புரட்சியாளர்.பழனிபாபா அவர்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் பயணத்தில், தமிழ்தேசிய தளத்தில் பரவலாக செயல்பட்டுவரும், மூத்த அரசியல்வாதி அய்யா பழ.நெடுமாறன் (NEDUMARAN.PALA) அவர்களை கோவையில் சந்தித்தேன்.
(பழ.நெடுமாறன் அவர்களுடன் பழனி ஷஹான்)
PALANI SHAHAN WITH AN PALA.NEDUMARAN)
கடந்த ஆகஸ்ட் மாதம், 11-ம் தேதி, கோயம்புத்தூரில் அய்யா நெடுமாறன் அவர்களைச் சந்தித்து உரையாடினேன். பழனிபாபாவிற்கும் அவருக்குமான தொடர்புகள், சிறை சந்திப்புகள், மேடை அனுபவங்கள், இவைகளைத் தாண்டி தமிழீழ மற்றும் விடுதலைப் புலிகளுடனும் அதன் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களுடன் பழனிபாபாவிற்கு இருந்த தொடர்பும் என, பல விடயங்களைக் கேட்டுத் தொடர்ந்தேன்.
இவை தவிர, பழனிபாபா குறித்தான கட்டுரையையு, மேலும் பல கேள்விகளையும் முன்வைத்து அவருக்கு ஒரு கடிதம், (அவரே அனுப்பக் கேட்டு கொண்டபடியால்) அனுப்பி, பதில்களைப் பெற்றேன். விரைவில் வெளிவர இருக்கும் பழனிபாபாவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில், பல எதிர்பாரத அரசியல் அதிர்வலைகள் தவிர்க்க இயலாதது என்பதனை மட்டும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.
தோழமையுடன்
பழனி ஷஹான்.

No comments:
Post a Comment