Monday, 21 July 2014

மகிழ்ச்சித் தருணத்தில் சில பின்னோக்கிய நினைவுகள்


                                             
                        எழுத்து, இலக்கியம், குறும்படம் அல்லது ஆவணப்பட என்கிற எனது இந்த குறுகிய கால, கட்டெறும்ப்பு அளவிலான பயணத்தின் மிகச் சரியான தொடக்கம், 'ஆளூர் ஷாநவாஸ்'.
              (இணைந்து எடுத்துக் கொண்ட முதல் ஒளிப்படம் -12-07-2014)

நான் எனது பத்தாம் வகுப்பில் இருந்து பொது விடயங்களில், போராட்டங்களில் கலந்து கொண்டு வருபவன். ஆரம்பத்தில் "சேகுவேரா-வினால்" கவரப்பட்ட நான் 'இந்திய மாணவர் சங்கத்தில்' (SFI) இணைந்து கொண்டேன். பிறகு அப்படியே இந்திய வாலிபர் சனநாயக இயக்கத்தில் (DYFI) இணைந்து செயல்பட்டு, திண்டுக்கம் மாவட்ட அளவிலான பொறுப்புகளில் களமாடினேன். நான் பதினொன்றாம் வகுப்பு முடித்து பனிரண்டாம் வகுப்பு செல்ல இருக்கும் இடைவெளியான கோடை விடுமுறை நாட்களில் நிகழ்ந்த என் ஊட்டி பயணம், வாழ்வில் ஒரு பெரும் இழப்பைக் கொடுத்து, என்னை பல மாதங்கள் முடக்கி படுக்க வைத்துவிட்டது அதன் பிறகான நாட்களில் நான் இந்த வாழ்க்கையெல்லாம் விட்டு ஒரு மாறுதலுக்குச் சென்றுவிட்டேன். பன்னிரண்டாம் வகுப்பு அறிவியல், கணிதம் எடுத்து பயின்ற நான், ஒருவருடங்கள் கழித்து வரலாறு, வணிகம், பொருளியல் பாடங்களை எழுதி பள்ளிப் படிப்பை முடித்தேன். இந்தக் கட்டங்களில் நானே சுயமாக 'கணினி உலவு மையம் வைத்ததும், ஒரு உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்ததும் மறக்கவியலா என்னின் துணிச்சல்கள் என்றே சொல்லலாம். பள்ளிப்படிப்பை முடித்த நான் அடுத்து என்ன செய்வது என்று திணறவில்லை. எனது இலக்கு கிரிக்கெட்டில் முன்னேறுவது என்கிறதாகத்தான் இருந்தது. பழைய இழப்பான நினைவுகளில் இருந்து முன்னேறிய எனக்கு இந்த விளையாட்டுதான் துணையாக, நினைவாக இருந்ததினால், நான் இதை இன்னும் கூர்தீட்டி, 19-வயதிற்க்குட்பட்ட பிரிவில், மதுரை மண்டல அணியில் 'விக்கேட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவு' சில விளையாட்டுக்களில் அணித் துணை தலைவராகவும் கூட இருந்துவந்துள்ளேன். என்னுடைய இந்த ஆர்வங்களினால் திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் அணிச் செயலாளர் அவர்கள், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் சேர்ந்து, பி.பி.இ.எஸ் (B.P.E.S) எனும் விளையாட்டுத்துறை சார்ந்த படிப்பை படிக்க வழிகாட்டி,  சீட்டும் வாங்கிக் கொடுத்தார். ஆனால் போதிய பணம் இல்லாததாலும், குடும்ப ஒத்துழைப்பும் இல்லாததாலும் என்னால் அதில் செல்ல இயலவில்லை. இருந்தும் கல்வியைத் தொடர வேண்டுமே என்கிற முனைப்பும், நினைப்பும் என்னில் அகலவே இல்லை. இந்தத் தருணத்தில் எனது எதிர்காலத் துணையாரின் கலந்துரையாடலிற்குப் பிறகு, குடும்ப அனுமதித்த திருச்சி, ஜமால் முகமது கல்லூரியில், பி.ஏ ஆங்கில இலக்கிய படிக்க ஆரம்பித்தேன். இங்கு வந்த பின்னர் ஒரு இரு மாதங்கள் நான் திருச்சி மாவட்ட அணியில் விளையாடினேன். ஆனால் தொடர்ந்து என்னால் விளையாட இயலவில்லை. நான்  இந்தத் தருணங்களில்தான் நான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (POPULAR FRONT OF INDIA) எனும் அமைப்பில் இணைந்து செயல்பட ஆரம்பித்தேன். மூன்று ஆண்டுகள் இவ்வமைப்பில் பயணித்த நான், அதன் மாணவ அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவில் (CAMPUS FRONT OF INDIA) திண்டுக்கல் மாவட்டத்தில் மிகத் தீவிரமாக ஒருவருடம் களமாடியுள்ளேன்.

(அமைப்பில் செயல்பட்ட காலங்களில் சில புகைப்படங்கள்):





பின்னர் சில முரண்பாடுகளினூடே தொடர்ந்த பயணங்கள், நான் இதிலிருந்து முற்றாக நீங்கிக் கொண்டேன். மாணவ அமைப்பில் முரணோடு விலகல் இல்லாமல் இருந்த கடத்தில்தான் எனக்கு எஸ்.டி.பி.ஐ (S.D.P.I) கட்சியின் ஒட்டன்சத்திய ஒன்றிய செயலாளர் பொறுப்பு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நான் இந்தச் சமயங்களில் அதிகம் முரண்பட்டு வெளியேறவே அதிகம் விரும்பியிருந்தேன். இறுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பில் இருந்து முற்றாக கடிதம் கொடுத்துவிட்டு விலகிய தருணத்தில்தான், என இலக்கின் அறிமுகமாய், கிடைத்தார் ஆளூர் ஷாநவாஸ்.

முகநூலில் அதிகம் கவனித்துக் கொண்டு, அவரால் ஈர்க்கப்பட்ட நான், அவரின் பெயரை கூகுள் உலவியில் அடித்து உலவினேன். அதில் அவரின் வலைப்பூ தளம் எனக்கு அறிமுகமானது. அதில் சென்று, "கடந்து வந்த நாட்களில், நடந்து வந்த பாதைகள்" எனும் அவரின் அணுபவக் கட்டுரையை (http://aloorshanavas.blogspot.in/2010/12/blog-post_31.html) வாசித்த நான் இன்னும் அதிகமாகவே ஈர்ப்பில் சென்றுவிட்டேன் (. இதன் பிறகுகளில்தான் அவரின் கட்டுரைகளை சமநிலைச் சமுதாயம் இதழிலும், கீற்று இணைய தளத்திலும் படிக்க ஆரம்பித்து தொடர்ந்தேன். ஆவணப்படம் என்ற சொல்லாடல்களெல்லாம் எனக்கு இவரிடமிருந்து அறிமுகமானவைகள்தான்.

இதன் பின்னர் மிகச் சரியாக, 10-10-2012 அன்று முகநூல் வாயிலாக அவரைத் தொடர்பு கொண்ட நான், 12-12-2012 அன்று அவரிடம் முதன் முதலில் அலைபேசியில் பேசி மகிழ்ந்தேன். இவரின் எழுத்துக்கள்தான் எனக்கான எழுத்துப் பயணத்தின் ஊக்கங்கல். பள்ளிக் காலங்களில், தினத்தந்தி செய்தி ஏட்டின் மாணவர் ஸ்பெசல் பகுதிக்கு ஏதேனும் துணுக்குகள், கவிதைகள், செய்திகள் என எழுதிப் போடுவேன் அவைகள் சில வெளியாகியும் உள்ளன. அப்பொழுது என்னை ஊக்கபடுத்திக் கொடுத்த  'பாலு' எனும் பள்ளி அசிரியர், இப்போது இந்து முன்னனில் சென்று எனக்கு முற்றும் எதிராக, உள்ளூர் ஜமாத், குடும்பம் என தொல்லைகளை திரை மறைவில் செய்பவராக மாறிப் போய்விட்டார். நான் துணிந்து கணினி உலவி மையம் வைக்க என்ன பாராட்டி, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ரூ.5000 கொடுத்து, அந்த மையத்தினை விலைபேசி முடித்துக் கொடுத்ததில் இவரே பெரிதும் உதவி செய்துள்ளார், என்பது காலத்தால் மறக்க இயலாத நன்றிக் கடன். இவர்தான் எனது முதல் செய்தி ஒன்று தினந்ததியில் வந்தபோது எடுத்துக் காட்டியவர். பின்னர் நான் உள்ளூர் பிரச்சனைகளை எழுதிப் போடுவது, கவிதைகளைக் கிறுக்குவது என்று இருந்து கொண்டிருந்தேன். இதெல்லாம் சில காலங்களிலேயே மறைந்து போய்விட்டன. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, ஈழ மக்களுக்காக நான் கடுமையாக ஒரு கட்டுரையை எழுதி, தனித் தமிழ்நாடு என்ற வடிவில் அதனை அமைத்து தினந்தந்திக்கு அனுப்பினேன். (அப்போது என்ன தெரியும், ஏதோ எனது ஆசிரியர் ஒருவரினால் ஏதோ என கொஞசம் அறிந்த விடயங்களை வைத்து துள்ளினேன், அவ்வளவுதான் ஆனால் பெரிய பார்வையெல்லாம் அதில் இருக்கவில்லை.) இத்தோடு எழுதுவது என்பது மாறிப்போகிவிட்டது.

மீண்டும் எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், நான் 21-12-2014 அன்று 'ஊடகப் போர் வாள்' எனும் கட்டுரையை எழுதினேன். ஆனால் இது எவ்வித கவனத்தையும் பெறவே இல்லை.  ஆளூர் அவர்களின் அரசியல் எழுத்துக்களால் பின்தொடரப்பட்ட நான், இதே டிசம்பரில்தான் வலைப்பூ ஒன்றை உருவாக்கி, அதில் இக்கட்டுரையை பதிவிட்டுக் கொண்டேன். இதற்கு முன்பு நான் அறிந்திருந்ததெல்லாம் யாகூ மெசேஞ்சர், முகநூல், ட்விட்டர், ஆர்குட் இப்படியானவைகள்தான்.

ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் மேல் ஈர்ப்பு வருவதற்கு மிக முக்கியமான இன்னொன்று அவரின், 'விதையாய் விழுந்தவர் -பழனிபாபா' என்கிற ஒரு கட்டுரையும், பழனிபாபாவின் நினைவு நாள் ஒன்றில் அவர் பேசிய பேச்சும் என்றே சொல்வேன். சேகுவேராவிற்குப் பிறகு நான் அதிகம் ஈர்க்கப்பட்டது புரட்சியாளர்.பழனிபாபா அவர்களால்தான். கல்லூரியின் முதலாமாண்டில்தான் எனக்கு பழனிபாபா என்கிற சொல் அறிமுகமானது. நானும் ஏதோ இந்து சாமியார் என்றுதான் நினைத்தேன். பின்னர் இசுலாம் குறித்து பேசிய பொதக்குடி உரையைக் கேட்ட நான், சிலரின் தகவல்களால் அவர் இந்துவாக இருந்து மாறியவர் என்று அறிந்து வைத்துக் கொண்டேன். இன்னும் சில மாதங்கள் கழிந்தப் பிறகுதான் அவர் ஒரு இசுலாமியர் என்றும், பழனி என்பது ஊரின் பெயரைக் குறிப்பது என்றும் அறிந்தேன். இன்னும் ஒன்று நானும் இதே ஊர் என்பதனால், இன்னும் அதிகம் பூரிப்படைந்து போனேன். அதிலிருந்து பாபா அவர்களின் உரைகளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து அதிகம் கேட்பேன், பிறகு கேசட்டுகளை வாங்கிக் கேட்க ஆரம்பத்தேன். இதன் நீட்சியாக ஆளூர் அவர்கள் எழுதிய அந்தக் கட்டுரை எனக்கு இன்னும் ஈர்ப்பை அதிகமாக்கியது. இந்தத் தேடலின் நீட்சிதான் தோழர்.உமர்கயான் அவர்களோடு இணைந்து என்னை புரட்சியாளர்.பழனிபாபா-வின் காலடித் தடங்களை தேடி பயணிக்க வைத்துள்ளது.

சில கட்டுரைகள் வாயிலாக ஆளூரை அறிந்த நான் அவரைத் தொடர்பு கொள்வதற்கு முன்பாக, எனக்கு அறிமுகமான சிலரிடம் அவரைக் குறித்து கேட்டேன். வந்த பதில்கள், 'ஆமாம் இருக்காப்புல, வாய்க்கொழுப்பு அதிகமானவர்", என்றும், அந்தப் பையன் தலைக்கணம்ப்பா, சும்மா இந்த மார்க்சுக்கு பின்பாட்டு பாடிக்கிட்டுத் திரிவாப்புல (இதனைச் சொல்லியவர்கள் இசுலாமியர்கள்தான்) என்கிற விதங்களில்தான் கேள்வியுற்றேன். இதனைத் தொடர்ந்து ஓரிரு வாரங்களுக்குள்ளாகவே அவரோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். இந்த முட்டாள் தனமாக என்னிடத்தில் அவரைப் பற்றி சிலர் எனக்குத் தெரிவித்ததை, நான் அவரிடமே ஒருமுறை அலைபேசியில் கூறியுள்ளேன். இது நான் திருச்சிக்கு ஒரு வேலையாகச் சென்றிருந்த ஒரு நாளில், இரவு நேரத்தில் சுமார் ஒன்றரை மணி நேரமாக பேசிய தருணத்தில் பகிர்ந்து கொண்டது. அவரும், அவரின் காயிதே மில்லத் ஆவணப்பட முயற்சிகளுக்கு, இசுலாமியச் சமூகத்தில் உள்ள தலைவர் ஒருவர் செய்த இடையூறல்களையும் சொல்லிக் காட்டி பகிர்ந்தார். இதன்பிறகு நான் திருச்சி சென்றது தோழர் உமர்கயான் அவர்களோடுதான். தஞ்சையில் மே-17ன் ஆவணப்பட நிகழ்விற்க்காக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்க்குச் சென்றபோது, திருச்சியில் இறங்கி சில மணித்துளிகள் செலவிட்டேன்.
(போராளித் தோழர்.உமர்கயான் அவர்களுடனான முதல் புகைப்படம்)


திருச்சியில் ஆளூர் அவர்களிடம் அலைபேசியில் பேசிய அந்நாட்களுக்கு முன்னரான சில மாதங்களில்தான் நான் 'நிழல்' குறும்பட பயிற்சி பட்டறையில் குறும்பட, ஆவணப்பட விடயங்களுக்கான பயிற்சிகளைப் பெற்றேன். இங்கு செல்வதற்கு முன்னர் கூட, நிழல் நிறுவனம் குறித்தும், செல்லலாம எனவும் நான் வினவியது ஆளூர் ஷாநவாஸ் அவர்களிடம்தான். பிறகு பயிற்சி பட்டறைக்கு சென்று தங்கியிருந்த நாட்களிதான் தெரிந்து கொண்டேன், நிழல்.ப.திருநவுக்கரசு ஐயா அவர்களும், ஆளூர் அவர்களும் தோழர்களென. திருநாவுக்கரசு அவர்களை நான் யூடியூப்பில் சில காணொளிகளில் கண்டு மிகவும் வயது முதிர்ந்தவர் என்றே எண்ணியிருந்தேன் பிறகு நேரில் பார்க்கையில்தான் தெரிந்து கொண்டேன் உண்மை அப்படியில்லையென. மேலும் இவரோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என நான் திட்டம் வைத்துக் கொண்டுதான் பட்டறைக்குப் போனேன். ஆனால் பயிற்சி நாட்களில் உணர்ந்து கொண்டேன் அது தேவையில்லையென. ஏனெனில் அவரின் நெருக்கமான, சகஜமான பழக்கங்களால் எனக்கு அது தோன்றாமலே போய்விட்டது. 
(நிழல்.ப.திருநாவுக்கரசு அவர்கள்டன், திருப்பூரில்)

இதே பயிற்சியின் இறுதி நாளில்தான் ஐயா.பதியம் பாரதி வாசன் அவர்களைச் சந்தித்தேன். அதற்கு முன்பிருந்து அவர் முகநூலின் நட்பு வட்டத்தில் இருந்த மட்டில்தான் எனக்குத் தெரியும். இந்த பயிற்சி நாட்கள் குறித்த எனது விரிவான அனுபவங்களை, நிழல் இதழுக்கு எழுதியிருந்தேன். அது பிரசுரம் ஆகியும் இருந்தது. எனது இந்த வலைப்பூவிலும் அதனை பதிவிட்டுள்ளேன்.

(பயிற்சி நாட்களில், கோவை செட்டிபாளையம், சி.டி ஃபவுன்டேசனில்)



பழனிபாபாவின் வீரிய பேச்சுக்களால் ஈர்க்கப்பட்ட நான், 2013, சனவரி 28 அன்று ஆயக்குடியில் நடந்த அவரின் நினைவுநாள் அரசியல் எழுச்சிக் கூட்டத்திற்குச் சென்றேன். அங்குதான் ஆதித் தமிழர் பேரவையின் தோழர்.நீலவேந்தன் அவர்களை நேரில் முதலில் பார்த்தேன். அதன்பிறகு திருப்பூரில் ஒரு நிகழ்வில் பார்த்ததுதான் இறுதி. அடுத்த சில மாதங்களிலேயே அவர் கொலை செய்யப்பட்டுவிட்டார். இதே கூட்டத்தில் மதிப்புத் தோழர்.பாமரன் அவர்களும், திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி அவர்களும் பேசினார்கள். இதற்கு அடுத்த நாள், விஸ்ரூபம் திரைப்படம் குறித்த புதிய தலைமுறையின் நேர்பட பேசு விவாத அரங்கில் பங்கெடுத்த சீனு ராமசாமி, முதல்நாள் ஆயக்குடியில் பேசிய பேச்சுக்களுக்கு முற்றும் மாற்றாக பேசினார். இதனைக் கண்டுவிடுத்தான் அவரைக் குறித்த ஒருவிமர்சனக் கட்டுரை நான் கீற்றில் எழுதினேன்.(http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/22854-2013-02-04-06-59-47) 
இந்த வகையில் என்னுடைய முதல் அரசியல் புரிதல்களுடன் கூடிய கட்டுரையை கீற்று நந்தன் வெளியிட்டு வழி கொடுத்தார்.  இதன்பிறகு அப்படியே கட்டுரைகள் எழுதத் தொடங்கிவிட்டேன்.

(பதியம்.பாரதிவாசன் அவர்களுடனான முதல் புகைப்படம்)
வெறுமனே அரசியல் கட்டுரைகள் என்கிற மட்டில் சென்று கொண்டிருந்த எஎனக்கு, இலக்கியங்களை நோக்கி நகர்த்தியது, ஐயா.பாரதிவாசன் அவர்களால்தான்.
தருமபுரில் சாதிய வன்கொடுமைக்கு இரையான தோழர்.இளவரசனின் மரணம் குறித்த ஒரு கவிதை வாசிப்பு நிகழ்வுதான் எனக்கான இலக்கிய மற்றும் திருப்பூர் தொடக்கம்.
(கவிதை வாசிப்பின் போது)
(தோழர்.நீலவேந்தன் அவர்களுடனான முதலும், இறுதியுமான படம்)

இதன் பின்னாளான நாட்களில்தான் தொடர்ந்து திருப்பூர் சென்று வர ஆரம்பித்தேன். பதியத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டு அப்படியே தொடர்ந்தேன். இதனடுத்து சிறுகதைகள் எழுத ஆரம்பித்து, தொடர்ந்து சிறுகதைகள்.காம் இணையதளத்தில் எழுதிக் கொண்டுள்ளேன். என் வாழ்வில் வந்துவிழுந்த பேரிடர் இழப்பினை மையப்படுத்தி எழுதிய என சிறுகதைத் தளம்; (http://www.sirukathaigal.com/குடும்பம்/ஓர்-எழுத்தாளனின் மறுபிறவி)

சில மாதங்களில் தாராபுரம் நகரில், சோனி சைபர் சாட், புகைப்பட கருவியை வாங்கிக் கொண்டு, அடுத்த நாள் சென்னை நோக்கிச் சென்றேன். இரண்டு நாட்கள் தங்கியிருந்த நான், அந்தக் கருவி அவ்வளவு அவசரமாக வாங்கப்பட்டதற்க்கான, நபரைச் சந்திக்க 30-10-2013 அன்று அவரது இல்லத்திற்குச் சென்று, மூன்று மணி நேரங்கள் உரையாடிவிட்டு வந்தேனே தவிர அந்தக் கருவி வாங்கப்பட்டதற்க்கான பயன்பாட்டை நான் செலுத்தவில்லை. அதற்க்கான வாய்ப்பு அன்று அமையவே இல்லை.  இதனடுத்து, உள்ளூர் பள்ளிவாசல் ஜமாத் பிரச்சனை, அதனடுத்து எனது இளநிலை படிப்பை மூன்றாவதாக தொடர்ந்த கல்லூரியிலும் பிரச்சனை என, சலிப்புகளோடும், இந்து முன்னனி நபரின் எதிர்ப்புகளோடும், மனக்குமுறல்களோடும் கடந்தது சில மாதம். இப்பிரச்சனைக்காக பலரிடம் சென்று மனு கொடுத்து அதற்க்கென போராடிக் கொண்டிருந்தேன். இன்றும் அது தீர்ந்தபாடில்லை. இதற்க்குள் தொலைநிலைக் கல்வியில் இரண்டு இளநிலையை முடித்துவிட்டேன்.

