன்பாக, நெல்லை மாவட்ட மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர், வழக்கறிஞர்.அப்துல் ஜப்பார் அவர்களும் அறைக்கு வந்து சந்தித்துச் சென்றார்.

வெளியே கிளம்புவதற்க்காக ஆயத்தமாகி, அறையை காலி செய்துவிட்டு வெளியேறினோம். நேரே மேலப்பாளையத்தில் உள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்த சிலரைச் சந்தித்துப் பேசினோம். அப்துல் ஜப்பார் அவர்கள் மேலும் சிலரை சந்திக்க ஏற்ப்பாடு செய்திருந்தார், அவர்களின் காலதாமத்தால் எங்களால் அவர்களை சந்திக்க நேரமில்லாமல், உடனே அங்கிருந்து வள்ளியூர் அருகே உள்ள ஏர்வாடிக்குப் பயணமானோம்.
(தமுமுக மாநில நிர்வாகிகளான அப்துல் சமது மற்றும் தமீமுன் அன்சாரி, உமர்கயான் மற்றும் பழனி ஷஹான்)

(நான், அப்துல் சமது மற்றும் உமர்கயான்)

ஏர்வாடிக்கு மதியம் 2  மணி அளவில் சென்றடைந்த நாங்கள், அங்கு தமுமுக மாநில அமைப்பினர் ஒருவரின் இல்ல திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டு, மேலும் மதிய உணவையும் அங்கேயே முடித்துக் கொண்டோம். அங்கு தமுமுக மூத்த தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான, பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களையும், தமுமுக மாநில தலைவரான திரு.ஜே.எம்.ரிபாஃபி, அப்துல் சமது, மாநில பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி உள்ளிடோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் அவர்களுடன் உரையாடிவிட்டு அங்கிருந்து நாங்கள் கன்னியாகுமரி பயணமானோம்.
(கொடிக்கால் சேக் அப்துல்லா அவர்களுக்கு சால்வை அணிவிக்கையில் உடன் உமர்கயான்) 
மாலை 4:30 மணி அளவில்
கன்னியாகுமரி சென்றடைந்த நாங்கள் அங்கு, பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள, 'அமைதி இல்லத்தில்' பண்முகப் போராளியான மதிப்பிற்குரிய கொடிக்கால் செல்லப்பா எனும் கொடிக்கால் சேக் அப்துல்லா அவர்களை சந்தித்து உரையாடினோம். ஒரு ஆத்திகராக, கம்யூனிஸ்ட்டாக பிறகு இசுலாமியராக கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சமூக விடுதலைக்கான போராட்டை முன்னெடுத்துக் கொண்டுவருபவரும், இலக்கிய உலகில் தனியொரு ஆளுமையை பெற்றவரும்தான் கொடிக்கால் அவர்கள். அவருக்கும் பழனிபாபாவிற்கு இடையேயான சந்திப்புகள், தொடர்புகள், அரசியல் பேச்சுக்களை முழுமையாக கேட்டறிந்துவிட்டு, மாலை 6:30 மணி அளவில் கன்னியாகுமரி கடற்கரைக்கு அவரோடு சென்று, மேலும் பல சுவாரசியமான விடயங்களை பேசிக் கொண்டோம்.
(கொடிக்கால் அவர்களோடு பழனி ஷஹான்)
PALANI SHAHAN WITH AN KODIKKAL SHEIK ABDULLA)

இந்த சந்திப்பின்போது, கொடிக்கால் அவர்கள் தன்னுடைய கடந்து வந்த பயணங்களை முழுமையாக விளக்கிப் பேசினார். தலித் சமூகத்தில் பிறந்தது, இந்து மதத்தின் தீண்டாமையில் உழன்றது, அதிலிருந்து வெளியேறி பகுத்தறிவு பெற்று ஆத்திகராய் வலம் வந்தது, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பல பகுதிகளுக்கும் பயணித்தது, மாநில பொறுப்புகளில் இருந்தது, தா.பாண்டியன், நல்லக்கண்ணு அய்யா ஆகியோருடன் இருந்து களம் கண்டது, திமுக தலைவர் கலைஞர் உடனான நட்பு, பிறகு தீண்டாமையில் இருந்து எப்படியும் வெளியேறி, தன்மானம் அடைந்தே தீர வேண்டும் என்கிற தனது தீர தேடுதலின் இறுதியாக இசுலாத்தை ஏற்றது, இன்றளவும் தூய இசுலாமியர் இருந்து களம் கண்டு வருவது, கலை, இலக்கியத் தடத்தில் ஆளுமை செலுத்தியது, கலைஞரிடமிருந்தும், திருமாவளவன் அவர்களிடமிருந்தும் என தான் வாங்கிய பல விருதுகளையும் காண்பித்தவர், எங்களுக்கு அவர் எழுதிய "புறப்படுங்கள் இசுலாத்தை நோக்கி" என்கிற பரவலாக அதிர்வலைகளை ஏற்ப்படுத்திய, பல மொழிகளிலும் மொழி செய்யப்பட்ட புத்தகத்தின் ஆங்கில பதிப்பை பரிசாக வழங்கினார்.
(உமர்கயான் அவர்கள் கொடிக்காலிடமிருந்து புத்தகத்தினை பெறும்போது)

