Tuesday, 10 December 2013

கால்கள் பின்னோக்குகின்ற பொழுது



கால்கள் பின்னோக்குகின்ற பொழுது
ஆத்மாவில் ஆழியின் சப்தம்
இடைவிடாது ஒலிக்கின்றது!
இட மார்பில் துளை உண்டாகி
ஏதோ கசிகின்றது!
நிசப்தமான சூழலிலும்
ஒருவித கூச்சல்
கதிரவனும் கருப்பாய்த் தெரிகின்றது!

கால்கள் பின்னோக்குகின்ற பொழுது
கடந்து வந்த யாவும்
எதிர்ப்புகள் நிரம்பிய பாதைகளாய் தென்படுகின்றன!
கழிவுகள் தேங்கிய, காயங்கள் நிரம்பிய
குழிகள் அடர்ந்த பாதைகளாகவே தென்படுகின்றன!

கால்கள் பின்னோக்குகின்ற பொழுது,
ஆதரவிற்கான குரல்கள் தோன்றி,
அறிவுரை போதனைகள் சொல்லி,
அறிவிழியென வலுக்கட்டாயமாக கூற வைக்கின்றன!

கால்கள் பின்னோக்குகின்ற பொழுது,
காரியசித்தி, சுயநலக்காரன் என்று
நம்மை சடைந்து கொள்கின்றன!
புது உலகம் வரவேற்கா விட்டாலும்
பழைய உலகம் தூற்றுகிறது!
தூற்றிவிட்டு போகட்டும்
நாளை என் புகழ் பாடும் பெரு மழை!

நன்றி: மாற்று (maattru.com)இணையதளம்:
http://maattru.com/கால்கள்-பின்னோக்குகின்ற/#more-3413

-பழனி ஷஹான்

மதம் மாற்றப்பட்ட மசூதி!



அயோத்திய மண்ணில் அசுரக் கொடி
திசம்பர் ஆறில் ஏற்றிய நெறி
இந்திய இறையாண்மையை முறித்து
பூணூல் பொசுக்கிய புனிதத்தல ஒழிப்பு!

இத்தேசத்தின் இறையாண்மை இதயத்திலிருந்து
காவிக் கரங்களால் சிகப்பு நீர் சிதறியதே
மனித இறையொன்று தோற்றுவிக்கப்பட்டதனால்!

வேற்றுமையில் ஒற்றுமையே
வேதமெனப் பாடும் நாட்டிலே
மதம் மாற்றப்பட்டதே மசூதியொன்று!

உடல் உறுப்பில் சிறு சதை சிதைந்து
ஊனமுற்றுத் துடிக்கின்றது எந்நாடு
அதை வெற்றியெனக் கொண்டாடுகிறது
நாடற்ற நாடோடிக் கூட்டமொன்று!

வருடம் பிறந்தாலன்றி விழி நோக்குவதில்லை
விசும்பி அழும் மசூதியின் உறவுகள்!

வீதியில் நின்று இழப்பு ஓலமிடுவதினால்
விடியல் கிடைத்திடுமோ குருடர்களே?

விதியென்று தலையிலடித்துக் கொண்டாய்
நீதி மரித்திடாதென அம்மன்றம் ஏறியும் நின்றாய்!

கைகளில் கடப்பாரை தாங்கிய கயவர்களின்
மாறுவேடமே சுத்தியல் தாங்கியவரென்று உணர்ந்தாய்!

ஆட்சித் தலைமை முதல், தாசன் வரை
தன் சீடர்கள் பரப்பி – உன் குரலை
குருதிகளற்றதாய் நசுக்குமவன் திறனை
இசுலாமியனே நீ இன்றும் அறிந்தபாடில்லை!

கயமத்தால் கருவறுக்கப்பட்ட மசூதியின் இறப்பு
கருப்பு நாளென்று ஒரு சாயலில் கொள்ளும் வேளையிலே
அது காவிகளின் நாள் என்பதனையும்
மறந்திடாதே! மனிதமுள்ள மனிதச் சமூகமே!

கருப்பு நாளை வெண்மையாய் படரச் செய்து
காவிகளுக்கு அந்நாளை கசப்பாக்கிட
கட்டி எழுப்புவோம் மசூதியினையும்
மிதிப்புகளைத் தடுத்து குடிசைகளையும்!

ஓ காவிவாதிகளே! நீங்கள் கொண்டிருக்கும்
திரிசூலம் உங்களையே ஓர் நாள் அழிக்கும்
அதன் மும்முனைகளும் முச்சமூக
இணைப்பாய் மாறி வெகுவிரைவினிலே!

மூச்சியிழந்து துடிக்கும் அயோத்தி நிலத்தில்
பாபர் மீண்டும் பிறப்பான்
இராமரே அதனை ஏற்பான்!

இந்தியம் அன்று ஒலிக்கும் அங்கு
உன் ஹிந்தியம் மரித்து மசூதி பிறந்ததென்று!
- பழனி ஷஹான்
நன்றி: இந்நேரம்.காம் (inneram.com) இணையதளம்:
http://www.inneram.com/inneram-specials/literature/3775-converted-the-masjid.html



தன்மானத்தின் பலிகடா-சாரா (சிறுகதை)


                 