பிறகு மீண்டும் சனவரி-8-2014 அன்று அவரின் இரண்டாவது புத்தக நிகழ்விற்குச் சென்றேன், அப்பொழுதும் அது சாத்தியப்படவே இல்லை. ஆனால் அன்றைய தினத்தில்தான், தமிழக மக்கள் சனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர், கே.எம்.சரீப் அவர்களையும், முஸ்லீம் லீக்கின் மாநில பொறுப்பாளர்.வழக்கறிஞர்.ஜீவகிரிதரன் அவர்களையும், தேசிய லீக்கின் மாநிலத் தலைவர், தடா.ஜெ.அப்துல் ரஹீம் அவர்களையும், சமூக ஆர்வலரும், ஆவணப்பட இயக்குநருமான, செங்கிஸ்கான் அவர்களையும் சந்தித்துப் பேசினேன். இதுதான புரட்சியளர்.பழனிபாபா அவர்களின் 'வாழ்வும் போராட்டமும்' எனும் வரலாற்று நூலுக்கான முதல் சந்திப்புகளும் கூட.
இதன் பிறகு இந்தப் புத்தகத்திற்க்காக பல்வேறு சந்திப்புகள், பல்வேறு ஆளுமைகளுடனான தொடர்புகளென, எனக்கான வட்டம் விரிவடைந்து கொண்டது.

இதன் பிறகான காலங்களில், ஆளூர் அவர்களுடனான மெல்லிய இடைவெளிப் போக்கு அதிகரித்தது. அவருடனான பேச்சுக்கள் முற்றும் குறந்து போயின. காரணம் நான் அவரை தவறாக எடை போட்டதின் மடமைகள் அவை. அவரின் எழுத்துக்களை அரசியலுக்கான இலாபியாக, அவரின் சுயத்திற்க்கான இலாபியாக எண்ணிக் கொண்டேன். சனவரி-28-2014 பழனிபாபா நினைவு நாள் கூட்டம் முடித்துவிட்டு, ஒரு கட்சியின் மாநிலப் பொறுப்பில் உள்ள ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில் அவரும் என் மனதில் அரும்பிய கருத்தினை வளர்த்துவிடும்படி, எழுத்துக்களை தனக்காக, கட்சிக்காகப் பயன்ப்டுத்திக் கொள்கிறாரென கூறினார். அதிலிருந்து சில மாதங்கள் தொடர்புகள் அற்றெ இருந்துவிட்டேன். 
ஆனால், சமீபத்தில் சென்னை சென்ட்ரலில் குண்டு வெடித்ததை ஒட்டி, முன்னர் கைது செய்யப்பட்ட ஜாஹிர் உசேன்தான் காரணம் என்பதைப் போல, கலைஞர் கருணாநிதி வெளியிட்ட அப்பட்டமான சிறுபான்மை விரோதப் போக்கை கண்டித்து, மிகச் சரியாக ஆளூர் அவர்கள் தனது முகநூலில் கருத்து வெளியிட்டார். அது மிகவும் சர்ச்சைக்கும், திமுக நபர்கள் பலரையும் அவரை நோக்கி எதிர்ப்பாகத் திருப்பியது.
இந்த சம்பவத்திற்கு பிறகுதான் அவருக்கு நான் அழைத்துப் பேசினேன். அருமையான பதிலடி என்று அவருடன் பகிர்ந்தேன்.

அப்பொழுது நான் கேட்டேன், இதனால் உங்களின் எதிர்கால அரசியல் பாதிக்காதா என்றேன். அதற்கு அவர் சொல்லியது:
"என்னைக் கொண்டுவந்தது சமுயதாயக் களங்கள்தான். பதவி என்பது என்னுடைய தகுதிக்கு கிடைத்ததே தவிர, அது எனக்கான கடிவாளமில்லை. சமூகத்தை நோக்கி இப்படி வருகிறபோது, அதனை நாம் சரியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர, பதவி எதிர்காலம்னு சுருங்கக் கூடாது"
என்ற வண்ணம் தெரிவித்தார்.

சமீபத்திலேதான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக பதவி பெற்றவர். விடுதலைச் சிறுத்தையானது திமுக-வின் கூட்டனிக் கட்சி, இப்படி இருக்க இவர் எப்படி கலைஞரை எதிர்த்து பேசினார் என்கிற சிந்தனையும்,
இவருக்கு அதிகம், ஆரம்பத்திலே காட்சி ஊடக முகம் கொடுத்தது புதிய தலைமுறை அது பாஜக பக்கம் சாய்ந்தது, இதேபோல் கேப்டனும் சாய்ந்து கொண்டது. ஆதாலால் அவர்கள் இவரை அழைப்பது இயலாலதது. என்றேனும் வேண்டுமானால் நடக்கலாம். இந்த நிலையில் இவர் ராஜ் நியூஸ், இமயம் டிவி போன்ற சேனல்களில் வந்தாலும், கலைஞர் செய்திகள்தான் தற்போது இவரை அழைத்துக் கொண்டிருக்கும் பெரிய ஊடகம், இந்த நிலையில் கலைஞரை விமர்சனம் செய்துள்ளாரே, இனி கலைஞர் செய்திகள் எப்படி கூப்படிப் போகிறார்களென்கிற சிந்தனையும் எனக்கு அழுத்தமாகவே இருந்தது. அவரை நினைத்திருப்பாரோ என்னவோ, நான் இப்படித்தான் நினைத்தேன்' \கொஞ்சம் அமைதியாக இருந்திருக்கலாம், ஒரு பொதுச் சமூக கட்சியில் மாநில பொறுப்பில் சென்றுள்ள இவர் ஏன் இப்படி செய்ய வேண்டும், இவரின் இடம் இன்று மிக முக்கியத் தேவை, கொஞசம் கவனமாகக் கையாண்டிருக்கலாம் அல்லவா?| என்றுதான்.
ஆனால் இதுபற்றியெல்லான் அலட்டிக் கொண்டவராக அவர் தெரியவில்லை, 'பதவி கடிவாளமில்லை' எனச் சொல்லிய ஒற்றைச் சொல்லில் அவரின் மீதான அத்துனை தப்பபிப்ராயங்களும் உடைந்து போய்விட்டன. 

சரி விடயத்திற்கு வருகிறேன்....
இருமுறை வாய்ப்பு இருந்தும், அந்தக் கருவி வாங்கியதற்க்கான முதல் எண்ணம் நிறைவேறவே இல்லை. இது சரியாக நிறைவேறியது 12-07-2014 சனிக் கிழமை அன்றுதான். அன்று அவரைச் சந்திக்க அவரது எக்மோரில் உள்ள விட்டிற்கு உற்ற தொஒழர்.ஷாஜஹான் அவர்களோடு சென்றேன். அப்பொழுது எடுக்கப்பட ஒளிப்படம்தான், ஆளுர் அண்ணனோடு எடுத்துக் கொண்ட முதல் படம். இதைத்தான், தொடக்கத்தில் பதிவிட்டேன்.


(தோழர்.உமர்கயான் மற்றும் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுடன்)

(தோழர்.ஷாஜஹான் மற்றும் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுடன்)

பிறகு மீண்டும், 13-07-2014 அன்று மீண்டும் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம், அப்போது தோழர்.ஷாஜஹான் மற்றும், போராளித் தோழர்.உமர்கயான் அவர்களும் உடனிருந்தனர். இந்த சந்திப்புதான் மகிழ்ச்சித் தருணமென நான் தலைப்பாய்க் குறித்திருப்பதற்க்கான நிகழ்வாகும். எந்த ஆளுமையிடம், எப்படி இருக்க வேண்டுமென நினைத்தேனோ அது அநேகம் நிறைவேறிய நாள் அது. பழனிபாபா அவர்கள் குறித்த நிறைய ஆவணங்களை சேகரித்து வைத்திருந்த ஆளூர் அண்ணன், அதனை அப்படியே எங்களுக்குத் தந்து உதவினார். இது அவரின் பத்தாண்டுகால சேகரிப்புகள் என்றும் குறிப்பிட்டார். நாங்கள் இதுவரை எட்டு மாதங்கள், பழனிபாபாவின் காலடித்தடத்தைத் தேடி நெடிய பயணங்களையும், அதிக சந்திப்புகளையும் நிகழ்த்தியிருக்கிறோம், யாரும் இவ்வளவு எளிதில், அதுவும் இவ்வளவு ஆவணங்களை கொடுத்ததே இல்லை. அவர்களிடம் இருந்தாலும் கூட அலைக்கழிப்புச் செய்தனரே தவிர உடனே தந்திடவில்லை. பலர் இருந்தும் தரவில்லை. சிலர் தராவிட்டாலும், தொடர்ந்து வேலை நடக்கவிடாமல், மறைமுக, கீழறப்பு இடையூறல்களை இடைவிடாது செய்தும் வருகின்றனர். எனினும், தோழர்.உமர்கயானின் உறுதுணையால் பழனிபாபாவின் வரலாறு நிச்சயம் பரிபூரணம் அடையும், விரைவில்.
இந்தச் சந்திப்பில், ஆளூர் அவர்களுடன் சாலையில் ஒருசேர பேசிக் கொண்டே நடந்ததும், எக்மோர், மதிமுக தலை அலுவலகத்திலிருந்து, கே.கே.நகர் அசோக் பில்லர் வரை அவருடன் ஆட்டோவில் அருகில் அமர்ந்து (இடம் பற்றாமல், தோழர்.உமர்கயானின் காலில் அமர்ந்து கொண்டு பயணித்தேன்)
உரையாடிக் கொண்டே சென்றோம். எங்களுக்கு பேருந்து நேரம் நெருங்கிவிட்டதால், எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களைச் சந்திக்கின்ற வாய்ப்பு அன்று அமையவே இல்லை.