தொடர்ந்து கொடிக்கால் அவர்களோடு, பழனிபாபாவிற்கும், அவருக்குமான பல விடயங்களைப் பேசிவிட்டு, மேலும் கடற்கரையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக செலவழித்துவிட்டு, நாங்கள் நாகர் கோவில் அருகே உள்ள திட்டுவிழை எனும் ஊருக்கு பயணமானோம். இந்தப் பயணத்தில் எங்களோடு நாகர்கோவில் வரை, கொடிக்கால் அவர்களும் வந்தார். நாகர்கோவில் வந்ததும் இறங்கிய அவர் மேலும், சில நிமிடங்கள் நின்றபடியே பேசிவிட்டு, ஆட்டோ ஒன்றைப் பிடித்து அவரது வீட்டிற்கு புறப்படத் தயாரானார். எங்களின் வருகையையும், சந்திப்பையும் குறித்து பலமுறை தனது மகிழ்வைத் தெரிவித்துக் கொள்ள அவர் மறக்கவே இல்லை. எங்களைவிட்டு பிரிய முற்ப்படும்போதும் அவர் தனது மகிழ்வை தெரிவித்துக் கொண்டு, மேலும் தொடர்ந்து களத்தில் பயணிப்போம் எனவும் உற்சாகத்தை அளித்துவிட்டு பிரிந்தார். அவரை பிரியாவிடையோடு அணுப்பிவிட்டு நாங்கள் திட்டுவிழைக்கு பயணமானோம்.
(கொடிக்கால் அவர்களோடு கன்னியாகுமரி கடற்கரையில் நான்)
(கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள ஒரு கிருத்துவ தேவாலயத்தில்)

நாகர்கோவிலி கொடிக்கால் அவர்களை சரியா 8:15 மணிக்கு பிரிந்து பயணமான நாங்கள், சரியாக 9:20 மணி அளவில் திட்டுவிழையை அடைந்தோம். காலையிலிருந்தே எங்களது வருகையை எதிர்பார்த்து, மதிய உணவும் தயார் செய்து காத்திருந்த அண்ணன் தமிழரசன் அப்துல்காதர் அவர்களை நாங்கள் இரவில்தான் சந்திக்க நேர்ந்தது. 

(திட்டுவிழை நுழைவில்)

காலையிலிருந்து காந்திருந்த தமிழரசன் அப்துல் காதர் அண்ணன், எங்களைக் கண்டதும் மகிழ்ந்து வரவேற்றார். உடனே அருகிலிருந்த தேநீர் கடையில், நேநீர் வாங்கிக் கொடுத்த அவர், உடனே எதிரே உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அவர்கள் ஊரில் புரோட்டா உட்பட எல்லா உணவுவகைகளும் அருமையாக இருக்கும், இதுதான் எங்களூரின் சிறப்பு என்று கூறிக் கொண்டே, பலவிதாமான உணவுகளை எங்களுக்கு வரவைத்தார். உண்மையில் சாப்பாட்டில் நானும் சரி, உமர்கயானும் சரி மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் உள்ளவர்கள். எங்களிடத்தில் சாப்பாட்டை குவித்து வைத்து சாப்பிடச் சொல்லி அன்புக் கொடுமை செய்துவிட்டார் அவர். நாங்கள் அதிகாமக சாப்பிடும் சாப்பாட்டின் அளவு புரோட்டா எனில் மூன்று, தோசை எனில் இரண்டு, இட்லி எனில் நான்கு எனத்தான் இருக்கும். இதைத்தாண்டி எங்கள் வயிறு 'நோ எண்ட்ரி" அறிகுறியை வெளிப்படுத்திவிடும், அப்படிபட்ட எங்களுக்கு விருந்து எனும் பெயரில் டேபிள் முழுவதும் உணவை பரப்பி வைத்தால் எப்படி இருக்கும்? எவ்வளவு சிரமப்பட்டிருப்போம், பட்டோம்.
(உமர்கயான் மற்றும் தமிரசன் அப்துல்காதர்)

ஹோட்டலில் இருந்து புறப்பட்டு இரவு 11 மணி அளவில் அவரின் வீட்டிற்குச் சென்றடைந்தோம். அங்கு தேநீர், பழங்களின் கலவையாக ஒரு இனிப்பு பண்டத்தையும் கொடுத்தார்கள், மிகவும் சிரமப்பட்டு தள்ளிக் கொண்டிருக்க, வாழைப்பழங்கள் வந்தன. மெது,மெதுவாக அவைகளை உட்கொண்டுவிட்டு, அப்படியே கதைக்கத் தொடங்கினோம். இரவு 3 மணி வரை கதைப்பு ஓடி இருக்கும். பலவகையான அரசியல் நிகழ்வுகளைப் பேசிவிட்டு அயர்ந்துபோனோம்.
மறுநாள் அதிகாலை 6 மணிக்கு முழித்த எங்களை அழைத்துக் கொண்டும் வாய்க்காலுக்குச் சென்றார் அப்துல் காதர். வாய்க்கால் கரை அருகே இருந்த வேப்ப மரத்திலிருந்து குச்சிகளை ஒடித்து அதனைக் கொண்டு பல் துவக்கினோம். அடுத்ததாக நீர் நிரம்பி ஓடும் வாய்க்காலுக்குள் குடித்து ஆட்டம் போட்டு, குளித்து முடித்தோம். சுற்றிலும் மலைத் தொடர்கள், வயல் வெளிகளில் அப்படி ஒரு பசுமை, கேரளத்தின் மொத்த சாயலில் தென்னந்தோப்புகள் என ஒரே இயற்கைத் திருவிழாவாக இருந்தது. இப்படியான ஒரு விடயத்தை அணுபவித்து எவ்வளவோ ஆண்டுகளாகியிருந்தது.
(உமர்கயான், தமிழரசன் அப்துல் காதர், பழனி ஷஹான்)