செம்மேகங்கள் சூழ்ந்த மாலைப்பொழுதில், கோவை நகரின் பிரதானச் பூங்கா ஒன்றில், மனிதர்கள் யாரும் இல்லாது வனம் போன்று சூழ்ந்திருக்கும் புங்கை மரத்தின் நிழலில், தத்தம் முதுகுகளை இணைத்தவாறு எதிர் எதிரே அமர்ந்திருந்தது அந்த இளம் ஜோடி.
கல்யானத்துக்குப் பின்னாடி நாம எங்கேயாதும் போயிடலாம். ஒரே ஒரு குழந்தை போதும், நமக்கினு சின்னதா ஒரு வீடு, நல்ல ஒரு ஜாப்ல ஜாயின் பண்ணிடு சீக்கிரம், அமைதியா, அன்பா நாம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும் சரியா, என்ன சொல்ற குமார், என்றாள் ஜில்ஃபிகா.
எல்லாவற்றிற்கும் தலையை அசைத்தவாறே பதில் கூறிய குமார். தன் மனதிற்க்குள் இப்படியும் நினைத்துக் கொண்டான், ‘எத்தனை பேரத்தான் சமாளிக்கறது, உம்ம்ம்ம் ஓடிப் போலாம்ங்கறா, கல்யாணம்ங்கறா, குழைந்தங்கறா, சரி சரி கேட்டதெல்லாம் கொடுப்போம், ஆடு தானா வந்து தலைய நீட்டுது’ என்றபடி
*****************************************
                      கூட்டாக பன்னிரண்டு புறாக்கள் இரையை மேய்ந்து கொண்டிருக்க, அவைகளுக்கு தானியங்களை தூவிக் கொண்டிருந்தாள் சாரா. ‘யூ கேவ் ஏ டெக்ஸ்ட் மெஸேஜ்’ என்றபடி ஒரு பெண்ணின் குரல் கேட்ட சாரா, தன்னுடைய கைப்பேசியை எடுத்து பார்த்தாள். அதில் ‘சேஃப்டியா வீட்டுக்கு போயிட்டயா’ என்று ஷாஜன் அனுப்பியிருந்த குறுந்தகவல் பளிச்சிட்டது.
உம் யெஸ், ஆர் யூ? என்றூ சார பதில் அனுப்பினாள்.
மீ டூ என்று வந்தது ஷாஜனின் பக்கமிருந்து.
ஷாஜன், சாரா இருவரும் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் நபர்களாவர். ஒரு வருடமாக இருவருக்கிடையில் காதல் மலர்ந்துள்ளது. வீட்டாரும் சரி சொல்லியாகிவிட்டது, அவரவர் பிள்ளைகளிடம் மட்டும். இரு வீட்டாரின் கலந்து கொள்ளல் இன்னும் நடந்தேறவில்லை. இரண்டு மாதங்களில் சார வீட்டாரிடம் பேசுவதாக ஷாஜனுடைய வாபா, ரஹீம் கூறி வைத்துள்ளார்.
இருவரின் காதலுக்கும் பெரிய எதிர்ப்புகள் இல்லை. தனது சமுதாயத்தில் கல்லூரி பயின்று, பணியில் சேர்வது சாராவே முதல் தலைமுறை. ஆரம்பத்தில் சாராவின் அம்மா ஆமினாள் தனது ஆளுமை குணத்தால், சாராவை கட்டுப்படுத்தியே வந்தாளும், பிற்பாடு அவர் அனைத்தையும் விலக்கிக் கொண்டு சம்மதம் கூறிவிட்டார், சாரவின் காதலுக்கு.
புறாக்கள் கூண்டுக்குள் சென்று கதவுகளை மூடிக் கொண்டன. சாரா மஃரிபுடைய தொழுகைக்கு பாங்கின் ஒலி கேட்டதும், ஷாஜனுக்கு காதல் வசத்தால் அழுத்தமான முத்தத்தை குறுந்தகவல் வழியாகவே அனுப்பி விட்டு, கை, கால்களை சுத்தம் செய்ய உலூ செய்து விட்டு, தொழுகையில் ஈடுபட்டால்.
இருவரும் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்தாலும், அவர்களால் சரிவர பேசிக் கொள்வது இயலாத ஒன்றே. ஆகவே, சாரா இப்படி மாலை நேரத்தில், அசர் தொழுகைக்கும், மஃரீப் தொழுகைக்கும் இடைப்பட்ட நேரத்தில் பறவைகளை மேய்த்துக் கொண்டும், பூச் செடிகளை பராமரித்துக் கொண்டும், ஷாஜனுடன் பேசிக் கொண்டிருப்பாள், வரம்புகளுக்குட்பட்ட வார்த்தகளை மட்டும்.
***************************
          முடியாதும்மா… நீங்க சொல்றது எல்லாத்துக்கும் என்னால தலையாட்ட முடியாது. நான் படிச்சவ.., என் டேஸ்ட் வேற. எனக்கும் நல்லது, கெட்டது எதுன்னு நல்லாவே தெரியும் சரியா? குமாரத்தான் எனக்குப் புடிச்சுருக்கு நான் அவனைத்தான் கல்யானம் பண்ணிப்பேன்…! என்றாள் ஜில்ஃபிகா.
ருக்கையா அதைவிட ஆவேசமாக, ‘உன்னை பெத்தவ நான், நீ எனக்கு கட்டுப்பட்டுத்தாண்டி இருக்கணும், என்ன படிச்சு என்னடி? இப்புடி கண்டவங்கூட சுத்ற மூதேவி…மூதேவி. இங்க பாருடி, இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு, ஒழுங்கா உன் மனச மாத்திக்கிட்டு, கல்யாணப் பொண்ணு மாதிரி நடந்துக்கோ. சொந்தக்காரங்களா வரப் போக இருப்பாங்க, எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது ஆமா’ என்று கூறி ஜில்பிகாவை ஒரு பார்வை பார்த்தாள்.
அதெல்லாம் முடியாதும்மா, இப்படி கம்பெல் பண்ணனீங்கனா நான் அவன்கூட ஓடிப் போயிடுவேன் சொல்லிட்டேன்….!
ப்பளார்…..ப்பளார் என ஜில்ஃபியாவின் கண்ணம் சிவந்தத்து, ருக்கையாவின் கை பலத்தால்.
இன்னும் நல்லா அடி, ஆனா நான் ஒத்துக்க மாட்டேன் என்று தேம்பியவளாக, அகங்காரத்தோடு முனு முனுத்தாள் ஜில்ஃபிகா.
*******************************
         என்னம்மா ரெண்டு நாளுல கல்யாணம், இவ ஏன் இப்படி இருக்கா என்றால் ஆமினா தன் தங்கை ருக்கையாவிடம்.
உம்ம்ம்ம்ம் என்னத்த சொல்ல, எருமை அந்த நினைப்புலயே இருக்கறா, எங்க போற சைத்தானோ என் வயித்துல வந்து பொறந்திருச்சு. வர்ர்ர்ர ஆத்திரத்துக்கு, இவள அப்படியே கழுத்த நெரிச்சு சாகடிக்கலாம் போல இருக்குதுக்கா எனக்கு, என்றாள் ருக்கையா.
விடு, விடு அதெல்லாம் புரிஞ்சுப்பா என் புள்ள, நீ போயி உன் வேலைய பாரு ருக்கையா சரியா.. போ…போ.
என்னம்மா ஜீல்ஃபி, நம்ம குடும்பம் என்ன? அவிங்க குடும்பம் என்ன? ஒரு தராதரம் வேணாமா சொல்லுடா? நீ படிச்சவ இப்படி பண்றது சரியாடாமா சொல்லு?
என் மவ சாராவும்தான் மனசுக்கு புடிச்சிருக்கு ஷாஜன் கூட நிக்காஹ் பண்ணித் தருவீங்களானு கேட்டா, நாங்களும் சரினு சொன்னோம். எதனால? அந்தப் பையன் நல்லவன், குடும்பம் அந்தஸ்த்துள்ள குடும்பம், முக்கியமா நம்ம ஆளுக அதனாலதான்.
ஆனா நீ லவ் பண்றவன், குடிச்சுட்டு ரோட்டுல பொறுக்கித்தனம் பண்றவன். அவன் எப்படி நம்ம குடும்பத்துக்கு லாயிக்காவான்?
இங்க பாருமா ஜீல்ஃபி, அனீஸ் நல்ல பையன், நிறைய சம்பாதிக்கிற இன்ஜினியர், அவன் குடும்பம் கெளவரவமானது. இதெல்லாம் வேணாம்னு ஒதுக்கிட்டு, உன் தலைல நீயே மண்ணை வாரி போட்டுக்காதடா, உம் புரிஞ்சதா…என்றபடி கூறிய ஆமினா, ஜீல்ஃபிகாவின் தலையை நிமிர்த்தினாள்.
ஜீல்ஃபியின் கண்களில் ஒருவித ஏக்கமும், தேக்கமும் தென்பட கண்னீர் வழிந்தோடியது.
அவளது கண்ணீரை துடைத்துவிட்டு, மெல்ல சாய்த்து படுக்க வைத்து, போர்வையை போர்த்திவிட்டு, அங்கிருந்து விலகி வெளியேறினாள் ஆமினா.