எனக்கான, பல பார்வைகளில் உதித்த ஒரு ஆளுமையினுடனான நெருக்கமான அந்த நாட்களை என்றும் நினைவில் கொள்ளத் தக்கது. 

இந்த இடங்களில், என்னை இலக்கியத் தடங்களில் திருப்பிட்ட பாரதி வாசன் அவர்களை குறிப்பிட்டுள்ள நான், தோழர் உமர்கயான் அவர்களை சிறிய அளவில் குறிப்பிட்டு நகர்ந்துள்ளேன். உமர்கயான் தோழரின், தொடர்புகள், பழக்க உறவுகள், தோழமையாய் மாறிப் போன சமபவங்கள், வீழ்ந்தபோது என்னைத் தூக்கிவிட்ட உடன்பிறப்புச் செயல்கள், புரட்சியாளர்.பழனிபாபாவின் நூலிற்க்கான அயராது தனது பலவேலைகளையும் விட்டுவிட்டு என்னோடு அயற்சி அடையாது பயணிக்கும் அவரின் தியாகங்கள், எனக்கான ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தவைகள் என பலவற்றையும் விரிவாக, இன்னொரு தருணங்களில் நிச்சயம் பேச வேண்டிய, அவசியம் எழுத வேண்டிய ஒன்று. அதற்கு முன்னோட்டமாய் ஒன்றைக் குறிப்பிட்டுக் கொள்கிறேன், அவர் ஒரு போராளித்.தோழர்.

தோழமையுடன்
பழனி ஷஹான்

Monday, 7 July 2014

வாழ்வுரிமைப் போராளி – பழனிபாபா



“சிறுபான்மை மக்களின் ஜீவாதார உரிமைகளுக்கு உரத்த குரல் கொடுப்பது ஒரு பெரிய குற்றமென்றால், அந்த குற்றத்தை மீண்டும், மீண்டும் செய்வேன். மதச்சார்பற்ற நாட்டை ஹிந்துஸ்தானமாக்க அதிகாரிகள் செயல்பட்டால் அதனை அடித்து நொறுக்கி நாட்டின் பழம்பெருமை காப்பேன். அதனை குற்றமென்று சொன்னால், அக்குற்றத்தை பலமுறை செய்வேன். மக்களை திரட்டி நியாயம் சொல்லி, நியாயமான ஒரு அரசை கட்டமைக்க எண்ணுவது குற்றமென்றால், அப்படிப்பட்ட குற்றவாளியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்”
என்ற கர்ஜனை வரிகளுக்குச் சொந்தக்காரர்தான் அஹ்மத் அலி எனும் இயற்பெயர் கொண்ட பழனிபாபா. 

பழனியை அடுத்த ஆயக்குடியில் முதலாளிக் குடும்பம் என அழைக்கப்படும், மிகவும் செல்வந்தக் குடியில் 14-11-1950-ல் பிறந்தார். குன்னூரில் தனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு, கல்லூரி பயில தனது தாய்மாமன் வீடுள்ள ஆயக்குடியில் தங்கலானார். இக்கல்லூரி காலத்திலே அவர் தனது பொதுவாழ்வை, 1969-ம் ஆண்டைய முஸ்லீம் லீக் மேடை ஒன்றில் துவங்கிவிட்டார். அதன்பிறகு மேற்பட்டிப்பிற்க்காக டெல்லி சென்ற அவர், ஐந்து துறைகளில் முனைவர் பட்டம் பெற்று பின் தமிழக அரசியலில் நேரடியாக களமாடினார்.

பழனிபாபாவின் குடும்பம் மிகவும் செல்வந்தக் குடும்பமாக இருந்தமையால் அவருக்கு எம்.ஜி.ஆர் நெருங்கிய நண்பராக இருந்தார். அவரின் மூலம் இந்திராகாந்தி அவர்களின் நட்பும் அவருக்கு ஏற்ப்பட்டது. எண்பதுகளின் ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமான அரசியலில் அவரை ஆதரித்துச் செயல்பட ஆரம்பித்தார். அன்றைய தினம் எம்.ஜி.ஆர் அவர்கள் அ.தி.மு.க-வை ஆரம்பித்த வேளை அவருக்கு மிகவும் நெருக்கடிக்கள் அரசியல் ரீதியாக ஏற்ப்பட்டது. மேலும், அவரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம், கூட பெரிய சவாலுக்கு உள்ளானது. இந்த தருணங்களில்தான் பழனிபாபா அவருக்கு மிகவும் உதவினார். பின்னர் காலப்போக்கில் பழனிபாபா, எம்.ஜி.ஆரால் ஏமாற்றப்பட்டார். 

இந்து முன்னனி எனும் அமைப்பை எம்.ஜி.ஆர் முன்னின்று தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதும், அதனை பாபா எதிர்த்ததும், பின்னர் இதற்க்காக சென்னை கோட்டைக்குள் நுழைய பாபாவிற்கு தடை என்கிற அரசானை அறிவுப்பும், பழனிபாபாவை பலரும் திரும்பி பார்க்க வைத்தது எனலாம். 

ஒருமுறை, அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான, கலைஞர்.கருணாநிதி அவர்கள், தமிழக சட்டமன்றத்தில் சில புகைப்படங்களைக் காட்டி, முதலமைச்சரின் மூக்கின் நேராக விரல் நீட்டி பேசும் அளவிற்கு இவருக்கும், முதல்வருக்கு என்ன நெருக்கமென கேள்வி எழுப்பினார். அந்த சட்டமன்ற விவாதத்தினோடு, அந்த புகைப்படமும் சேர்ந்து மறுநாள் நாளேடுகளில் வெளியானது. அதில் பழனிபாபா, எம்.ஜி.ஆரின் மூக்கின் நேராக விரல் நீட்டி கேள்வி எழுப்பும்படியாக இருந்தது. இதுவும் மிகப்பெரும் சர்ச்சைக்குள்ளாகி பழனிபாபாவை திரும்பிப் பார்க்க வைத்தது. எம்.ஜி.ஆருடன் முரண்பட்ட பழனிபாபா அவரிடமிருந்து வெளியேறினார். பழனிபாபாவின் ஆவேசப் பேச்சுக்களால், அவர் செல்லும் இடமெல்லாம் இளைஞர்களால் ஈர்க்கப்பட்டார். இதனை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட கலைஞர், பாபாவை தி.மு.க பக்கம் இழுத்துக் கொண்டார். 1985-களுக்குப் பிறகிலிருந்து அவர் 90 கால கட்டம் வரை தி.மு.க-விற்க்காக ஊர் ஊராக பிரச்சாரம் செய்துள்ளார். இறுதியில், ‘ஹிந்துக்கு ஆபத்து, ஹிந்துஸ்தானத்திற்கு ஆபத்து’ எனும் விசமக் கருத்துக்களை பரப்பும் விதமான இந்துமுன்னனி தலைவர் இராமகோபாலய்யரால் எழுதப்பட்ட நூலிற்கு மறுப்பாக பழனிபாபா ஒரு நூலை எழுதினார், இந்த நூலை தடை செய்தது மட்டுமல்லாது, பழனிபாபாவை எட்டு மாதம் சிறையில் அடைத்தார் கலைஞர். இதன்பிறகு தி.மு.க-வினாலும் முதுகில் குத்தப்பட்டார் பழனிபாபா. இவர் எட்டு மாதம் சிறையில் இருந்த கால கட்டத்தில்தான், மருத்துவர்.இராமதாஸ் அவர்களின் நட்பு ஏற்ப்பட்டது. இதன் நீட்சியாக அவர் விடுதலையாகி வெளியே வந்ததும், வன்னியர் சங்கங்களை ஆதரித்தும், பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரித்தும் களமாடினார்.

தொண்ணூறுகளிலிருந்து அவர் படுகொலை செய்யப்படும் சற்று முன்னர் வரையிலான நாட்கள் வரை அவர் பாட்டாளி மக்கள் கட்சிக்காக மிகத் தீவிரமான பரப்புரையை மேற்க்கொண்டார். அன்று பா.ம.க ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட்ட ஒன்றாகத்தான் இருந்தது. சமீபத்திய காலங்களில்தான் அது சாதிய அரசியலை முன்னெடுத்துள்ளது.

பழனிபாபா என்றதும் அவர் ஒரு இசுலாமியத் தலைவரென்கிற மட்டில்தான் பலர் அறிந்து வைத்துள்ளனர். ஆனால் உண்மை அப்படியானதாக இல்லை. அவர் ஒடுக்கப்படும் அத்தனை சமூகத்திற்க்காகவும், தனது வாழ்நாளின் இறுதிவரை போராடியவர். அந்நியப்படுத்தப்படும், தாழ்த்தப்படும் சமூகங்களின் விடியலுக்காகவும், வாழ்வுரிமைகளுக்காகவும் போராடியவர். இசுலாமிய தளத்தில் இருந்து வெளிப்பட்ட எந்த தலைவர்களும் இவரைப் போன்ற தெளிந்த அரசியல் பார்வைகள் கொண்டவர்களாக இருந்ததில்லை. அதனால்தான் இவரின் அரசியல் நடவடிக்கைகள் பலதும், இசுலாமியக் கட்சிக்காரர்கள் சிலராலே அவ்வப்போது விமர்சிக்கப்படது.

‘மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு முன்னால் இந்த இந்து மதத்தின் ஏற்றத் தாழ்வுகளை தாங்கிக் கொள்ளாது, இழிவு நீங்க இசுலாம் எனும் மார்க்கத்தைத்தான் ஏற்றுக் கொண்டோமே தவிர, நாங்கள் அரேபியர்கள் அல்ல. நாங்கள் இம்மண்ணின் மைந்தர்கள். ஆரிய பார்ப்பன கும்பல்களைப் போல வந்தேறிகளல்ல நாங்கள்” என பழனிபாபா பலமுறை கூறியுள்ளார். இசுலாமெனும் மார்க்கத்தைத்தான் இறக்குமதி செய்தோமே தவிர, நாங்களே இறக்குமதியானவர்களில்லை என்றும் சொல்வார்.

