Sunday, 30 November 2014

ஜான்பாண்டியன் உடன் சந்திப்பு - A Meet With an JOHN PANDIYAN


(ஜான்பாண்டியன் மற்றும் பழனி ஷஹான்)
JOHN PANDIYAN AND PALANI SHAHAN)

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு.ஜான் பாண்டியன் (JOHN PANDIYAN) அவர்களை, அவரது தமிழின வேந்தர் இல்லத்தில் நானும் (பழனி ஷஹான்), வழக்கறிஞர்.உமர்கயான் அவர்களும் சந்தித்துப் பேசினோம்.

பழனிபாபாவின் வாழ்க்கை வரலாற்றிற்க்கான எங்களது நீண்ட நெடிய பயணத்தின், 9-வது மாத பயணத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பில், ஜான்பாண்டியன் அவர்களின் பழனிபாபா உடனான வரலாற்றை பதிவு செய்து திரும்பினோம்.

அவர் எடுத்ததும், "சமூகப் புரட்சியாளர்" பழனிபாபா என்பவர் ஒரு சமூகப்புரட்சியாளர். என்னைப் போலவே, நான் எப்படி என் சமுதாய மக்களிடையே புரட்சியை ஏற்ப்படுத்திக் கொண்டுள்ளேனோ, அதேபோல இசுலாமிய மக்களிடையையேயும், தலித் மக்களிடையேயும் புரட்சியை ஏற்ப்படுத்தி, அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்த புரட்சியாளர்தான் பழனிபாபா என்பவர் என பெருமைபட, நாங்கள் கேள்விகளை முன்வைக்காததற்கு முன்பாகவே, அவர் இதனைத் தெரிவித்தார்.

பிறகு அவருக்கும் பழனிபாபா அவர்களுக்குமான அரசியல் ரீதியான உறவுகளையும், போராட்டக் களங்களிடையேயான தொடர்புகளையும், மேடை மற்றும் சிறை வாழ்க்கைகளையும் அவரிடமிருந்து கேட்டுப் பெற்றுக் கொண்டோம்.
காவல்துறையினரின் கண்காணிப்பு, உளவுத்துறயினரின் கண்காணிப்பு இவைகளுக்கு மத்தியிலேயே தமிழின வேந்தர் இல்லத்திற்குள் நுழைந்தோம். உள்ளே நுழைந்ததும் முகப்பில் உள்ள வரண்டாவில் அமர வைக்கப்பட்டு, தேநீர் கொடுக்கப்பட்டது. பின்னர் ஒரு அரைமணி நேர காத்திருப்பிற்குப் பிறகு, நாங்கள் மேலே அழைக்கப்பட்டு, புகைப்படத்தில் உள்ள நீண்ட அறைக்குள் சென்றோம். அங்கு ஒரு 15 நிமிடங்கள் கழிந்த நிலையில், மீண்டும் தேநீர் கொடுக்கப்பட்டது. அதன் அடுத்த சில நிமிடங்களில் ஜான் பாண்டியன் அவர்கள், இந்த அறைக்குள் வந்து, நம்மோடு கைகுலுக்கிவிட்டு உரையாட ஆரம்பித்தார். இவரைச் சந்திக்க பலர் வந்து கொண்டிருந்தபடியால் இந்த நேர தாமதங்கள் தவிர்க்க இயலாததாக் ஆகிவிட்டதை தெரிவித்துக் கொண்டு, எங்களது கேள்விகளுக்கு பதிலளித்தார். தொடர்ந்து அவரோடு அரைமணி நேரம் உரையாடிவிட்டு நாங்கள் அங்கிருந்து திரும்பினோம்.

திரு.ஜான்பாண்டியன் அவர்களுடனான சந்திப்பு, பழனிபாபாவின் வரலாற்றை ஆவணப்படுத்தும் எங்களின் முயற்சிக்கு மேலும் கூடுதல் உதவேகமாக அமைந்தது.
தோழமையுடன்
பழனி ஷஹான்



No comments:

Post a Comment