**********************************
அன்று ஞாயிற்றுக் கிழமை….
   ஃபஜ்ர் அதிகாலை தொழுகையில் சந்தித்துக் கொண்ட ஷாஜனும், அனீஸும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி முஸாபா செய்து கொண்டனர். பின் அனீஸுடைய கைகளை இறுகப்பற்றி, தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தான் ஷாஜன். பின்னர் சற்று நிமிடங்களுக்கு அப்பால், அனீஸ் பள்ளிவாசல் ஹஜ்ரத்திடம் வாழ்த்தும், ஆசியும் வாங்கிக் கொண்டு மசூதியை விட்டு வெளியேறினான்.
வீட்டில் அவனுக்காக அரைமணி நேரம் பார்பர் காத்துக் கொண்டிருந்தார், அனீஸிற்கு களை முடிகளை களைய.
*************************
        இப்படி நடந்திருச்சே…! எங்க வாப்பா மொகைதீன் இராவுத்தருனா எவ்வளவு மதிப்பு, மரியாத. இப்போ எல்லாம் போச்சே, இந்த சிறுக்கியால….என்று குமுறினார் முஜிபுல்லா.
அவ செத்துத் தொலைஞ்சிருந்தாலும் நிம்மதியா இருக்கும், இப்படி ஊதாரிப் பயலோட ஓடிட்டாளே சனியேன், சனியேன்! நல்ல இடம். ஐயோ, வி.கே.வகையறான்னா சும்மாவா? நம்ம குடும்பத்தோட உறவு வச்சுக்கணும்னு ஆசைப்பட்டு சம்பந்தம் கேட்டவங்கள்ட்ட இப்ப என்னனு சொல்ல. பாவி மவ இத ஆரம்பத்திலயே செஞ்சிருந்தா, கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்திருக்க மாட்டோமே, குடும்ப கெளரவமே குழி தோண்டி புதைச்சுட்டாளே பாவி, பாவி… என்றாள் ருக்கையா ஒப்பாரி வைத்து……..!
முஜீபுல்லா, ருக்கையா வீடு முழுக்க, கல்யாண வாசம் வீச, இவர்கள் இருவர் மட்டும் கருமாரி வீட்டினராய் மாறிவிட்டனர்.
************************************
விசயம் மெல்ல பரவியது, நேரம் சென்றது…..!
முஜிபுல்லாவும், சதக்கத்துல்லாவும் கூடி பேசிக்கொண்டு விட்டு, அவசர, அவசரமாக வீட்டிலிருந்தும் வெளியேறுகின்றனர்.
காரில் இருவரும் உட்கார்ந்த வன்ணம், அவரது மனைவிமார்களான, ருக்கையாவையும், ஆமினாவையும் கூப்பிட்டு, சன்னக் குரலில் ஏதோ கூறிவிட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும், வீட்டிற்க்குள் வேக வேகமாகச் சென்றனர்.
அனீஸுடைய வீட்டில், சதகத்துல்லாவும், முஜீபுல்லாவும் உட்கார்ந்திருக்க, அவர்களுக்கு எதிராக ஷம்சுதீனும், அனீஸின் தாய் மாமன் ஹபீபும் இருந்தனர்.
எங்க நிலைம இதுதானுங்க, தப்பு எங்க மேலதான். இருந்தாலும் இவ்வளவு கூடி வந்ததுக்கப்புறம், சம்மந்தம் விட்டுப் போச்சுனா குடும்ப கெளரவம் என்னாகுறதுங்க? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க என்றார் முஜீபுல்லா.
எல்லாம் சரிதாங்க, உங்க வகையறாவும், எங்க வகையறாவும் சம்மந்தம் வச்சுக்கணும்ங்கரது எங்க அத்தாவோட ஆசை. அதான் நாங்க உங்க வீட்ல பொண்ணு கேட்டோம், ஆனா இப்போ இப்படியான நிலைமைல என்ன சொல்றதுன்னு தெரியலைங்க…. என்றார் அனீஸின் அத்தா ஷம்சுதீன்.
நால்வரும் மாற்றி, மாற்றி பேசினர். இடையில் அனீஸும் அழைக்கப்பட்டான். அவனோ, அவர்களின் சம்மதம் எனக் கூறி நகர்ந்தான்.
*************************
        காலை மணி, பதினொன்றை, மசூதியில் மணகனாக அனீஸ், மதகுருமார் ஹஜ்ரத்டின் எதிரே அமர்ந்திருக்க, இவர்களைச் சுற்றிலும் சுற்றங்கள் சூழ்ந்திருந்தது.
‘அவ்வல் கலிமா, இலாயிலாஹா இல்லல்லாஹீ’ என்று ஹஜ்ரத் சொல்ல, சொல்ல அனீஸ் சொல்லிக் கொண்டே வந்தான். பிறகு, சதக்கத்துல்லாவிடமும், ஷம்சுதீனிடமும், எதையோ கேட்ட ஹஜ்ரத், அதனியே அனீஸிடமும் கேட்க, மாப்பிள்ளை உம்ம்ம் என தலையசைத்தார்.
ஒரு பெரிய புத்தகத்தில் ஹஜ்ரத் அனீஸிடம் கையெழுத்து வாங்கிடவே, பின் அந்தப் புத்தகம் அருகிலுள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சிரிப்பொலிகளும், கீச்கிச்சென்ற குரல்களுக்கும் மத்தியில், பல பெண்கள் சூழ தங்க ஜரிகைத் துப்பட்டா போர்த்தி, முகத்தை கீழே சாய்த்து, மனதுற்க்குள் வெந்நீர் பாய்ச்சியவளாக அமர்ந்திருந்த சாராவிடம் அந்த புத்தகம் கொடுக்கப்பட்டது.
அதில், ஷம்சுதீன் மன் அனீஸ் தன்னை மணமுடிக்க விருப்பம் தெரிவித்து, தகுந்த சாட்சிகளின் முன்னிலையிலும், ஜமாத்தார்கள் முன்னிலையிலும் கையொப்பம் இடப்பட்டிருந்தது. சாரா இவைகளையெல்லாம் படிக்கவில்லை, அவளது சித்தி ருக்கையா காட்டிய இடத்தில், வேகமாக கையெழுத்திட்டாள்.
திருமண மண்டபத்தில் மதிய உணவு விருந்து நடந்து கொண்டிருந்தது. மணமகன் அனீஸ் தனது சக நண்பர்களுடன் அமர்ந்திருந்தான். ஷாஜன் மட்டும் காணவில்லை. அனீஸ், ஷாஜன் இருவரும் தோழர்கள். ஆனாலும், அனிஸிற்கு தெரியாது அவனது மனைவி சாரா, ஷாஜனுடைய காதலி என்பது.
***********************************
          எப்படியோ சம்பந்தி எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. உங்க தம்பி பொண்ணா இருந்தா என்ன/ உங்க பொண்னா இருந்தா என்ன? எனக்கு உங்க வகையறால சம்பந்தம் உண்டாயிருச்சு, அதுவே போதும் என்றார் ஷம்சுதீன்.
ஒருவித மனக்கலக்கத்தோடு, அலட்டுச் சிரிப்பை உதிர்த்து, தலையை ஆட்டினார் சதக்கத்துல்லா.
எம் மக, நா சொன்னா கேட்பானு தெரியும். அவளுக்கு சொர்க்கம், நரகம்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்கேன், அதான் இப்போ நம்ம மானத்த காப்பாத்திருக்கா என்றாள் ஆமினா ருக்கையாவிடம்.
பாவம், எவ்வளோ துடிக்குதோ என் மவ மனசு. நம்ம குடும்ப கெளரவம் அது இதுனு, ஏதேதோ சொல்லி அவள இப்புடி, வற்புறுத்தி உட்கார வச்சுட்டீயேக்கா? சாராவோட வேதனைக்கு நாமெல்லாமே பதில் சொல்லியே ஆகணும். அந்த சண்டாளி முண்டையால, எம் புள்ள சாரா வேகறாலே, ஐய்யோ என குமுறி, குமுறி அழுதாள் ருக்கையா.
சாராவின் கண்களில் இருந்து விழுந்த ஒரு துளி கண்ணீர், அவளது கைகளில் கொடுக்கப்பட்டுள்ள, பூச்செண்டின் ரோஜா மலர் மீது வழிந்தோடியது.
மேகங்கள் யாவும் ஒன்றிணைந்து நடத்திய இரங்கல் கூட்டத்தால், திருமண மண்டபம் சுற்றி வைக்கப்பட்டிருந்த வாழ்த்துத் தட்டிகள் யாவும் துவண்டு போயின. இந்த தட்டிகளே ஷாஜனை மண்டபத்தின் உள்நுழையாமல் வெளியேற வைத்தது.
நண்பகல் பொழுது, இருள் சூழ்ந்து காட்சியளித்தது.