இந்த தெளிவான புரிதல்களினால்தான் பழனிபாபா, பண்முகக் களங்களில் களாமாடினார். வெறுமனே இசுலாமியர்களுக்கு மட்டும் உழைக்காது, குரல் கொடுக்காது, ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழ் தேசியத்திற்க்காகவும் போராடியவராக இருந்துள்ளார். தமிழக மண்ணிலே ஈழத் தமிழர்களை ஆதரித்துப் முதன்முதலில் சீரடி அரங்கிலே கூட்டம் நடத்தியவர் என்கிற பெருமைக்கும், அதற்க்காக 48-நாட்கள் சிறைப்பட்டவர் என்கிற தியாகத்திற்க்கும் சொந்தக்காரர்தான் பழனிபாபா. இராசீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறாகான நாட்களில் இங்குள்ள பெரும் தலைவர்களெல்லாம், விடுதலைப் புலைகளைப் பற்றியோ, ஈழ மக்களுக்காகவோ பேச அச்சப்பட்டுக் கொண்டும், சிலர் ஒழிந்து கொண்டும் இருந்த கட்டத்திலே பழனிபாபா துணிச்சலாக, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு, பிரபாகரனுக்கு ஆதரவு தருகிறேனெனப் பேசினார். மேலும் இராசீவ் கொலை வழக்கில் அநீதமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழர்களுக்காக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாது, கொலையில் காங்கிரசின் பங்கீட்டையும் அன்றே பேசியவர்தான் பழனிபாபா.
“அடிமைப்பட்டு கிடக்கும் சமூகத்திற்க்கு தனிநாடுதான் (தமிழ் தேசியம்) தீர்வென்றால், அத்தகைய ஒன்றிற்க்காக நாமும் (இசுலாமியர்கள்) சேர்ந்து தியாகம் செய்ய வேண்டியது நமது கடமை” என்ற வண்ணம் வெளிப்படையாக தனித் தமிழர் நாட்டிற்க்காக அன்று ஆதரித்த ஒரே இசுலாமிய மதம் தாங்கிய தலைவர் இவர் மட்டும்தான். மறைந்த.காயிதே மில்லத் அவர்கள் ஒருமுறை பாராளுமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டுமென குரலெழுப்பியுள்ளார். மற்றபடி இனத்தின் அடிப்படையில் அரசியல் செய்த ஒரே இசுலாமியத் தலைவர் பழனிபாபா மட்டும்தான்.

இதனால்தான், பாவலரேறு.பெருஞ்சித்திரனார், நெடுமாறன், தமிழரசன், விடுதலைப் புலிகள் தலைவர்.பிரபாகரன், போன்ற தமிழ் தேசிய போராளிகளுடனும், மருத்துவர்.இராமதாஸ், மருத்துவர்.சேப்பன், தலித் எழில்மலை, பேரா.தீரன், பேரா.கல்யாணி, பேரா.அ.மார்க்ஸ், தொல்.திருமாவளவன், ஜான்பாண்டியன், பசுபது பாண்டியன் போன்ற ஒடுக்கப்படும் சமூகங்களுக்கான அரசியலை முன்னெடுப்போர்களின் உடனுமே அதிகம் பயணித்தாரே ஒழிய, வெறுமனே இசுலாமியர்கள் என்கிற மட்டில் அவர் என்றுமே சுருங்கியதில்லை. இவரின் இன்னொரு அரசியலானது மிகவும் கூர்நோக்கிய பார்வை கொண்டது. இன்று இங்கு தலித்துகளுக்காக பேசுபவர்கள், பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்காக குரலெழுப்புவதில்லை. அதேபோல பிற்ப்படுத்தப்பட்டோருக்கான அரசியல் செய்வோர் தலித்துகளுக்காகவோ, சிறுபான்மையினருக்காகவோ பேசுவதில்லை. ஆனால் பழனிபாபா என்கிற அரசியல்கர்த்தா, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் அத்துனை சமூகங்களையும் ஒன்றிணைத்து, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடியவராக இருக்கின்றார். மத நல்லிணக்கம் என்பது இயலாதது, சமூகங்களிடையே நல்லிணக்கம்தான் சாத்தியம் என்கிற புரிதலையும் கொண்டிருந்தார்.

இவர் மீது வன்முறையாளர், தீவிரவாதி என்கிற ஒரு பொதுச் சித்திரம்தான் இன்று இம்மண்ணில் வரையப்பட்டுள்ளது. இது ஆர்.எஸ்.எஸ் சங்கபரிவாரங்களின் ஒப்பாரிகள்தானே ஒழிய வேறொன்றுமில்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு என்றுமே நேதாஜி அவர்கள் தீவிரவதிதான், பகத்சிங் தீவிரவாதிதான். அந்த வகையில் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு பழனிபாபா தீவிரவாதிதான். உயர்திரு.பெரியார் அவர்கள் இம்மண்ணில் பார்ப்பனியத்திற்கு எதிராக எவ்வாறு களமடினாரோ, அதேபோன்றதொரு களத்தைத்தான் பழனிபாபாவும் பார்ப்பனர்களுக்கு எதிராக முன்னெடுத்தார். பெரியாரையும், அம்பேத்கரையும் மிகவும் உயர்த்திப் பிடித்தவர் பழனிபாபா.
“புனித பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதா?, ஹிந்துக்கு ஆபத்து ஹிந்துஸ்தனத்திற்கு ஆபத்து – இராமகோபாலய்யருக்கு மறுப்பு, WHO IS LAW ABIDING ON THE ISSUE OF BABRI MASJID?,போன்ற புத்தகங்களையும்” “அல்முஜாஹித், முக்குல முரசு, புனிதப் போராளி’ போன்ற பத்திரிக்கைகளையும் நடத்தினார்.

புனித பைபிளில் உள்ள பல முரண்பட்ட கருத்துக்களை சில மேடைகளில் பேசியுள்ளார். அதேசமயம் அவர் கிருத்துவ புனித நூலில் உள்ள முரண்பாடுகளைத்தான் சாடினாரே ஒழிய கிருத்துவர்களை அல்ல. ஒருமுறை ஈரோட்டில் தலித் கிருதுவர்கள் தேவாலத்தியத்திற்க்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதனை அறிந்தவர், உடனே அங்கு சென்று தேவாலயத்தின் முன்பு நுழைவுப் போராட்டம் நடத்தியவராகவும், தலித் கிருத்துவர்கள் செல்ல சிறைப்பட்டவராகவும் இருந்துள்ளார்.

மேலும் பழனிபாபா என்றதும் இன்னொரு பிம்பும் திட்டமிட்டு பரப்படும். அது அவர், செல்லும் இடமெல்லாம் இந்துக்களை மதமாற்றம் செய்தார் என்கிற குற்றச் சாற்றாகும். ஆனால் உண்மை என்னவெனில், பழனிபாபாவினோடு பல ஆண்டுகள் உடன்பயணித்த மருத்துவர் சேப்பன் தன்னுடைய நூல் ஒன்றிலே குறிப்பிடுகிறார், பாபா ஒருபோதும் இசுலாத்திற்கு அழைக்கமாட்டார், அவர் இசுலாத்தின் மாண்புகளை மட்டும்தான் பேசுவார். அதில் தெளிவுபெற்றவர்கள் இசுலாத்தினை மேடைக்கே வந்து ஏற்றுக் கொள்வர். இத்தனை ஆண்டுகள் உடனிருந்து என்னைக் கூட அவர் இசுலாத்திற்கு அழைக்கவில்லை, மாறாக மாண்புகளைக் கூறியுள்ளார், என்கிற வண்ணம் பதிவு செய்துள்ளார். இது இந்துத்துவச் சக்திகள் பழனிபாபாவின் மீது தூற்றும் இன்னொரு பழி சொல்லுக்கான தெளிவான உண்மையான பதிலடியாகும்.

இறுதியாக பழனிபாபாவின் மீது இசுலாமிய மற்றும் பொதுச்சமூகங்களின் விமர்சனங்களானது, ‘அவர் திருமணம் செய்யாமல் வாழ்ந்தார் என்பதும், தனக்குப் பின், தன்னுடைய பார்வையில் பின் தொடரும் தேர்ந்த தலைமைகளை உருவாக்காமல் சென்றுவிட்டார் என்கிறவைகள்தான். இது இரண்டுமே அவருக்கு இயலாத காரியமாக போயிற்று. தொடர்ந்து கூட்டம், சிறை, வழக்கு, பாதுகாப்பற்ற சூழல், மேலைநாட்டுப் பயணங்கள், இப்படியாக அவரின் பொதுவாழ்வு மிகவும் துன்பகரத்திற்க்குள்ளானதாக இருந்துள்ளது. மேலும் இன்னொன்று அவர் ஒரே ஒரு இடத்தில் இமானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டதில் பசும்பொன் தேவர் தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று பேசியுள்ளார். இது பழனிபாபாவின் மீது ஒரு சின்ன சங்கடத்தை சிலருக்கு ஏற்ப்படுத்தும் விதமாக இருக்கலாம். ஆனால் அவர் இமானுவேல் சேகரன் கொல்லப்பட்டது அநீதியென்றும், அவர் ஒடுக்கப்படும் சமூகங்களுக்காக போராடியவர் என்பதிலும் மாற்றுக் கருத்து கொண்டவரல்ல.

தனது வாழ்நாளில் 5147 மேடைக் கூட்டங்களில் பேசியும், 137 வழக்கும், 125முறை சிறையும், அதில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில். மூன்று முறையும், தடா சட்டத்தில் ஒருமுறையும் அடங்கும். இந்திய வரலாற்றிலேயே சிறைக்கே செல்லாமல், வெளியில் இருந்து கொண்டே நீதிமன்றத்தின் மூலம் தடா வழக்கை முறியடித்த வரலாறு பழனிபாபாவிற்கு மட்டுமே உண்டு. வழக்கறிஞர்களில் இவர் அளவுக்கு வழக்குள், சிறைகள் கண்டவர்களும் இங்கு கிடையாது. மேற்ப்படி 137 வழக்குகளிலும் நிரபராதியாக, குற்றம் நீருபிக்கபடாமலே விடுதலையாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இசுலாமியக் களம், தமிழ் தேசியக் களம், ஈழத்தமிழர்கள், விடுதலைப் புலிகள் ஆதரவு, தேசிய இனச் சிக்கல்கள், வட இந்தியத் தமிழர்களுக்கான குரல், பிற்ப்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கான அரசியல், இன ரீதியான அர்ப்பணிப்பு, மொழிப்பற்று, இடுக்கிற்க்குள்ளாகும் உலக அளவிலான இனத்திற்க்கான குரல், பார்ப்பானிய எதிர்ப்பு, ஏகாதிபத்தியச் சாடல், தான் சார்ந்த சமூகத்தின் மேல் இருக்கும் குறைகளையும் பொது வெளியிலயே சுய விமர்சனம் செய்யும் பாங்கு என பண்முகக் களங்களில் பேசி, போராடி மாய்ந்தவர் பழனிபாபா.