உடல் தேகம் சில்லிட்டுப் போன குளியலை முடித்துக் கொண்டு, வீடு திரும்பினோம். வீட்டிற்குள் நுழைந்ததும், அடுத்து கிளம்புவதற்க்கான பணிகளில் தீவிரமானோம். காலை 7:30 மணிக்கெல்லாம் புறப்பட்டுவிட்டோம். புறப்பட்டுக் கொண்டிருந்த எங்களை இருக்கச் சொல்லி, அப்துல் காதர் அண்ணனும் சரி, அவரின் துணைவியாரும் சரி பலமுறை சொல்லிவிட்டார்கள். ஆனால் என்ன செய்ய எங்களின் நேரமிண்மை அப்படி இருந்தது. காலையில் அரபு கல்வி கற்ப்பதற்க்காக பாடசாலைகளுக்கு செல்ல தயராகிக் கொண்டிருந்த, அவரின் பிள்ளைகளிடம் சிறிது நேரத்தை கழித்துவிட்டு, காலை உணவில் கையை வைத்தோம்.
(தமிழரசன் அப்துல் காதர் அவர்களின் பிள்ளைகளுடன்)

எல்லோரும் ஒன்று சேர்ந்து, ஒரு பெரிய தட்டில் சோற்றை வைத்து உணவருந்தினோம். இதுவும் பல காலங்கள் ஆகிப் போயிருந்த சில நினைவுகளை, அந்த நேரத்திலேயே ஈர்த்து தந்தது. உணவை சாபிட்டு முடித்ததும், கொடுக்கப்பட்ட நேநீரைக் குடித்துவிட்டு, அவர்களிடமிருந்து பிரியா விடையைப் பெற்று, பலமுறை இருக்கச் சொல்லிய வற்ப்புறுத்தல்களைக் கடந்து, எங்களது பயணம் நெல்லையை நோக்கியது.

காலை 10 மணி அளவில் நெல்லை பாளையங்கோட்டைடை அடந்த நாங்கள், அங்கு, "தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின்" தலைவர் திரு.ஜான்பாண்டியன் அவர்களை, அவரது தமிழின வேந்தர் இல்லத்தில் சந்தித்தோம்.


பழனிபாபா அவர்களுக்கு ஜான்பாண்டியன் அவர்களுக்குமான நினைவுகளை கேட்டு பதிந்து கொண்ட நாம் அங்கிருந்து கிளம்பினோ. (இந்த சந்திப்பு குறிப்பு விரிவாக இதே வலைப்பூவில் எழுதியுள்ளேன்). நெல்லையிலிருந்து கிளம்பத் தயாரான எங்களை, இறுதியாக் அலீஃப் மீரான் அவர்கள் சந்தித்து, திருநெல்வேலி அல்வா பொட்டளங்களையும் அளித்து, விடை கொடுத்து, வழியனுப்பி வைத்தார்.
மதியம் 1 மணி அளவில் நெல்லையில் இருந்து கிளம்பிய எங்களது பயணம், மாலை 6;30 மணி அளவில் பழனியை அடைந்தது. பழனியில் நான் எனது பயணத்தை முடிக்க, அதிலிருந்து கிளம்பிய உமர்கயான் அவர்கள் இரவு 8:30 மணிக்கு திருப்பூரை அடைந்து பயணத்தை முழுமையாக முடித்து வைத்தார்.

விரைவில் புரட்சியாளர்.பழனிபாபாவின் வரலாற்றை, பல அறியப்படாத சுவாரசியமான தகவல்களோடும், அதிர்வலைகளை தோற்றுவிக்கிற அரசியல் நிகழ்வுகளோடும், வைப்போம், என்கிற உறுதியில் நிறைவு செய்கிறேன்.

தோழமையுடன்
பழனி ஷஹான்.











ஜான்பாண்டியன் உடன் சந்திப்பு - A Meet With an JOHN PANDIYAN


(ஜான்பாண்டியன் மற்றும் பழனி ஷஹான்)
JOHN PANDIYAN AND PALANI SHAHAN)

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு.ஜான் பாண்டியன் (JOHN PANDIYAN) அவர்களை, அவரது தமிழின வேந்தர் இல்லத்தில் நானும் (பழனி ஷஹான்), வழக்கறிஞர்.உமர்கயான் அவர்களும் சந்தித்துப் பேசினோம்.

பழனிபாபாவின் வாழ்க்கை வரலாற்றிற்க்கான எங்களது நீண்ட நெடிய பயணத்தின், 9-வது மாத பயணத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பில், ஜான்பாண்டியன் அவர்களின் பழனிபாபா உடனான வரலாற்றை பதிவு செய்து திரும்பினோம்.

அவர் எடுத்ததும், "சமூகப் புரட்சியாளர்" பழனிபாபா என்பவர் ஒரு சமூகப்புரட்சியாளர். என்னைப் போலவே, நான் எப்படி என் சமுதாய மக்களிடையே புரட்சியை ஏற்ப்படுத்திக் கொண்டுள்ளேனோ, அதேபோல இசுலாமிய மக்களிடையையேயும், தலித் மக்களிடையேயும் புரட்சியை ஏற்ப்படுத்தி, அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்த புரட்சியாளர்தான் பழனிபாபா என்பவர் என பெருமைபட, நாங்கள் கேள்விகளை முன்வைக்காததற்கு முன்பாகவே, அவர் இதனைத் தெரிவித்தார்.