-பழனி ஷஹான்

நன்றி: மாற்று (maattru.com) இணையதளம்:
http://maattru.com/honor-killing-of-hearts/#more-3357





















வாழ்விழந்தும் விருந்து(சிறுகதை)



மேடும், பள்ளமுமாக, வளைந்து நெளிந்து சரிவாய் காட்சியளிக்கும், தேயிலை தோட்டத்தை ஒட்டியதாகக் காணப்படும், கோத்தகிரியில் உள்ள பல்கீஸ் பாத்திமாவுடைய பங்களா வீடு.
சூரிய வெளிச்சம் நன்கு பளிச்சிடுகிறது, ஆனாலும் குளிர் உடலை குத்தித் துளையிடும் நவம்பர் மாதம் அது. பங்களா வீட்டின் முன்பிருந்து இரண்டு குவாலீஸ் கார்கள் புறப்பட்டன. கடினமான மேட்டை ஏறி வென்றிட்ட கார்கள், தார் சாலையினை அடைந்தது. பின்னர் மெதுவாய் மலையிலிருந்து இறங்கி, திருப்பூர் நகருக்குள் நுழைந்த கார், அங்கிருந்து பறக்காத குறையாய் தாராபுரம் நகரை கடந்து கீரனூர்.உதகை இல்லத்தின் முன்பு நின்றது.
காரிலிருந்து மணப்பெண் பல்கீஸ், அவளது அத்தா கனிசாகிப், அம்மா பெளஜியா, அண்ணன்கள் முஸ்தபா, கலீல், நன்னீமா ராபியா, அண்ணி ஜீபேரியா என ஒரு பெரிய பட்டியல் இறங்கியது. இன்னொரு காரிலிருந்து லக்கேஜ்ஜீகள் இறக்கப்பட்டு, பின் அனைவரும் ஒன்று சேர்ந்து உதகை இல்லத்திற்க்குள் பிரவேசித்தனர்.
*******************
ரஹீம்,ஜாபர்,மன்சூர்,ரகுமான்,குதுப்தீன்,அக்கீம்,ஹபீப் என தொடரும் வாலிபர்கள் கூட்டத்தின் நடுவில், சற்று வளர்ச்சி குன்றியவனாக தென்பட்டான் பஷீர் அகமது.
கீரனூர் கடைவீதித் தெருவில், உமர் டீக்கடை அருகே நின்றிருந்தது அந்தக் கும்பல். அனைவரின் தலையிலும் நூல் தொப்பிகள். அந்த வழியாக கடந்து செல்லும் பெரியவர்கள் பலருக்கும் ஸலாம் சொல்லியும், ஒரு சிலருடன் கட்டித் தழுவி முஸாஃபா செய்யவுமே பஷீருக்கு போதும் போதுமென இருந்தது.
அருகிலிருக்கும் மசூதியிலிருந்து, தொழுகைக்காக பாங்கின் ஒலி கேட்டதும், அந்தக் கும்பல் அங்கிருந்து இடத்தைக் காலி செய்து, பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பேக்கரி முன்பு பைக்குகளை நிறுத்தியது.
மச்சான், இன்னைக்கு விட்டா முடியாது, நாளாநாளைக்கு நிக்காஹ், நாளைக்கெல்லாம் உன்னை வெளில விட மாட்டாங்க, ஸோ இப்பவே ட்ரீட் வச்சிட்டு போயிடுடா, டைம் வேற இல்லை சீக்கிரம் என்றான் கூட்டத்திலிருந்த மன்சூர், பஷீரிடம்.
டேய்! டேய்! ட்ரீட்னதும், பேக்கரிக்குள்ள கூட்டிட்டு போயி, க்ரீம் பண்ணு, டீ வாங்கிக் கொடுத்த்றப் போறாண்டா, செத்த அவன்கிட்ட தெளிவா சொல்லுடா, என்றான் ஹபீப்.
யே அத்தாவ்! இருக்கறத கெடுத்தறாதிகடா, பொண்ணு தாரதே பெரிய விசயம், இதுல நீங்க வேற, உம்ம்ம்….! சோழி சுத்தம்டா, அதெல்லா இன்னொரு நாள் பார்க்கலாம், ஆள விடுங்கடா, என்றவாறு தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு தெற்க்கு நோக்கி புறப்பாட்டான் மணமகன் பஷீர் அகமது.
**********************
கனிசாகிபும், அவரது சம்மந்தி நூருல்லாவும், காலை ஏழு மணிக்கெல்லாம் வெளியில் புறப்பட்டு விட்டனர். மறுநாள் நிகழவிருக்கும் திருமணத்திற்க்காக ஊர் அழைப்பு விடுக்க. என்னதான் இரண்டு மாதங்களுக்கு முன்பே சொந்த பந்தம், ஊர் ஜனம் என எல்லோருக்கும் பத்திரிக்கை வைத்து அழைப்பு கொடுத்திருந்தாலும், இப்படி கல்யாணத்திற்கு முதல் நாள் ஊர் முழுக்க பொது அழைப்பு விடுப்பது கீரனூர் வழக்கம்.
உதகை வீட்டிற்க்குள் டின் கணக்கில் முறுக்கு, பேனியான், லட்டு என திண்பண்டங்கள் நுழைந்து கொண்டிருந்தன.
இவ்வில்லத்திற்கு சற்று தள்ளி இருக்கும், திருமண மஹாலின் முகப்பில் எண்ணற்ற தோரணங்களும், செயற்கை நீரூற்று அமைக்கும் பணிகளும் செவ்வனே நடக்க, பின் வாயில் வழியாக பழனி சந்தையில் இருந்து வந்திறங்கிய காய்கறி, மளிகைப் பொருட்கள், சமையல்காரர் ஹாஜி.காதர் தலைமையில் கொண்டு செல்லப்பட்டன.
பல்கீஸின் வீடும், பஷீரின் வீடும், அலங்காரத் தோரணைகளாலும், சீரியல் செட் பல்புகளாலும், நாசருடைய பந்தல் அமைப்பாலும் விஷேசமாக ஜொலித்தன.
இரவு ஏழு மணி, நூருல்லாவின் வீடு கூட்டமாய் இருந்தது, மணமகன் பஷீருக்கு தலைப்பாக்கட்டு, நழுங்கெடுத்தல் வைபோக நிகழ்வு, சீராய் போய்க்கொண்டிருந்தது.
பல்கீஸ் வீட்டில் முக்கியமானவர்கள் யாரும் இல்லை, அனைவரும் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று விட்டனர். விடிந்தால் கல்யாணம், தனிமையில் இனிமையாக கற்பனையில் மூழ்கியிருந்தால் மணப்பெண்.
*************************
இரவு மணி 8:30, மசூதி கடைவீதித் தெரு, ஜேஜேவென ஒருவித பரபரப்பு. ஃபேண்ட்,சர்ட் அணிந்து டை கட்டிய அந்த ஒருவரையும், அவரோடு காக்கி உடை அணிந்திருந்த இருவரையும் சுற்றி வளைந்திருந்தது கூட்டம்.
இந்தா, அவரே வந்துட்டாரு ஸார், அவருகிட்டயே பேசுங்க, என்றார் கூட்டத்தில் ஒருவர்.
கூட்டத்திற்குள் நுழைந்திட்ட நூருல்லா என்ன ஏதுவென விசாரித்துக் கொண்டே, எதிரே தென்பட்ட அதிகாரிகளை நோக்கினார்.
உங்க பேரு என்ன பாய்….என்றார் தாசில்தார் அதிகாரி இராம்குமார்.
ஸார்ர்ர்ர்ர்….. நூருல்லாங்க, நீங்க! ஸார்?
நான் பழனி டவுன் தாசில்தார் இராம், இவர் பழனி காவல் எஸ்.பி சுந்தர், இன்னொருத்தர் எஸ். கோபாலன்.
சரிங்க ஸார், என்ன விசயம் என்றார், நூருல்லா பயம் கலந்த முகத்தோடு.
உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணப் போற பொண்ணுக்கு வயசு பதினாறுதான் ஆகுது, அதனால சட்டப்படி இந்தக் கல்யாணம் செல்லாது என்றார், எஸ்.பி. சுந்தர்.
பாய் பொண்ணோட அப்பா, எங்க? அவர வரச் சொல்லுங்க முதல்ல, என்றார் தாசில்தார்.
சார் அவரு பழனி போயிருக்கறாரு, இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துருவாரு, நீங்க நம்ம விட்ல வெயிட் பண்ணூங்க, எதுவானாலும் பேசிக்கலாமே சார் ப்ளீஸ், என்றார் நூருல்லா.