இறுதிவரை பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர்.இராமதாஸை எவ்வளவோ நம்பி பிறகு அவராலும் ஏமாற்றப்பட்டார். அதனால்தான் அவர் 1996 சட்டமன்றத் தேர்தலோடு பா.ம.க-விற்க்கான இறுதி ஆதரவை நிறுத்திக் கொண்டார். இதன்பின்னர் தன்னுடைய கருத்தியலின் மூலம் தானே ஒரு அரசியல் கட்சியினை தொடங்க திட்டமிட்டு ஆவேசப் பேச்சுக்களைத் தவிர்த்து விவேக நடவடிக்கைகளில் அமைதியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நாட்களில் அவர் பொள்ளாச்சியில் தனது நண்பர் தனபாலின் வீட்டில் இருந்து வெளியேறி தனது ஜீப்பில் ஏற முயலும் தருணத்தில், இரவு ஏழு, ஏழரை மணியளவில், ஜனவரி 28, 1997-ல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினாரால் படுகொலை செய்யப்பட்டார்.

வரலாற்றில் பழனிபாபா என்பவர், பல கட்சிகளை நம்பி ஏமாந்தவராக உள்ளார். தன்னுடைய சமூகத்திற்கு, இனத்திற்கு, ஒடுக்கப்படுதலில் இருந்தும், அந்நியப்படுத்தப்படுதலில் இருந்து ஒரு விடிவை வேண்டியே அவர் அரசியல் கட்சிகளை ஆதரித்தார். ஆனாலும் அவர் ஒருபோதும் எந்தவொரு கட்சியிலும் உறுப்பினராகக் கூட இருந்திருக்கவில்லை. மக்களின் நலனுக்காகா கட்சிகளை நம்பி, நம்பி ஏமாற்றப்பட்டார். தன்னுடைய வாழ்நாள் இறுதிவரை மக்களே விழிப்புணர்வு கொள் என்றுதான் சொல்வேனே தவிர, மரணம் வந்துவிட்டதே என அஞ்சிடப் போவதில்லை, இலட்சியவாதிகளுக்கு ஏதடா மரணம்? என முழக்கமிட்டபடியே வாழ்ந்தவர்.

எதிரிகளின் கைகளால், வெட்டுப்படுச் சாகும் வீரமரணம்தான் வேண்டுமென மேடைகள் தோறும் அவர் வேண்டியபடியே, அவர் இத்தேசத்தின் நாசகரச் சக்திகளின் கைகளால் 16 வெட்டுக்கள் சரமாரியாய் தாங்கி குடல் சரிந்து வீர மரணத்தை எய்து, ஆயக்குடி மண்ணிலே விதையாய் புதைக்கப்பட்டுள்ளார்.

தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கப்படுவோருக்கும், பிறப்பால் இழிபழி சுமத்தி தாழ்த்தப்பட்டோருக்கும், பேரினவாதிகளால் சூறையாடப்படும் சிற்றினத்தாருக்குமான சம அந்தஸ்துடைய வாழ்வாதரங்களை முன் வைத்து சுழன்ற வாழ்வுரிமைப் போராளி பழனிபாபா.!


நன்றி : கலகம் மாத இதழ்
(மே-2014 கலகம் இதழில் வெளியான கட்டுரை இது)

மேலும் இதனை இணைய இதழில் வெளியிட்ட புனிதப் போராளிக்கும் நன்றி!
தளம் : http://punithaporali.com/?p=165
தோழமையுடன்
பழனி ஷஹான்






நானறிந்த காதல்!


அன்பு,பாசம்,பிணைப்பு,நேசம் இவை போன்ற உணர்வுகளின் ஒரு கவர்ச்சிகரச் சொல்லாடலே காதல் எனப்படுவது. இந்த அளவுகோலில் இருந்துதான் காதலை நாம் நோக்க வேண்டும்.

“காதல் எங்கு இருக்கிறதோ, அங்குதான் வாழ்க்கை இருக்கிறது” என்று கூறினார் அண்ணல் காந்தி அவர்கள்.

“காதல் பேய் மாதிரி, எல்லோரும் அதைப் பற்றி பேசுவார்கள். ஆனால், சிலருக்குத்தான் அது தெரியும்” என்று ஒரு வரைவிலக்கணம் தருகிறார், திரு.லே-ரோச்சிஃபோகால்ட்.

இப்படித்தான் நாம் காதலைப் பார்க்க வேண்டியுள்ளது. அன்பு என்பதின் ஆகச்சிறந்த பரிணாமமே காதல். இப்பிரபஞ்சத்தில் படைக்கப்பட்டுள்ள அத்துனை உயிர்களும் காதலால் பிணையப்பட்டுள்ளவைகளே. பரந்து விரிந்த இப்பூமியில் எங்கும் வியாபித்துள்ளது காதல். நமக்கெல்லாம் அநேகமாக இது மனித இனத்திற்க்குண்டான ஒரு சொத்தாக மட்டுமே பார்க்கப்படுகின்றது. இது முற்றிலும் அறிவுக்கு ஒவ்வாத ஒரு பார்வை. காதலானது, பூக்கும் மலருக்கும், செடிக்கும் இடையில் உள்ளது. ஒரு பறவைக்கும் அதன் குஞ்சுக்கும், முளைக்கும் தாவரத்திற்க்கும், மண்ணிற்க்கும், இப்படித்தான் இன்ன பிற விலங்குகளுக்குமாக காதல் ஊன்றி இருக்கிறது. காதல் என்பது வெறும் ஊடல் சார்ந்த நிகழ்வல்ல, அது உயிரின் நுட்பம்.

பலரும் இவைகளை மறந்துவிடுகின்றனர் அல்லது அறியாதிருக்கின்றனர். இளம் பருவ, இரு பாலினர்களுக்கிடையே உருவெடுக்கிற சில அற்பத் தேடல்களுக்குக் கூட இங்கு காதல் ஒரு குறியீடாக காட்டப்படுகிறது. ஆனால் ஒரு தாய்க்கும், சேய்க்குமான பாசமோ, சகோதரர்களுக்கிடையேயான பந்தமோ, நல்ல நட்புகளுக்கு இடைப்பட்ட உறவோ இங்கு அவ்வாறாகப் பார்க்கப்படுவதில்லை, குறிப்பாகக் காட்டப்படுவதில்லை.

காதல் எனும் ஒரு இயற்கை உணர்வை, ஆபாசமாகச் சித்தரிப்பதில் பெரும்பாலும் இன்று ஊடகங்கள் முன்னனியில் உள்ளன. அதன் அசுர வளர்ச்சியில் இருக்கும் சினிமா இன்றியமையாதப் பங்கினை ஆற்றுகிறது. திரைப்படங்கள் யாவுமே இலக்கியங்களின் பிரதிபலிப்புகளே. இலக்கியங்கள் யாவும் வாழ்வின் பிரதிபலிப்புகளே. ஆனால் அவ்விலக்கியங்கள் எடுத்து இயம்புகின்ற நற்க்-காதல் உறவுகளை ஊடகங்கள் மறந்து விடுகின்றன. ஒரு பெரும் கலாச்சார, நாகரீக அழிவுகளுக்கு வித்திடும் மேலை நாடுகளின் கவர்ச்சிகள் இங்கு காதலாகப் பிண்ணப்படுகிறது.

பிப்ரவரி-14 என்கிற தினமே கூட காதலை முன்னிலைப்படுத்தும் நிகழ்வாக இல்லை. காதலுக்கு என்று எந்த தினமும் கிடையாது, அது தேவையுமற்றது. ‘வெலடைன்ஸ் டே’ என்பது முழுக்க, முழுக்க வணிகப் படுத்தும், வாழ்த்து அட்டைகளை சந்தைப் படுத்தும் ஒரு இலாப நோக்குடன் பரப்பப்பட்ட ஒன்றே. உலகில் கிருஸ்த்துமஸ் பண்டிகைகளுக்கு, அடுத்தாக வாழ்த்து அட்டைகள் அதிகம் விநியோகம் ஆவது பிப்ரவரி14 நிகழ்வில்தான் என்று, அமெரிக்க வாழ்த்து அட்டை அமைப்பு அறிக்கை கொடுக்கிறது. இங்கு சமூக அமைப்பு அப்படி கட்டமைக்கப்பட்டுவிட்டது. இதில் ஆளும் அரசுகளின் பெரும் சதிகள் பொதிந்துள்ளது என்பது அரசியல். இங்கு இவ்வளவான விசயங்களுக்குள் நுழையத் தேவையில்லை. கிடைப்புகளிலே காதல் ஒரு அழகான கிடைப்பு.

நான் மேற்க்கூறியது போன்று, காதல் என்பது பருவம் எட்டிய ஆண்,பெண் இருபாலருக்கு இடையேயான மோகமாகச் சித்தரிக்கப்படுவிட்டது. ஆனால் அது ஒரு காதலின் வகையே அன்றி. அதுவே காதல் அல்ல, மேலும், அப்படியான காதல் வகையிலே, இங்கு அது அதன் அளவீடுகளைக் கடந்துதான் பயணிக்கிறது, இளைய வட்டங்களின் மத்தியில்.
“மாறவேண்டிய கட்டாயம் ஏற்படும் பொழுதும், மாறாதிருப்பதுதான் காதல்” என்கிறார், ஷேக்ஸ்ஃபியர்.

“என்றும் மாறாத காதல், பார்த்ததும் வருவதில்லை” என்கிறார் கிறிஸ்டோபர் மார்லோவ்.

“கடுகளவு நம்பிக்கையே, காதல் பிறப்பதற்க்கு போதுமானது” என்கிறார், ஸ்டென்தாஸ்.

இவைகள்தான் வயது வந்த பருவத்தினருக்கு இடையே மலரும், மனம் மாற்றி, திருமணம் முடித்து வாழ முற்பட எண்ணி நிகழும் உயிர் கலப்புச் சம்பவமான காதலின் ஒரு வகை. மேற்ச் சொன்னவர்கள் சிறந்த தத்துவியலாளர்கள், இவர்களின் கூற்றும் காதலை இப்படித்தான் சித்தரிக்கின்றது. ஆனால் இன்றுள்ள காதல் என்பது இப்படியானதாகவா உள்ளது என்பதனை நான் சொல்லித் தெரிய வேண்டியதே இல்லை. அதே சமயம் மேற்க்கூறியவைகளைத் தவிர்த்து, வெறுமனே உடல் உராய்வுகளில் தொடர்வது காதலல்ல. 