பிறகு அவருக்கும் பழனிபாபா அவர்களுக்குமான அரசியல் ரீதியான உறவுகளையும், போராட்டக் களங்களிடையேயான தொடர்புகளையும், மேடை மற்றும் சிறை வாழ்க்கைகளையும் அவரிடமிருந்து கேட்டுப் பெற்றுக் கொண்டோம்.
காவல்துறையினரின் கண்காணிப்பு, உளவுத்துறயினரின் கண்காணிப்பு இவைகளுக்கு மத்தியிலேயே தமிழின வேந்தர் இல்லத்திற்குள் நுழைந்தோம். உள்ளே நுழைந்ததும் முகப்பில் உள்ள வரண்டாவில் அமர வைக்கப்பட்டு, தேநீர் கொடுக்கப்பட்டது. பின்னர் ஒரு அரைமணி நேர காத்திருப்பிற்குப் பிறகு, நாங்கள் மேலே அழைக்கப்பட்டு, புகைப்படத்தில் உள்ள நீண்ட அறைக்குள் சென்றோம். அங்கு ஒரு 15 நிமிடங்கள் கழிந்த நிலையில், மீண்டும் தேநீர் கொடுக்கப்பட்டது. அதன் அடுத்த சில நிமிடங்களில் ஜான் பாண்டியன் அவர்கள், இந்த அறைக்குள் வந்து, நம்மோடு கைகுலுக்கிவிட்டு உரையாட ஆரம்பித்தார். இவரைச் சந்திக்க பலர் வந்து கொண்டிருந்தபடியால் இந்த நேர தாமதங்கள் தவிர்க்க இயலாததாக் ஆகிவிட்டதை தெரிவித்துக் கொண்டு, எங்களது கேள்விகளுக்கு பதிலளித்தார். தொடர்ந்து அவரோடு அரைமணி நேரம் உரையாடிவிட்டு நாங்கள் அங்கிருந்து திரும்பினோம்.

திரு.ஜான்பாண்டியன் அவர்களுடனான சந்திப்பு, பழனிபாபாவின் வரலாற்றை ஆவணப்படுத்தும் எங்களின் முயற்சிக்கு மேலும் கூடுதல் உதவேகமாக அமைந்தது.
தோழமையுடன்
பழனி ஷஹான்



Friday, 28 November 2014

தொல்.திருமாவளவன் உடனான சந்திப்பு - A MEET WITH AN THOL.THIRUMAVALAVAN


                     
                                            புரட்சியாளர்.பழனிபாபா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக ஆவணப்படுத்தும் எமது தொடர்ச்சியான பயணத்தின் 12-வது மாதத்தின் ஒரு பகுதியாக, 23.11.2014 அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், எழுச்சித் தமிழருமான மேன்மையாளர் தொல்.திருமாவளவன் (THOL.THIRUMAVALAVAN) அவர்களைச் சந்தித்து உரையாடினேன்.
(திருமாவளவன் அவர்களுடன்)

மாலை 6:30 மணி அளவில் வேளச்சேரி அலுவலகத்திற்க்குள், நான் தோழர்கள்.ஏஜாஸ் மற்றும் தமீம் அவர்களை உடன் அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். வந்திருக்கும் விடயத்தினை தெரிவித்தவுடன், எழுச்சித் தமிழரிடம் சென்று சொல்லிவிட்டு, மேலே அழைத்துப் போய் அமர வைத்தார்கள். சில நிமிடங்கள் காத்திருப்பிற்குப் பிறகு, எழுச்சித் தமிழரின் அழைப்பு வர உள்ளே சென்றோம்.
உள்ளே சென்றதும் எங்களை வரவேற்று, அமரச் செய்து, அரை மணிநேர காத்திருப்பு செய்தமைக்கு தனது வருத்ததினைத் தெரிவித்துக் கொண்டு, பேச்சைத் தொடர்ந்தார். நான் வந்திருக்கும் விடயத்தினை விளக்கிச் சொன்னதும், அவைகளைக் கேட்டுக் கொண்டு, பழனிபாபா அவர்களுக்கும் தனக்குமான சில நினைவுகளைப் பகிர்ந்தார் எழுச்சித் தமிழர். மேலும் அன்றிரவு நள்ளிரவு இரண்டு மணிக்கு விமானத்தில் கிளம்பி, மறுநாள் கனடா செல்ல இருந்தப்படியாலும், அதற்கு முன்பாக 'தமிழ் மண்' இதழுக்கு தனது தலையங்கத்தை எழுதியாக வேண்டிய பணிச் சுமைகளில் மூழ்கியிருந்த அவர், பழனிபாபா குறித்த விரிவான கட்டுரையயும், நினைவுகளையும் தான் கைப்பட எழுதித் தருவதாக உறுதி அளித்து, தனது நேரச் சிக்கலை விளக்கினார். 
அவரின் நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்ட நான், அவருடன் சில நிமிடங்கள் மேலும் பழனிபாபா அவர்களைப் பற்றி கேட்டுவிட்டு, சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கியதற்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டு எழுந்தேன். எழுந்து நின்று கை குலுக்கிக் கொண்டு நகர்கையில், எழுச்சித் தமிழர் அவர்களாகவே அழைத்து, ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வோம் எனச் சொல்லி நிறுத்தினார். இன்னும் இரட்டிப்பகவே மகிழ்ந்து போய், புகைப்படம் எடுத்துக் கொண்டு, அங்கிருந்தும், எழுச்சித் தமிழரிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டும் நகர்ந்தோம்.

எழுச்சித் தமிழருடனான இந்த அழகிய சந்திப்பை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், எழுத்தாளருமான அண்ணன் ஆளூர்.ஷாநவாஸ் (Aloor Shanavas) அவர்கள் ஏற்ப்படுத்திக் கொடுத்தார். ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கும், இந்த சந்திப்பில் என்னோடு வந்து புகைப்பட, காணொளி எடுத்து உதவிய தோழர்கள் ஏஜாஸ் மற்றும் தமீம் அன்சாரி ஆகியோருக்கு எனது நன்றிகளையும் இதில் பகிர்ந்து கொள்கிறேன்.