நூருல்லாவின் ஹோண்டா பைக்கை பின் தொடர்ந்தவாறு, பள்ளிவாசலின் வலது ஓர தெருவில் சென்றது அந்த மூவரின் வாகனம்.
மணி 9:20 ஆகியது, கனிசாகிபு பதற்றத்தோடு தெற்குத் தெரு வீட்டினுள் நுழைந்தார்.
********************
சார், நாளைக்குக் கல்யாணம், ஊரே தெரியும், ஏகப்பட்ட செலவு, சொந்தக்காரங்களாம் வந்து இறங்கிட்டாங்க, இந்த சமயத்துல இப்புடி கல்யாணம் நின்னுச்சுனா, ஊருக்குள்ள எப்படி தலைய காட்டுறது? கொஞ்சம் பெரிய மனசு வைங்க ஸார் ப்ளீஸ்…ப்ளீஸ் என கெஞ்சலானார், மணப்பெண்ணின் தந்தை.
முடியாது பாய்…, உங்க செளரியத்துக்கு நாங்க இல்ல, எங்களுக்கு புகார் வந்திருக்கு, நீங்க கல்யாணத்த நிறுத்தறதுதான் உங்களுக்கு சேஃப்டி என்றார் சுந்தர் எஸ்.பி.
சார் ப்ளீஸ், விசயம் எங்கேயும் தெரிய வேணாம், உங்களுக்கு ஆகறத நாங்க செய்யறோம், என் நெஞ்சில் கை வைத்தவாறு, குரல் தாழ்த்திக் கூறினார் நூருல்லா..
நோ,நோ சான்ஸ், அதுக்கெல்லாம் வளையற ஆளுகயில்ல நாங்க என்றார், தாசில்தார்.
எப்படி முடியும்?
பல்கான ஒரு தொகையை நூருல்லாவின் அண்ணன் சேட் ஹாஜியாரிடம் வாங்கியாயிற்றே மூவரும்.
நூருல்லாவிற்க்கும், அவரது அண்ணனுக்கும் சில வருடங்களாக சொத்துப் பிரச்சனை முத்திக் கொண்டுள்ளது.
****************************
மறுநாள் மதியம் இரண்டு மணி, மசூதிக்கு அருகிலுள்ள மண்டபத்தில் விருந்து தடல்புடலாக ஆடம்பரமாக நடந்து கொண்டிருந்தது.
கடைவீதித் தெருக்களில் காத்திருந்த காவல் துறையினர், திருமணம் ஏதும் மசூதிக்குள் நடைபெறாததை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு, விருந்தில் கலந்து சாப்பிட்டுவிட்டு, ஒரு பெரிய கேரியரில் பார்சலை ஸ்டேசனுக்கு எடுத்துக் கொண்டு, மூணு மணிக்கெல்லாம் ஜீப்பில் ஏறி சென்றுவிட்டனர்.
மணி இரவு எட்டு….,
எப்படியோ விசயம் கமுக்கமா முடிஞ்சது, நீங்க பொண்ணக் கூட்டிக்கிட்டு கோத்தகிரி போயிடுங்க. ஒரு வாரம் கழிச்சு அங்கயே சிம்பிளா ஒரு வலிமா விருந்து போட்டறலாம், அப்பறம் பையன் சென்னை போயிடுவாப்புல கூடயே பொண்ண அனுப்பி வைச்சடலாம் என்ன சொல்றீங்க கனி?
உம்ம்ம்ம்….சரிங்க சம்மந்தி…சரிங்க… அப்பறம் வேறெதும் பிரச்சனை என்று இழுத்தார் கனிசாகிபு, நூருல்லாவிடம்.
வேறென்ன இருக்கு? அப்படியே ரெண்டு பேரும் மைசூர், ஹைதராபத்துனு சுத்தீட்டு வரட்டும். அப்படி இப்புடினு ஒரு வருசம் ஓடிப்போயிடும்., அதுக்கப்புறம் நாம, ஃபர்முலாட்டிஸ்க்காக நிக்காஹ் ரிஜிஸ்டர்ல, ஹஜ்ரத்த வைச்சு பதிஞ்சுக்கலாம் சரிங்களா, கவலைய விடுங்க கனி பாய்…
உம்ம்ம் சரி, சரி எப்படியோ அதிகாரிகளுக்கும், ஊர்காரங்களுக்கும் விசயம் ஏதும் தெரியாம போனதே நல்லாதாப் போச்சு, ஆனா யாரு இப்புடி கம்ப்லைன்ட் பண்ணிருப்பாங்கனு புலப்பட மாட்டேங்குது சம்மந்தி எனக்கு, என்றார், கனிசாகிபு.
ச்சே,ச்சே, அதவிடுங்க ஊர்க்காரங்களுக்கு வாயடைக்க விருந்து போட்டு கல்யாணம் நிக்காத மாதிரியும், நைட்டோட நைட்டா ஹஜ்ரத்த வச்சு நிக்காஹ் எழுதி ஆபிஸர்களுக்கு கல்யாணம் நடக்காத மாதிரியும் சமாளிச்சுட்டோம், இப்போதைக்கு அதை நினைச்சு சந்தோசப்படுங்க கனி.
அப்பறம், ஒருவேளை விசயம் ஆபிஸர்களுக்கு தெரிய வந்துச்சுனாலும் பிரச்சனை இல்லைல, நாமதான் இன்னும் நிக்காஹ் புக்ல பதிவு செய்யலல. நமக்குத் தேவை பொண்ணு சம்மதம்தானே தவிர இந்த கவர்மெண்ட் சம்மதம் இல்லை. நாலு சாட்சி வச்சு கல்யாணம் நடந்தா போதும் சம்பந்தி பிரிஞ்சுக்கோங்க. நம்ம ஷரீத் சட்டப்படி இது தப்பு இல்லை, அப்பறம் இவனுகள்ட இப்போதைக்கு அடக்கி வாசிப்போம், பின்னடி பார்த்துக்களாம். எப்படியும் பணத்துக்கு பணியறவனுகதான், பார்த்துக்களாம் கன்சாகிபு கவலைய விடுங்க.
உம்ம்ம்ம் சரி நூருல்லா என்று பெருமூச்சு விட்டு எழுந்தார் கனிசாகிபு.
இவருக்கோ எப்படியோ கல்யாணம் முடிஞ்சது, கெளரவம் காப்பாத்தியாச்சுங்கற நிம்மதி. நூருல்லாவுக்கோ கெளரவம் போகலைங்கற நிம்மதியும், சேட் ஹாஜியார ஜெயிச்சுட்டோம்ங்கற நிம்மதியும் அதிகமா மனசுக்குள்ள ஓடியது. நூருல்லாவுக்குத் தெரியும் நம்ம அண்ணனைத் தவிர வேற எவனும் இப்புடி பண்ணிருக்க மாட்டானுகனு.
**********************************
இளஞ்சிறுசுக ரெண்டும், வாழ்கை இழந்து நிக்குதுக, ஆனாலும் இந்த தெற்குத் தெருக்காரனுக கெளரவத்த காப்பாத்திக்க, இப்புடி விருந்து வைக்குறானுக பாருடானு…. இழுத்தார் மேற்குத்தெரு குத்தூஸ் இராவுத்தர், கிண்டலாக.
விசயம் என்ன ஏதேனு தெரியாம இருக்கறேயப்பா நீ, என்றார் டீக் கடை உமர்.
என்ன சொல்ற எனக்கொன்னும் புரியலையேப்பா உமரு.!
ஹேய், நன்னாம்பா, என்ன இப்புடி விவரம் தெரியாம இருக்காப்புல உங்க மச்சான், கொஞ்சம் சொல்லுப்பா அவருக்கு என்றார், உமர்.
என்ன மச்சா, இப்புடி இருக்கீங்க என இழுத்துக் கொண்டே, தனது கையிலிருந்த டீ டம்ளரை கீழே வைத்துவிட்டு தொடர்ந்தார் நன்னாம்பா.
கல்யாணம் எங்க நின்னுச்சு? அந்த ஆபிஸருகலாம் போனப் பின்னால, நம்ம பேஷ் இமாம் அஜ்ரத்து, காரியதரிசி எல்லாரையும் நைட்டோட நைட்டா கூப்பிட்டு, நாலு பேர்த்த சாட்சியா வச்சு நிக்காஹ் எழுதி முடிச்சுட்டாங்க, தெரியாதா என்றார் நன்னாம்பா.
அட இதென்னப்பா கூத்து? இது எத்தனை மணிக்கு நடந்துச்சு? நைட் பதினோரு மணி வரைக்கும் நாம கடைவீதில தான இருந்தோம், என்றார் இராவுத்தர்.
உம்ம்க்கும்… அது நடு இராத்திரி ரெண்டு மணிக்குப்பா, என இழுத்து முடித்தார் நன்னாம்பா…..
விசயம் எங்கும் தெரியாது என நிம்மதியாய், உறங்கச் சென்றார் நூருல்லா. ஆனால் அது, ஊட்டி மலை ஏறி சேட் ஹாஜியாரிடமே சென்றுவிட்டது, ஊராரின் வாய்களால்.
அடிக்கின்ற காற்றில் எல்லாமே வெளிச்சத்திற்கு வந்துதான் ஆகும். ஊர் வாயினை அடைத்திடவா முடியும்?