காமத்தின் தொடக்க நிலைகளை காதல் என்று அறிந்து வைத்திருக்கும் மடமை. அதேசமயம் காமம் அற்று காதலில்லை. காமம் மட்டுமே காதலுமில்லை. ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டியது காமம் என்ற சொல்லாடல் என்பது ஒருவகையான இன மோகம். இது காதல் இல்லாதவனிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் காமம் மட்டும் தேடி அலையும் மாந்தரிடத்திலோ, அற்ப பொருள்களுக்காக உடல் விற்க்கும் மாந்தரிடத்திலோ காதல் ஒரு நாளும் வராது, இருப்பதில்லை, என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில்தான் காதல் புனிதப்படுகின்றது.

திருமண பந்தத்திற்க்குப் பிறகு நிகழ வேண்டிய பலவும், காதல் என்கிற பெயராலே பரிமாற்றிக் கொள்வதன் விளைவு, திருமணத்திற்குப் பிறகு அவைகளெல்லாம் சலிப்படைந்துவிடுகிறது. சதை, சரும ஈர்ப்புகளால் கொள்ளப்படும் காதலானது, அதன் தேவை முடிந்தவுடன், கலங்கப்பட்ட காதலும் முடிந்துவிடுகிறது. மேற்ச்சொன்ன கிறிஸ்டோபர் மார்லோவின் கருத்தினை நான் மீண்டும் நினைவு படுத்துகிறேன். 

அநேகப் பேரின் காதல்கள் பார்த்த மாத்திரத்தில் வந்து விடுகின்றது. இது அப்பட்டமாக வயதின் ஈர்ப்பே அன்றி வேறில்லை. அதேசமயம் மணவாழ்வு சிறக்க வேண்டுமெனில் இரு உள்ளங்களும், தங்களின் எதிர்பார்ப்புகளைக் கொண்டே துணை அமைக்க வேண்டும். அதில் வெறுமனே உடல் கட்டமைப்பு, அழகு, வெளுப்பு போன்றவைகளை எதிர்நோக்கும் அதே நேரம் குணம் என்ற ஒன்றையும் சேர்த்தே நோக்க வேண்டும். இவைகளில்தான் மரணிக்கும் வரையில் அப்பந்தமானது நீடிக்க வழி வகுக்கும். அதே சமயம் இரு மனங்களும் பார்த்துக் கொள்ளாமல், பெற்றோர்களின் முடிவுப்படி தலையசைப்பது, எதிர்காலத்தில் ஆழ்பெரும் இன்னல்களை உருவாக்கிக் கொடுக்கும். காதல் காலத்தில் காமம் தவறு, திறுமணத்திற்க்குப் பிறகு காமம் மட்டுமே தவறு.

இறுதியாக காதலைப் பற்றி ஷேக்ஸ்ஃபியரின் இந்தக் கூற்றை வைக்கிறேன்.
“காதலிக்காதவர்கள் என்று யாருமில்லை. தங்கள் காதலை வெளிப்படுத்தாதவர்கள் வேண்டுமானால் இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

இதுதான் உண்மை, காதல் அப்படி எங்கும் எவரிடத்திலும், எதன் மீதும் 
பற்றி வியாபித்திருக்கிறது. வயது எய்திய பாலினருக்கு இடையே மலர்வது மட்டுமல்லக் காதல், அது ஒவ்வோர் வயதினரிடத்தும், பிறப்புகளினிடத்தும், தோன்றிய ஓர் உடன் பிறப்பு. அதில் பல வகைகள் உண்டு. அதில் ஒரு வகையே நாமெல்லாம் பேசிக் கொள்கிற ஆண்,பெண் உறவான காதலென்பது. இறைவனைக் கண்ணால் காணாமல் நாம் வைக்கின்ற நம்பிக்கையில் இருப்பதும் கூட ஒரு வகையான காதலே.

ஆக இப்படியாக, காதல் எனும் ஓர் அழகிய இயற்கை வரத்தினை வகைப்படுத்தலாம். இன்னும் நீளமாகச் செல்லவோ, விரிவாகச் சொல்லவோ நிறைய இருந்தாலும், காதலை அனுபவித்தவர்களுக்கு, நுகர்ந்தவர்களுக்கு இச்சிறு எழுத்துக் கோர்வைகளே ஓர் விளங்கியல் உணர்வை தருமென கருதுகிறேன்.

நன்றி : வல்லமை இணைய இதழ்
இணைப்பு தளம் :http://www.vallamai.com/?p=42149

தோழமையுடன்
பழனி ஷஹான்


வெறி – ஆதிக்கத்தின் திரை கிழிப்பு



கடந்த 2012 நவம்பர்-7ம் தேதி, தருமபுரி மாவட்டத்தின், மூன்று கிராமங்களில் நிகழ்ந்த ஆதிக்க சாதி வெறித்தாக்குதல்களுக்கு ஆளான தலித் மக்களின் சோகக் காட்சிகள், புலம்பல் ஓலங்கள், மன வெதும்பல்களை ஆவணங்களாய் காட்சி படுத்தி உள்ளது, மருதம் கலைக்கூடம் சார்பாக, கு.க.பாவலன் ஆக்கத்தில் வெளிவந்திருக்கும் வெறி என்கிற ஆவணப்படம்.

தலித் சமூகத்தினைச் சார்ந்த இளவரசன் எனும் வாலிபர், திவ்யா என்கிற வன்னியர் சமூகப்பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொள்கிறார். இதனைத் தொடர்ந்து, திவ்யாவின் தந்தை நாகராஜன் தற்கொலை செய்துகொள்கிறார் என்கிற மட்டில் எவ்வித ஆதாரமும் இன்றி கொலை செய்யப்பட்டு விடுகிறார். இந்த சம்பவங்களை வைத்து வன்னியர்களை தலித் சமூகத்தின் மீது திருப்பி விடுகின்றது, பாட்டாளி மக்கள் கட்சி. இதன் விளைவு, ‘நத்தம்காலனி, கொண்டாம்பட்டி, அண்ணா நகர்’ ஆகிய மூன்று தலித் கிராமங்களில் சுமார் 400 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டும், கடப்பாரைகளால் அடித்து உடைக்கப்படும், பாழக்கப்பட்டுவிடப்படுகிறது. இதன் உண்மைத் தன்மைகளை புலனாய்வு செய்து அப்படியே காட்சியாய் அளிக்கிறது ‘வெறி’

படத்தின் துவக்கத்தில், பாதிக்கப்பட்ட மூன்று கிராமங்களின் பெயர்களும், ஒவ்வோர் கிராமத்தில் சின்னா பின்னாமாக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கைகளையும் எழுத்துக்களால் ஓடவிடுகின்றனர். அதன்பின் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட கிராமங்களில் நுழைந்து, அந்த வீடுகளையும், அங்குள்ள மக்களின் குமுறல்களையும் பதிவு செய்கின்றனர்.

அதில் ஒரு பெண் பேசுகையில்: ‘வந்தவர்கள் எங்களை மிகவும் கேவலமாக பேசியதுடன், எங்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தினர், ஒரு சிலர் பெட்ரோல் குண்டுகளை சுழற்றி சுழற்றி எறிந்தனர். இதற்கு முன்பாகவே அவர்கள் எங்களது வீட்டில் உள்ள பணம், நகை போன்றவைகளை கைப்பற்றிக் கொண்டனர், அதன் பின்னரே எரித்தனர்’ என்கிறார்.
இன்னொரு பெண் கூறுகிறார்: ‘அவர்களுக்கு குறி மனிதர்களில்லை. பணம், பொருள்கள்தான். அவைகளைத்தான் அவர்கள் சுருட்டினர். அதிலேதான் குறியாக இருந்தனர்’ என்ற வண்ணம் கூறினார்.

இப்படி பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ளவர்களை பலரையும் கண்டு பேட்டி எடுத்துள்ளனர். இதுபோக அரசியல் பிரமுகர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனவும் பேட்டி கண்டு, பிரச்சனையின் ஆழத்தை எடுத்துரைக்கின்றனர்.

சம்பவம் நிகழ்ந்த பின்னர் அங்கு நேரடியாகச் சென்று தகவல்களைச் சேகரித்த எஸ்.டி.பி.ஐ- கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாக்கவி அவர்கள் பேசுகையில், “கிட்டத்தட்ட 10கோடி மதிப்பிலான பொருள்கள் சூறையாடப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார். இவரைத்தொடர்ந்து பெரியார் திராவிடக் கழகம் கோவை.இராமகிருஷ்னண் அவர்களும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் தங்களது கருத்துக்களை இதில் பதிவு செய்துள்ளனர். தலித் மக்களின் வீடுகள், பொருள்கள் எறிப்பு என்கிற அளவோடு நிற்க்காமல், அவர்களின் பள்ளிக் குழந்தைகளின் புத்தகங்கள் முதற்க்கொண்டு திட்டமிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தொல்.திருமாவளவன் அவர்கள் கேட்கிறார்: “நாகராஜனின் பிணம் ஊருக்குள் வைக்கப்படுகிறது, அவர் தற்கொலை செய்து இறந்தார் என்பது தனது மனைவிக்குக் கூட தெரியவில்லை, காவல்துறைக்கும் தெரியவில்லை, ஆனால் விஷமிகளுக்கு தெரிகிரது, அவர்கள்தான் கொண்டுவந்து அவரின் சடலத்தை ஊருக்குள் வைக்கின்றனர். அடுத்த இரண்டு மணி நேரத்திற்க்குள், ஒரு கும்பல் சாலையில் மரத்தை வெட்டிப் போடுகிறது, இன்னொரு கும்பல் வீடுகளைத் தாக்குகிறது என்றால், இது ஏதோ இரண்டு மணி நேரத்தில் நிகழ்ந்த்திட திட்டமா?” என்று கேட்டு இச்சம்பவத்தின் திட்டமிடுதலையும், நாகராஜனின் மரணத்திலுள்ள மர்மத்தினையும் கேள்விக்குள்ளாக்குகிறார்.

இதே போன்று, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி, திரு.ஜி.இராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழகம், திரு.கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திரு.பேரா.தீரன், சுப.வீரபாண்டியன், பத்திரிக்கையாளர்.கவின் மலர், மேலும் திராவிடர் கழகம் ஐயா.கி.வீரமணி போன்றவர்கள் இதில் தங்களது கண்டங்களையும், எதிர்ப்புகளையும், பா.ம.க மீதான, இராம்தாஸ், காடுவெட்டி குரு மீதான பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன் வைத்து கருத்து கூறியுள்ளனர்.