தோழமையுடன்
பழனி ஷஹான்.

Thursday, 20 November 2014

மதானி உடன் சந்திப்பு - A MEET WITH AN 'ABDUL NASIR MAUDANY'



                                
                                                            புரட்சியாளர் பழனிபாபாவின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக ஆவணப்படுத்தும் எனதும், தோழர் உமர்கயானினதும் பதினோரு மாத பயணத்தின் ஒரு பகுதியாக, கடந்த 16-10-2014 அன்று பெங்களூரு மல்லிகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) தலைவரும், ஆளும் பாசிச அதிகார வர்க்கங்களுக்கு சாட்டை அடியாக, ஒடுக்கப்பட்ட மக்களின் உற்ற தோழனாக களம் கண்டுவரும், மனிதநேயப் போராளி அப்துல் நாசர் மதானி (ABDUL NASIR MADANI) அவர்களைச் சந்தித்து உரையாடினோம்.
(அப்துல் நாசர் மதானி அவர்களோடு)

கோயம்புத்தூரில் 1996-ம் வருடம் நிகழ்ந்த குண்டு வெடிப்பு வழக்கில் விசாரனைக் கைதியாக கைது செய்யப்பட்ட மதானி அவர்கள், தொடர்ந்து ஒன்பதரை ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுதலையாகி வெளி வந்தார். விடுதலையான அவர் மீண்டும் கேரள மண்ணில் தனது ஒடுக்கப்பட்டோருக்கான போராட்ட அரசியலை துணிந்து முன்னெடுத்தார். ஒன்பதரை ஆண்டுகள் சக்கையாய் பிழிந்து எடுத்தாகிவிட்டது, கட்சியின் கட்டமைப்பும் உருக்குலைத்தாகிவிட்டது, இனி எங்கு இவர் போராடப் போகிறார் என்கிற பாசிச சக்திகளின் கண்களில் மிளகாய்ப் பொடிகளைத் தூவிய மதானியை மீண்டும் ஒரு பொய் வழக்கில் விசாரனைக் கைதியாக கது செய்தனர். அது பெங்களூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்காகும்.

ஏற்க்கனவே அதிகம் உளவுத்துறையினராலும், ஏகாதியபத்தியவான்களாலும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்த மதானி, கோவை வழக்கிற்குப் பிறகு இன்னும் அதிகமாக, இருவிழி பெருக அதிகார வர்க்கங்களாலும், உளவுத்துறையினராலும் கவனிக்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தார். மேலும் அவரின் வீட்டைச் சுற்றியே காவல் துறையினரும் இருந்து கொண்டுதான் இருந்தனர். அவர் செல்லும் இடங்களில் முழுக்க முழுக்க கண்கானிப்பு வளையங்களுக்குள்தான் வைக்கப்பட்டிருந்தார். இப்படி இருந்தும் மதானி பெங்களூர் குண்டு வெடிப்பில் ஈடுபட்டார் என ஒரு கற்பனைக்கும் எட்டாத கதையைச் சொல்லி கைது செய்து பெங்களூர் சிறையில் அடைத்தது அரசு. கிட்டத்தட்ட வெறும் விசாரனைக் கைதியாகவே அவர் இந்த வழக்கிலும் ஆறு ஆண்டுகளைக் கழித்திட்ட நிலையில், தற்போது மருத்துவ சிகிச்சைக்காகப் போராடி பரோல் பெற்றுள்ளார். இந்த நிலையில்தான் நாங்கள் எங்கள் புத்தகத்திற்க்காக அவரைச் சந்தித்தோம்.

அரை மணி நேரங்கள் அவர் எங்களோடு பேசினார். பழனிபாபாவிற்கும் தனக்குமான உறவுகள், அரசியல் தொடர்புகள், சந்திப்புகள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்ட அவருக்கு, பழனிபாபாவோடு அவர் இருக்கும் அரிய புகைப்படத்தினை நாங்கள் காண்பித்து மகிழ்ச்சியை அளித்தோம். பழைய நிகழ்வுகளை அப்படியே சிறிது, சிறிதாக பகிர்ந்து கொண்ட அவர், தான் கோவை சிறையில் இருந்த ஒன்பதரை ஆண்டுகளாத்தில் பழனிபாபா இன்னும் அதிகமாக அறிந்து கொண்டதையும், கூற மறக்கவில்லை. மேலும் இந்த கோவைச் சிறையின் எதிரொலியாக இருந்தது, அவரின் தங்கு தடையின்றிய தமிழ் மொழி உரையாடல்கள். தான் கோவையில் இருந்த காலங்களில்தான் தமிழைக் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

1992-ல் பாபார் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், மதானி அவர்கள் நடத்தி வந்த ஐ.எஸ்.எஸ் (ISS) இசுலாமிய சேவக் சங் எனும் அமைப்பு அரசால் தடை விதிக்கப்பட்டது. இவர் இந்த அமைப்பு ரீதியாக இயங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் எனும் தீவிரவாத அமைப்பினரால் குண்டு வீசப்பட்டு, தாக்கப்பட்டார். இதனால் அவர் தனது ஒரு காலை இழக்க நேரிட்டது. குண்டு வீசி தனது காலினை தகர்த்தவர்களை போலீசு கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்திய போது, அப்படியான விசக் கிருமிகளைக் கூட மண்ணித்துவிட்டார் மதானி. இதுதான் மதானியின் மாந்த நேயம்.
(தோழர்.உமர்கயான் அவர்கள், மதானி அவர்களுக்கு, அவருடைய செயற்கை காலினை எடுத்து பொருத்து விடுகிறார்)