- பழனி ஷஹான்
நன்றி; சிறுகதைகள்.காம் இணையதளம்:
http://www.sirukathaigal.com/சமுகநீதி/வாழ்விழந்தும்-விருந்து/#more-17204


.

தன்மானத்தின் பலிகடா-சாரா(சிறுகதை)


                  செம்மேகங்கள் சூழ்ந்த மாலைப்பொழுதில், கோவை நகரின் பிரதானச் பூங்கா ஒன்றில், மனிதர்கள் யாரும் இல்லாது வனம் போன்று சூழ்ந்திருக்கும் புங்கை மரத்தின் நிழலில், தத்தம் முதுகுகளை இணைத்தவாறு எதிர் எதிரே அமர்ந்திருந்தது அந்த இளம் ஜோடி.
கல்யானத்துக்குப் பின்னாடி நாம எங்கேயாதும் போயிடலாம். ஒரே ஒரு குழந்தை போதும், நமக்கினு சின்னதா ஒரு வீடு, நல்ல ஒரு ஜாப்ல ஜாயின் பண்ணிடு சீக்கிரம், அமைதியா, அன்பா நாம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும் சரியா, என்ன சொல்ற குமார், என்றாள் ஜில்ஃபிகா.
எல்லாவற்றிற்கும் தலையை அசைத்தவாறே பதில் கூறிய குமார். தன் மனதிற்க்குள் இப்படியும் நினைத்துக் கொண்டான், ‘எத்தனை பேரத்தான் சமாளிக்கறது, உம்ம்ம்ம் ஓடிப் போலாம்ங்கறா, கல்யாணம்ங்கறா, குழைந்தங்கறா, சரி சரி கேட்டதெல்லாம் கொடுப்போம், ஆடு தானா வந்து தலைய நீட்டுது’ என்றபடி
*****************************************
                      கூட்டாக பன்னிரண்டு புறாக்கள் இரையை மேய்ந்து கொண்டிருக்க, அவைகளுக்கு தானியங்களை தூவிக் கொண்டிருந்தாள் சாரா. ‘யூ கேவ் ஏ டெக்ஸ்ட் மெஸேஜ்’ என்றபடி ஒரு பெண்ணின் குரல் கேட்ட சாரா, தன்னுடைய கைப்பேசியை எடுத்து பார்த்தாள். அதில் ‘சேஃப்டியா வீட்டுக்கு போயிட்டயா’ என்று ஷாஜன் அனுப்பியிருந்த குறுந்தகவல் பளிச்சிட்டது.
உம் யெஸ், ஆர் யூ? என்றூ சார பதில் அனுப்பினாள்.
மீ டூ என்று வந்தது ஷாஜனின் பக்கமிருந்து.
ஷாஜன், சாரா இருவரும் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் நபர்களாவர். ஒரு வருடமாக இருவருக்கிடையில் காதல் மலர்ந்துள்ளது. வீட்டாரும் சரி சொல்லியாகிவிட்டது, அவரவர் பிள்ளைகளிடம் மட்டும். இரு வீட்டாரின் கலந்து கொள்ளல் இன்னும் நடந்தேறவில்லை. இரண்டு மாதங்களில் சார வீட்டாரிடம் பேசுவதாக ஷாஜனுடைய வாபா, ரஹீம் கூறி வைத்துள்ளார்.
இருவரின் காதலுக்கும் பெரிய எதிர்ப்புகள் இல்லை. தனது சமுதாயத்தில் கல்லூரி பயின்று, பணியில் சேர்வது சாராவே முதல் தலைமுறை. ஆரம்பத்தில் சாராவின் அம்மா ஆமினாள் தனது ஆளுமை குணத்தால், சாராவை கட்டுப்படுத்தியே வந்தாளும், பிற்பாடு அவர் அனைத்தையும் விலக்கிக் கொண்டு சம்மதம் கூறிவிட்டார், சாரவின் காதலுக்கு.
புறாக்கள் கூண்டுக்குள் சென்று கதவுகளை மூடிக் கொண்டன. சாரா மஃரிபுடைய தொழுகைக்கு பாங்கின் ஒலி கேட்டதும், ஷாஜனுக்கு காதல் வசத்தால் அழுத்தமான முத்தத்தை குறுந்தகவல் வழியாகவே அனுப்பி விட்டு, கை, கால்களை சுத்தம் செய்ய உலூ செய்து விட்டு, தொழுகையில் ஈடுபட்டால்.
இருவரும் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்தாலும், அவர்களால் சரிவர பேசிக் கொள்வது இயலாத ஒன்றே. ஆகவே, சாரா இப்படி மாலை நேரத்தில், அசர் தொழுகைக்கும், மஃரீப் தொழுகைக்கும் இடைப்பட்ட நேரத்தில் பறவைகளை மேய்த்துக் கொண்டும், பூச் செடிகளை பராமரித்துக் கொண்டும், ஷாஜனுடன் பேசிக் கொண்டிருப்பாள், வரம்புகளுக்குட்பட்ட வார்த்தகளை மட்டும்.
***************************
          முடியாதும்மா… நீங்க சொல்றது எல்லாத்துக்கும் என்னால தலையாட்ட முடியாது. நான் படிச்சவ.., என் டேஸ்ட் வேற. எனக்கும் நல்லது, கெட்டது எதுன்னு நல்லாவே தெரியும் சரியா? குமாரத்தான் எனக்குப் புடிச்சுருக்கு நான் அவனைத்தான் கல்யானம் பண்ணிப்பேன்…! என்றாள் ஜில்ஃபிகா.
ருக்கையா அதைவிட ஆவேசமாக, ‘உன்னை பெத்தவ நான், நீ எனக்கு கட்டுப்பட்டுத்தாண்டி இருக்கணும், என்ன படிச்சு என்னடி? இப்புடி கண்டவங்கூட சுத்ற மூதேவி…மூதேவி. இங்க பாருடி, இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு, ஒழுங்கா உன் மனச மாத்திக்கிட்டு, கல்யாணப் பொண்ணு மாதிரி நடந்துக்கோ. சொந்தக்காரங்களா வரப் போக இருப்பாங்க, எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது ஆமா’ என்று கூறி ஜில்பிகாவை ஒரு பார்வை பார்த்தாள்.