தனது இசுலாமிய சேவக் சங் அமைப்பு அரசால் தடை செய்யப்பட்டதும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரைப் போல தேசத்திற்கு ஊறு விழைவிக்காமல், அதனை அப்படியே விட்டுவிட்டு, தனது இயக்கப் பாதையை, அரசியல் சக்தியாக, கேரளத்தில் தவிர்க்க இயலாத தலைவராக உருவெடுத்தார் மதானி. மக்கள் ஜனநாயக் கட்சி (PDP - PEOPLE DEMOCRATIC PARTY) எனும் கட்சியை உருவாக்கி, இசுலாமியர்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து ஒடுக்கப்படும் மக்களுக்காகவும் களத்தில் நின்றார், மதானி. அதனால்தான் இன்று அவரின் கைதை கண்டித்து கேரள மாநில மக்கள் மட்டுமல்ல, கேரள அரசே தனது சட்டமன்றத்தில் மதானியை விடுதலை செய்யச் சொல்லி, தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது.

கேரளத்தின் மாநில முதல்வரான, திரு.உம்மன் சாண்டி அவர்கள், மதானியை சென்று மருத்துவமனையில் நலம் விசாரித்து வருகிறார். கிருத்துவ மதக் குருக்கள் சென்று மதானியை கண்டு வருகின்றனர். கேரள தலித் தலைவர்களும், தலித் மக்களும் அவருக்கு ஆதரவாக கேரளத்தில் பேரணி நடத்துகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர், தொல்.திருமாவளவன் அவர்கள் சென்று மதானியை நேரில் பார்த்துவிட்டு, அவரின் உடல்நிலையை விசாரித்துவிட்டு, விரைவில் விடுதலை அடைய வேண்டும் என்று கூறி வந்திருக்கிறார் எனில், அதுதான் போராளி.மதானியின் பண்புக்கு எடுத்துக்காட்டு.

15-10-2014 மாலை பழனியிலிருந்து கிளம்பிய நாங்கள், மெல்ல மெல்ல இடைவெளிகளை விட்டுப் பயணித்து, அதிகாலையில் பெங்களூர் நகரை அடைந்தோம். மதானி அவர்களை சந்திக்க எண்ணிக்க இதற்கு முன்னர், 26-07-2014 அன்று பெங்களூர் சென்று, அவரைச் சந்திக்க இயலாமல், திரும்பினோம். இதற்கு முன்னர், கடந்த  ஒரு வருடமாகவே அவரை சிறையில் சென்று சந்திக்க முயற்சிகளை தோழர்.உமர்கயான் மேற்க்கொண்டு வந்தார், இந்த சமயத்தில் புத்தகத்திற்க்கான சந்திப்பும் தேவைப்பட்டதால், முயற்சிகளைத் தீவிரப் படுத்தினோம். ஒருவழியாக மதானி அவர்களைச் சந்திக்க, அவரின் வழக்கறிஞர்.பாலன் அவர்களின் மூலம் தொடர்பு கிடைத்தது. இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகளின் துணைப் பொதுச் செயலாளர்.திரு. ஆளூர் ஷாநவாஸ் அவர்களையும் எங்கள் பயணத்தோடு இணைத்துக் கொண்டோம்.
ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் முன்னரே மதானி அவர்களை வைத்து ஒரு ஆவணப்படம் எடுத்திருந்த நிலையால், மதானி அவர்களுக்கு ஆளூர் அவர்கள் முன்னரே அறிமுகமானவராக இருந்தார். இருந்தாலும் இடைப்பட்ட காலங்களில் அவருக்கு மதானி குறித்த தொடர்புகள் இல்லாமல் போயிருந்தமையால், எங்களின் முயற்சியில் மூலம் மதானியின் நேரடித் தொடர்பினை எடுத்தோம். மதானி அவர்களைச் சந்திக்க செல்லவிருக்கும் தகவல்களை முன்கூட்டியே ஷாநவாஸ் அவர்களுக்கு தெரிவித்து, அவரையும் வருமாறு அழைத்திருந்தோம், இதன் அடிப்படையில் அவரும், சென்னையில் இருந்து பெங்களூர் வந்துவிட்டார்.

மதானி அவர்களின் வழக்கறிஞர்.தோழர்.பாலன் அவர்களை நாங்கள் 16-ம் தேதி காலையில் தொடர்பு கொண்டு வந்திருக்கும், செய்தியினைத் தெரிவித்தோம், அதனைக் கேட்டுக் கொண்ட அவர், மதானி அவர்களுக்கு தொடர்பு கொண்டு விடயத்தைத் தெரிவித்திருக்கிறார். சில மணித்துளிகள் கடந்த நிலையில், பாலன் அவர்கள் தொடர்பு கொண்டு மதானி அவர்களின் தொடர்பு எண்ணை எங்களிடம் தெரிவித்தார், நாங்கள் அந்த அலைபேசி எண்ணிற்கு அழைத்து மதானி அவர்களிடன் நேரடியாகப் பேசினோம். சந்திப்புக்கான நேரம் சரிவர சொல்ல இயலாலதால், அவர் மீண்டும் பதினைந்து நிமிடம் கழித்டு அழைக்க வேண்டிக் கொண்டார். இதனையடுத்து மீண்டும் அழைத்துப் பேசிய போது, அவர் காலை 11-மணிக்கு சந்திப்பிற்கு ஒப்புக் கொண்டார்.
காலை உணவு வேளைகளை முடித்துவிட்ட நாங்கள், தங்கியிருந்த பகுதியிலிருந்து, மதானி அவர்கள் இருந்த மல்லிகை மருத்துவமனைக்கு மகிழுந்தில் பயணமானோம். இதே தருணத்தில் ஷாநவாஸ் அவர்களுக்கும் தகவல் தெரிவித்தோம், அவரும் புறப்பட்டு குறிப்பிட்டு மருத்துவமனைக்கு வந்துவிடுவதாக தெரிவித்தார். நாஙகள் மருத்துவமனைக்கு முன்பாகச் சென்று காத்திருந்தோம், ஆனால் ஷாநவாஸ் அவர்கள் வந்து சேரவில்லை. ஆனால் அதற்குள் மதானி அவர்களிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்துவிட்டது, வேறுவழியின்றி நாங்கள் மட்டும் அவரைச் சந்திக்க தயாரானோம். மருத்துவமனையின் வெளியே வந்து, எங்களை அடையாளம் கண்ட மதானி அவர்களின் மகன், எங்களை உள்ளே அழைத்துப் போய்விட்டார்.

அதன் பின்னர், நாங்கள் மதானி அவர்களோடு உரையாடத் தொடங்கினோம். முதலில் அவரின் உடல்நிலைகளைப் பற்றி முழுமையாக விசாரித்துக் கொண்ட நாங்கள், பிறகு அவரின் வழக்குகள் குறித்து விசாரித்தோம். அரசின் இத்தனை அடக்குமுறைகளுக்குப் பின்னரும் கூட ஜனநாயகத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையின் வலு எங்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது.

அரசின் பொய் வழக்குகளால், வேண்டுமென்றே திட்டமிட்டு கவிழ்க்கப்படும் சூழ்ச்சிகளால் தனது இளமை முழுமையையும் இழந்து, உடல் முழுக்க நலிவைக் கண்டும் கூட அவரின் போராட்டக் குணம் மாறிடவே இல்லை. இதுபோன்ற மன உறுதி வேறு யாருக்கும் அவ்வளவு எளிதில் அமைந்துவிடாது. இந்த நாட்டில், இன்னொருவனின் உரிமையைப் பறித்து, சுத்ந்திரத்தைப் பறித்து அதன் மூலம் ஒரு போலி தேசத்தை உருவாக்கியவரெல்லாம் இரும்பு மனிதர் என்கின்றனர். ஆனால் எங்களைப் பொறுத்துவரை மதானிதான் அதற்கு சரியான ஆளாக இருக்க முடியும். அதேபோல் தமிழகத்தில் பழனிபாபாவைக் குறிப்பிட வேண்டும்.

ஒரு அரை மணிநேரம் நீண்ட எங்கள் உரையாடலில் பல விடயங்களைப் பேசினோம், மையமாக எங்களின் புத்தகத்திற்க்கான உரையாடல் இருந்தது. கேரள அரசியல் பற்றி பேசிய அவர், தமிழக அரசியல் பற்றிம் பேசினார். "ஏன் தமிழகத்தில் தலித் தலைவர்கள், இப்படி பிரிந்து நிற்க்கிறார்கள்" என்று வருத்தத்தோடு தனது ஆதங்கத்தையும் தெரிவித்தார். அதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை அதிகமாக விசாரித்துக் கொண்டார். கடந்த மக்களவைத் தேர்தலில் அவரின் தோல்வி குறித்தும் வருத்தங்களை வெளிப்படுத்தினார். (எங்களின் சந்திப்பிற்குப் பிறகுதான் திருமாவளவன் அவர்கள், மதானியைச் சந்தித்தார்). இறுதியாக நாங்கள் விடைபெறும் போது, புரட்சியாளர்.பழனிபாபாவின் 'வாழ்வும்-போராட்டமும்' புத்தகத்திற்க்கான மதானி அவர்களின் வாழ்த்துரையினைக் கேட்டோம், அதற்கு அவர் மறுப்புகளற்று, நிச்சயமாக எங்கிருந்தபோதும் (சிறையிலிருந்தாலும் கூட) நான் வாழ்த்துரை அளிப்பேன் என உறுதிபடத் தெரிவித்தார்.

மதானி அவர்களின் பொன்னான சந்திப்பினை, உயர்வான கலந்துரையாடல்களை முடித்துவிட்டு வெளிவந்து தேநீர் அருந்தச் சென்றோம். அப்போதும் ஷாநவாஸ் அவர்கள் வந்து சேரவில்லை. அலைபேசியில் பலமுறை முயற்ச்சித்தும் அவர் இணைப்பில் கிடைக்கவில்லை. ஒரு அரை மணி நேரம் கழிந்த நிலையில் அவரின் அழைப்பு வந்தது, அதில் அவர் அருகே வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். சரி, என நாங்கள் இன்னும் காத்து நின்றோம், இறுதியாக மதானி அவர்களைச் சந்தித்துவிட்டு நாங்கள் வெளியேறிய ஒரு மணி நேரங்கள் கழித்து அவர் அங்கு வந்தார்.