அதெல்லாம் முடியாதும்மா, இப்படி கம்பெல் பண்ணனீங்கனா நான் அவன்கூட ஓடிப் போயிடுவேன் சொல்லிட்டேன்….!
ப்பளார்…..ப்பளார் என ஜில்ஃபியாவின் கண்ணம் சிவந்தத்து, ருக்கையாவின் கை பலத்தால்.
இன்னும் நல்லா அடி, ஆனா நான் ஒத்துக்க மாட்டேன் என்று தேம்பியவளாக, அகங்காரத்தோடு முனு முனுத்தாள் ஜில்ஃபிகா.
*******************************
         என்னம்மா ரெண்டு நாளுல கல்யாணம், இவ ஏன் இப்படி இருக்கா என்றால் ஆமினா தன் தங்கை ருக்கையாவிடம்.
உம்ம்ம்ம்ம் என்னத்த சொல்ல, எருமை அந்த நினைப்புலயே இருக்கறா, எங்க போற சைத்தானோ என் வயித்துல வந்து பொறந்திருச்சு. வர்ர்ர்ர ஆத்திரத்துக்கு, இவள அப்படியே கழுத்த நெரிச்சு சாகடிக்கலாம் போல இருக்குதுக்கா எனக்கு, என்றாள் ருக்கையா.
விடு, விடு அதெல்லாம் புரிஞ்சுப்பா என் புள்ள, நீ போயி உன் வேலைய பாரு ருக்கையா சரியா.. போ…போ.
என்னம்மா ஜீல்ஃபி, நம்ம குடும்பம் என்ன? அவிங்க குடும்பம் என்ன? ஒரு தராதரம் வேணாமா சொல்லுடா? நீ படிச்சவ இப்படி பண்றது சரியாடாமா சொல்லு?
என் மவ சாராவும்தான் மனசுக்கு புடிச்சிருக்கு ஷாஜன் கூட நிக்காஹ் பண்ணித் தருவீங்களானு கேட்டா, நாங்களும் சரினு சொன்னோம். எதனால? அந்தப் பையன் நல்லவன், குடும்பம் அந்தஸ்த்துள்ள குடும்பம், முக்கியமா நம்ம ஆளுக அதனாலதான்.
ஆனா நீ லவ் பண்றவன், குடிச்சுட்டு ரோட்டுல பொறுக்கித்தனம் பண்றவன். அவன் எப்படி நம்ம குடும்பத்துக்கு லாயிக்காவான்?
இங்க பாருமா ஜீல்ஃபி, அனீஸ் நல்ல பையன், நிறைய சம்பாதிக்கிற இன்ஜினியர், அவன் குடும்பம் கெளவரவமானது. இதெல்லாம் வேணாம்னு ஒதுக்கிட்டு, உன் தலைல நீயே மண்ணை வாரி போட்டுக்காதடா, உம் புரிஞ்சதா…என்றபடி கூறிய ஆமினா, ஜீல்ஃபிகாவின் தலையை நிமிர்த்தினாள்.
ஜீல்ஃபியின் கண்களில் ஒருவித ஏக்கமும், தேக்கமும் தென்பட கண்னீர் வழிந்தோடியது.
அவளது கண்ணீரை துடைத்துவிட்டு, மெல்ல சாய்த்து படுக்க வைத்து, போர்வையை போர்த்திவிட்டு, அங்கிருந்து விலகி வெளியேறினாள் ஆமினா.
**********************************
அன்று ஞாயிற்றுக் கிழமை….
   ஃபஜ்ர் அதிகாலை தொழுகையில் சந்தித்துக் கொண்ட ஷாஜனும், அனீஸும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி முஸாபா செய்து கொண்டனர். பின் அனீஸுடைய கைகளை இறுகப்பற்றி, தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தான் ஷாஜன். பின்னர் சற்று நிமிடங்களுக்கு அப்பால், அனீஸ் பள்ளிவாசல் ஹஜ்ரத்திடம் வாழ்த்தும், ஆசியும் வாங்கிக் கொண்டு மசூதியை விட்டு வெளியேறினான்.
வீட்டில் அவனுக்காக அரைமணி நேரம் பார்பர் காத்துக் கொண்டிருந்தார், அனீஸிற்கு களை முடிகளை களைய.
*************************
        இப்படி நடந்திருச்சே…! எங்க வாப்பா மொகைதீன் இராவுத்தருனா எவ்வளவு மதிப்பு, மரியாத. இப்போ எல்லாம் போச்சே, இந்த சிறுக்கியால….என்று குமுறினார் முஜிபுல்லா.
அவ செத்துத் தொலைஞ்சிருந்தாலும் நிம்மதியா இருக்கும், இப்படி ஊதாரிப் பயலோட ஓடிட்டாளே சனியேன், சனியேன்! நல்ல இடம். ஐயோ, வி.கே.வகையறான்னா சும்மாவா? நம்ம குடும்பத்தோட உறவு வச்சுக்கணும்னு ஆசைப்பட்டு சம்பந்தம் கேட்டவங்கள்ட்ட இப்ப என்னனு சொல்ல. பாவி மவ இத ஆரம்பத்திலயே செஞ்சிருந்தா, கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்திருக்க மாட்டோமே, குடும்ப கெளரவமே குழி தோண்டி புதைச்சுட்டாளே பாவி, பாவி… என்றாள் ருக்கையா ஒப்பாரி வைத்து……..!
முஜீபுல்லா, ருக்கையா வீடு முழுக்க, கல்யாண வாசம் வீச, இவர்கள் இருவர் மட்டும் கருமாரி வீட்டினராய் மாறிவிட்டனர்.
************************************
விசயம் மெல்ல பரவியது, நேரம் சென்றது…..!
முஜிபுல்லாவும், சதக்கத்துல்லாவும் கூடி பேசிக்கொண்டு விட்டு, அவசர, அவசரமாக வீட்டிலிருந்தும் வெளியேறுகின்றனர்.
காரில் இருவரும் உட்கார்ந்த வன்ணம், அவரது மனைவிமார்களான, ருக்கையாவையும், ஆமினாவையும் கூப்பிட்டு, சன்னக் குரலில் ஏதோ கூறிவிட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும், வீட்டிற்க்குள் வேக வேகமாகச் சென்றனர்.
அனீஸுடைய வீட்டில், சதகத்துல்லாவும், முஜீபுல்லாவும் உட்கார்ந்திருக்க, அவர்களுக்கு எதிராக ஷம்சுதீனும், அனீஸின் தாய் மாமன் ஹபீபும் இருந்தனர்.
எங்க நிலைம இதுதானுங்க, தப்பு எங்க மேலதான். இருந்தாலும் இவ்வளவு கூடி வந்ததுக்கப்புறம், சம்மந்தம் விட்டுப் போச்சுனா குடும்ப கெளரவம் என்னாகுறதுங்க? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க என்றார் முஜீபுல்லா.
எல்லாம் சரிதாங்க, உங்க வகையறாவும், எங்க வகையறாவும் சம்மந்தம் வச்சுக்கணும்ங்கரது எங்க அத்தாவோட ஆசை. அதான் நாங்க உங்க வீட்ல பொண்ணு கேட்டோம், ஆனா இப்போ இப்படியான நிலைமைல என்ன சொல்றதுன்னு தெரியலைங்க…. என்றார் அனீஸின் அத்தா ஷம்சுதீன்.
நால்வரும் மாற்றி, மாற்றி பேசினர். இடையில் அனீஸும் அழைக்கப்பட்டான். அவனோ, அவர்களின் சம்மதம் எனக் கூறி நகர்ந்தான்.
*************************
        காலை மணி, பதினொன்றை, மசூதியில் மணகனாக அனீஸ், மதகுருமார் ஹஜ்ரத்டின் எதிரே அமர்ந்திருக்க, இவர்களைச் சுற்றிலும் சுற்றங்கள் சூழ்ந்திருந்தது.
‘அவ்வல் கலிமா, இலாயிலாஹா இல்லல்லாஹீ’ என்று ஹஜ்ரத் சொல்ல, சொல்ல அனீஸ் சொல்லிக் கொண்டே வந்தான். பிறகு, சதக்கத்துல்லாவிடமும், ஷம்சுதீனிடமும், எதையோ கேட்ட ஹஜ்ரத், அதனியே அனீஸிடமும் கேட்க, மாப்பிள்ளை உம்ம்ம் என தலையசைத்தார்.
ஒரு பெரிய புத்தகத்தில் ஹஜ்ரத் அனீஸிடம் கையெழுத்து வாங்கிடவே, பின் அந்தப் புத்தகம் அருகிலுள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சிரிப்பொலிகளும், கீச்கிச்சென்ற குரல்களுக்கும் மத்தியில், பல பெண்கள் சூழ தங்க ஜரிகைத் துப்பட்டா போர்த்தி, முகத்தை கீழே சாய்த்து, மனதுற்க்குள் வெந்நீர் பாய்ச்சியவளாக அமர்ந்திருந்த சாராவிடம் அந்த புத்தகம் கொடுக்கப்பட்டது.
அதில், ஷம்சுதீன் மன் அனீஸ் தன்னை மணமுடிக்க விருப்பம் தெரிவித்து, தகுந்த சாட்சிகளின் முன்னிலையிலும், ஜமாத்தார்கள் முன்னிலையிலும் கையொப்பம் இடப்பட்டிருந்தது. சாரா இவைகளையெல்லாம் படிக்கவில்லை, அவளது சித்தி ருக்கையா காட்டிய இடத்தில், வேகமாக கையெழுத்திட்டாள்.
திருமண மண்டபத்தில் மதிய உணவு விருந்து நடந்து கொண்டிருந்தது. மணமகன் அனீஸ் தனது சக நண்பர்களுடன் அமர்ந்திருந்தான். ஷாஜன் மட்டும் காணவில்லை. அனீஸ், ஷாஜன் இருவரும் தோழர்கள். ஆனாலும், அனிஸிற்கு தெரியாது அவனது மனைவி சாரா, ஷாஜனுடைய காதலி என்பது.
***********************************
          எப்படியோ சம்பந்தி எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. உங்க தம்பி பொண்ணா இருந்தா என்ன/ உங்க பொண்னா இருந்தா என்ன? எனக்கு உங்க வகையறால சம்பந்தம் உண்டாயிருச்சு, அதுவே போதும் என்றார் ஷம்சுதீன்.
ஒருவித மனக்கலக்கத்தோடு, அலட்டுச் சிரிப்பை உதிர்த்து, தலையை ஆட்டினார் சதக்கத்துல்லா.
எம் மக, நா சொன்னா கேட்பானு தெரியும். அவளுக்கு சொர்க்கம், நரகம்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்கேன், அதான் இப்போ நம்ம மானத்த காப்பாத்திருக்கா என்றாள் ஆமினா ருக்கையாவிடம்.
பாவம், எவ்வளோ துடிக்குதோ என் மவ மனசு. நம்ம குடும்ப கெளரவம் அது இதுனு, ஏதேதோ சொல்லி அவள இப்புடி, வற்புறுத்தி உட்கார வச்சுட்டீயேக்கா? சாராவோட வேதனைக்கு நாமெல்லாமே பதில் சொல்லியே ஆகணும். அந்த சண்டாளி முண்டையால, எம் புள்ள சாரா வேகறாலே, ஐய்யோ என குமுறி, குமுறி அழுதாள் ருக்கையா.
சாராவின் கண்களில் இருந்து விழுந்த ஒரு துளி கண்ணீர், அவளது கைகளில் கொடுக்கப்பட்டுள்ள, பூச்செண்டின் ரோஜா மலர் மீது வழிந்தோடியது.
மேகங்கள் யாவும் ஒன்றிணைந்து நடத்திய இரங்கல் கூட்டத்தால், திருமண மண்டபம் சுற்றி வைக்கப்பட்டிருந்த வாழ்த்துத் தட்டிகள் யாவும் துவண்டு போயின. இந்த தட்டிகளே ஷாஜனை மண்டபத்தின் உள்நுழையாமல் வெளியேற வைத்தது.
நண்பகல் பொழுது, இருள் சூழ்ந்து காட்சியளித்தது.

- பழனி ஷஹான்

நன்றி சிறுகதைகள்.காம் இணையதளம்:
http://www.sirukathaigal.com/குடும்பம்/தன்மானத்தின்-பலிகடா-சார/#more-17206