இருசக்கர வாகனத்தில் வந்ததாலும், முகவரி சரியாக புலப்படாததினாலும், வாகன இடைஞ்சல்களாலும் இவ்வளவும் தாமதம் ஆகிவிட்டதினைத் தெரிவித்துக் கொண்டார். பின்னர் நாங்கள் அவரோடு சிறிது நேரம் பேசிவிட்டு, மதானி மாலை வேளையில் தங்களைச் சந்திப்பதாகச் சொன்னார் எனத் தெரிவித்தோம். எங்களிடமிருந்து அவர் மதானி அவர்களின் அலைபேசி எண்ணைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். ஆளூர் ஷாநவாஸ் அவர்களோடு சென்று மதானி அவர்களைச் சந்திக்க வேண்டும் என்கிற எங்களின் திட்டம் நிறைவேறவில்லை. இந்தச் சந்திப்பிற்க்காகவே சென்னையில் இருந்து எங்களின் அழைப்பின் பேரில் வந்திருந்த அவருக்கு, தவிர்க்க இயலாத காரணங்களால், நேரத்திற்கு வந்து சேர இயலாமல் போனது வருத்தமாய்த்தான் இருந்தது. அதற்க்காகவே, அவர் வருகைக்காக காத்திருந்து அவரிடம் தெரிவித்துவிட்டு நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்.

இதன் பின்னர், மாலை 4-மணியளவில் மதானியைச் சந்திக்க தனது குடும்பத்தோடு சென்ற ஆளூர் ஷாநவாஸ் அவர்கள், மதானி அவர்களோடு பேசிவிட்டு வெளியே வந்ததும், எங்களுக்கு தொடர்பு கொண்டு மகிழ்வாய் பேசினார். ஏற்க்கனவே ;கைதியின் கதை' என்கிற மதானி குறித்தான ஆவணப்படத்டை எடுத்தவர் என்கிற ரீதியிலும், 'அப்துல் நாசர் மதானி -அதிகாரத்தின் இரை' என்கிற தலைப்பில் சமநிலைச் சமூதாயத்தில் கட்டுரை எழுதியிருந்தமையாலும், விடுதலைச் சிறுத்தைகளின் துணைப் பொதுச் செயலாளருமாக உள்ள நிலையால் மதானி அவர்களும் ஷாநவாஸ் அவர்கள் நன்கு பழக்கப்படுப் போன ஒருவர்தான். நானும், ஷாநவாஸ் அவர்களும் ஒன்றாக இருக்கும் ஒரு புகைப்படத்தினை ய்தேர்ச்சையாக மதானி அவர்கள், சட்டென இது ஷாநவாஸ்தானே என கேட்டார். இதேபோல தோழர்.உமர்கயான் அவர்கள், பவானி.பா.மோகன் அவர்களின் வழக்கறிஞர் குழுமத்திலுள்ள வழக்கறிஞர் என்பதால், அவரும் மதானிக்கு அறிமுகமானவராகத்தான் இருந்தார். எளியவன் நானே மதானி அவர்களுக்கு சற்றும் அறிமுகமில்லாதவனாக இருந்திருந்தேன்.
             (ஆளூர் ஷாநவாஸ் மற்றும் சமநிலைச் சமுதாயம்                                                பத்திரிக்கையின் ஆசிரியர் ஜாபர் பாக்கவி அவர்களுடன் நான்)

மதானி அவர்களைச் சந்தித்துவிட்டு, வெளியே வந்ததும் அண்ணன்.ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் எனக்கு அழைத்துப் பேசிய போது, மதானி அவர்கள் என்னைக் குறித்து விசாரித்ததினையும், பாராட்டியதையும் தெரிவித்தார். மேலும் சிறுவயதில் ஆளூர் அவர்களைப் பார்த்ததைப் போலவே நான் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது எனக்குள் நீங்காத மகிழ்வை இன்னும் தந்து கொண்டேதான் உள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, மதானி அவர்களின் உரையாடல்களை நாங்கள் முழுமையாக காணொளியாகப் பதிவு செய்தோம். இதேபோக ஆளூர் அவர்களும் மதானி அவர்களுடனான பேட்டியினை முழுமையாக ஆவணப்படுத்திவிட்டு வந்தார். நாங்கள் ஊர் திரும்பிய மறுநாள், நான் ஆளூர் அவர்களுக்கு அழைத்துக் கேட்க்கையில் அவர் இன்னும் பெங்களூரில்தான் இருப்பதாகச் சொன்னார். மேலதிகமாக, ஜீனியர் விகடனிலிருந்து (பத்திரிக்கை) வருவதாக, அவரிடம் அழைத்துப் பேசியுள்ளனர். அவர் அங்கு சென்றிருப்பதினை அறிந்து கொண்ட ஜீனியர் விகடன் நிருபர், உடனே அவரைத் தொடர்பு கொண்டு, மதானியை சந்திக்க வேண்டிய்ள்ளார். அதுசமயம் ஆளூர் அவர்களும் அவர்களுக்காக ஒருநாள் சேர்த்து இருந்துவிட்டுத் திரும்பியிருக்கிறார். மதானி அவர்கள் சிறைவாசி என்பதால் அவர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்க இயலாது. இதனால் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் எடுத்திருந்து தனிப்பட்ட பேட்டியினை அப்படியே தொகுத்து கேட்டுள்ளது ஜீனியர் விகடன். 09-11-2014 அன்று பிரசுரமாகிய ஜீனியர் விகடனில், மதானி பற்றிய ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் பேட்ட்டி வெளியாகியிருந்தது. இதன் தாக்கமே தற்போது மதானி அவர்களின் வழக்கை 4-மாதங்களுக்குள் விரைந்து முடிக்கவும், வழக்கு முடியும் வரை அவர் மருத்துவமனையிலேயே இருக்கவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட வழி வகுத்துள்ளது என்கிற இன்னும் கூடுதல் மகிழ்ச்சிதான்.

விரைவில் புரட்சியாளர் பழனிபாபா, அவர்களின் வரலாற்று நூல், புரட்சியாளர்.மதானி அவர்களின் வாழ்த்துரையோடு வெளிவரும்.

தோழமையுடன்
பழனி ஷஹான்