சோகமே காட்சியாய் நகர்கின்ற படத்தில், ஆங்காங்கே இராமதாஸ் அவர்களின் கோரப் பேச்சுக்களும் பங்கு கொண்டே நகர்கின்றது. இந்தச் சம்பவத்தின் முக்கியப் பிரச்சனையே வன்னியப் பெண்ணை, தாழ்த்தப்பட்ட ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டதுதான். ஆனால் இது ஒன்று மட்டும்தான் சாதி கலப்புப் திருமணமாக நடந்திருக்கிறதா என்றால் இல்லை. இதே படத்தில் ஒரு காட்சி: ‘வன்னியர் சமூகத்தினை சர்ந்த சகோதரிகள் இருவர், தலித் சமூகத்தினை சார்ந்த சகோதரர்களை 22 வருடங்களுக்கு முன்பாக காதலித்து சாதி மறுப்பு திருமணம் புரிந்துள்ளனர், ஆனல் இன்றளவும் இவர்களுக்குள் எவ்வித பாகுபாடு இன்றியும் பேரன் பேத்திகளோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை குறித்து அவ்விரு பெண்களுமே கூறி பதிவுறுகின்றனர்.

ஆனால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் இவர்களின் வீடும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஒன்றரை வருடத்திற்கு முன்பாக வன்னியப் பெண்ணும், தலித் ஆண் ஒருவரும் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களும் இந்தத் தாக்குதலில் பலி தீர்க்கப்பட்டுள்ளனர். ஆக சாதி மறுப்புத் திருமணங்கள், காதல் திருமணங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் இதுதான் முதல்முறை போலும் அங்கொரு அரசியல் அரங்கேறியுள்ளது புரிய வருகின்றது. மேலும் உண்மையிலயே வன்னியர் சமூக மக்கள்தான் இதில் நேரடியாக கொதிப்படைந்துள்ளனர் என்றால், அவர்கள் பல வருடங்களுக்கு முன்பாகவே இப்படி கொதிப்படைந்திருக்க வேண்டும். நாகராஜ் போன்ற அப்பாக்கள் தற்கொலை செய்திருக்க வேண்டும். ஆனால் இளவரசன் – திவ்யா விவகாரம் மட்டும் விஸ்வரூபம் எடுத்ததிற்க்குப் பின்னால் ஒரு நுட்பமான அரசியல் உள்ளது அப்பட்டமாகின்றது. பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மட்டுமன்றி, எல்லா சமூக ஆர்வலர்களும், பொதுவுடைமைவாதிகளும் குறை சாட்டுவது பா.ம.க எனும் சாதிக் கட்சி மீதுதான்.
மருத்துவர் இராம்தாஸ் இப்படி ஒரு காட்சியில் கேட்கிறார்: “பா.ம.க-தான் செய்ததுனு உங்களுக்கு எவன்டா சொன்னது?” என்கிறார்.

அடுத்த காட்சியில் ஒரு பெண் விவரிக்கிரார்: “இதற்க்கெல்லாம் காரணம் பா.ம.க கட்சிக்காரங்கதான்” என்பதோடு அல்லாமல் அக்கட்சி சார்ந்த நபர்களின் பெயர்களையும் வரிசைப்படுத்திக் கூறுகிறார். அவர்கள்தான் தனது வீட்டை நாசமாக்கியது எனவும் கூறுகிறார்.

அதே சமயம், கொளத்தூர் மணி அவர்களும் இந்தப் பெண்ணின் குற்றச்சாட்டினை உண்மையாக்கும் வண்ணம், பா.ம.க மீது பகிரங்கக் குற்றம் சாட்டுகிறார்.
மேலும் இராம்தாஸ் ஒன்றைக் கூறுகிறார், “காவல்துறையினர் யாரும் வன்னியர்களுக்கு உதவவில்லை’ என்கிறார்.

இதே கருத்தினை அந்த பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு வந்த வெளியூர் உறவினர்கள் மறுத்து கூறுகின்றனர். காவல்துறையும், உளவுத்துறையும் வேடிக்கை பார்த்தனர் என்றும், இரண்டாயிரம் பேர் எவ்வித முன்னறிவுப்பு இன்றியும் கூட்டம் போட்டு திட்டம் தீட்டியது உளவுத்துறைக்கு தெரிந்தும் அவர்கள் ஏதும் செய்யவில்லை என்று அவ்வூரைச் சார்ந்த ஒருவரும் குற்றச்சாட்டினை முன் வைக்கின்றனர். அடுத்ததாக வன்னியர்கள் வீடுகளுக்கு காவல்துறியினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டிக் காட்சி படுத்தியுள்ளனர்.

மேலும் வன்னிய சமூகத்தினரை உசுப்பேற்றியும், காதலுக்கு எதிராக இராம்தாஸ் வைக்கும் சூழுரைகளையும் படம் விட்டுவைக்கவில்லை. அதேசமயம், ‘வன்னியன் கூட்டிக் கொடுப்பவன் இல்லை’ என்கிற சொல்லால் ஏனைய பிற எல்லா சமூகங்களையும் இழிவுபடுத்தும் இராம்தாஸின் வக்கிரங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
பத்திரிக்கையாளர்.கவின்மலர், இச்சம்பவம் பற்றி களத்தில் சேகரித்த குறிப்புகளோடு கூறுகிறார்: “ இது ஊடகங்களில் சரியாக பதிவிடவில்லை. அரசைப் பொறுத்தவரை ஒரு மெத்தனப் போக்குதான் நிலவுகிறது. பாதிக்கப்படவர்களின் வீடுகளைக் காணுகிர போது, ஒன்று புரிகின்றது தலித்துகளின் வளர்ச்சி பொறுக்காமையினால் ஆதிக்க சக்திகள் அட்டூழியம் செய்துள்ளனர்” என்ற வண்ணம்.

தலித் மக்களின் வீடுகள் உடைப்பு, கடைகள் உடைப்பு, அவர்களின் பொருள்கள் உடைப்பு, பறிப்பு, ஒரு அம்மா தனது மகனின் புதிய இருசக்கர வாகனம் உடைந்து கிடைப்பதனை காட்டுகிறார், மிகவும் கடினப்பட்டு சேகரித்த பணத்தில் வாங்கியது எனவும், தனது மகனின் மனக் கஷ்டத்தினை தானே பதிவு செய்கிறார், தலித் சமூகம் என்பதனால் ஒரு காவல்துறையினர் வீடும் தாக்கப்பட்டுள்ளது, பள்ளிக் குழந்தைகளின் புத்தகங்கள் எரிப்பு, தரையில் உள்ள பொருட்கள் அல்லாமல், மேலே உள்ள மின்விசிறியினைக் கூட முறித்து உடைத்துள்ளனர், இச்சம்பவம் குறித்து அப்படத்தில் இப்படி கூறப்படுகின்றது, ‘உழைத்து களைத்துப்போன மக்கள் காற்று வாங்குவது கூட பொறுக்கவில்லையோ” என்று. இப்படி நீளும் ஆதிக்கத்தின் அட்டூழியங்கள் தொடராய் ஓடுகின்றது.

இப்படி முன்னரே திட்டமிட்டு, தலித் மக்களின் வீடுகள் சூரையாடப்பட்டுள்ளன. அதற்கு திவ்யாவினை பகடை ஆக்கியுள்ளனர். திருமாவளவன் இப்படி கூறுகிறார்: “பெண்ணை வைத்து நாடகமாடப்பட்டுள்ளது. இது மிகப்பெரும் பெண்ணுரிமை மீறல், ஆணாதிக்க வெறி” என்கிறார். திவ்யா இளவரசனோடு காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், பின்னாளில் அவர், இளவரசனை விட்டுச் செல்வதும், தனது அம்மா உடன் இணைந்து கொள்வதற்கும் உள்ளால் ஏதோ ஒன்று உள்ளதாகத்தான் தெரிகின்றது. சென்ற டிசம்பர் மாதம் சம்நிலைச் சமுதாயம் இதழில், மீனா அவர்கள் எழுதிய, தருமபுரியின் தற்போதையச் சூழல் குறித்த கட்டுரையில் அவர் ஒன்றை குறிப்பிட்டுள்ளார், ‘திவ்யா இளவரசனின் வீட்டை விட்டுச் சென்றது அங்குள்ளவர்களுக்கு தெரியாது. ஏதோ போன் வர பேசியிருக்கிறார். அதன்பின்னர் வீட்டின் பின்புறம் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வரவே இல்லை. பின்புதான் விசயம் தெரிந்துள்ளது, தனது அம்மா பின்னால் வந்து ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளது. திவ்யாவிற்கு போன் செய்த இளவரசனிடம், அவளது அம்மா இப்படிச் சொல்லியிருக்கிறார், என் மகள் சேர வேண்டிய இடத்திற்கு வந்துவிட்டாளென்று” இப்படியாக இளவரசன் வீட்டார் தெரிவித்ததாக மீனா குறிப்பிட்டுள்ளார். இது ஒன்றே தெளிவுபடுத்துகிறது, இளவரசனின் மரணமும், வன்முறை வெறியாட்டங்களுக்கும் திவ்யா பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்பது. இவரை ஏதோ அரசியல் தனம் இயக்கியுள்ளது. பலரின் கூற்றுப்பாடி குறை காணப்படும் பா.ம.க அந்த சக்தியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் இயல்பாக எழுகின்றது.

திராவிடர் கழகத் தலைவர், கி.வீரமணி அவர்கள் இப்படி கூறுகிறார்:
“இது ஏதோ ஆதிக்க சக்திகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை இல்லை. இது பெரியாரியவாதிகளுக்கும், பொதுவுடைமைவாதிகளுக்கும், மார்க்ஸியவாதிகளுக்கும், சாதியினை எதிர்ப்பவர்களுக்கும், சமத்துவத்தினை வேண்டுபவர்களுக்கும், அம்பேதகாரியவாதிகளுக்கும் விடப்பட்டுள்ள சவால்” என்றும் பதிவு செய்துள்ளார்.
ஐயா.வீரமணி அவர்கள் கூறியுள்ளதினை அணு அளவும் பிசகாமலும், மாந்த நேயம் உள்ளவர்களிடத்தில் நியாயம் வேண்டியும், மனித குலத்திற்க்கு எதிரான சவால் என்பதனையும் இந்த ஆவணப்படம் விவரித்து காட்சிப்படுத்தியுள்ளது. 
இப்படி முழுக்க, முழுக்க தாழ்த்தப்பட இனத்தின் மீது விரிக்கப்பட்ட வன்கொடுமைகளையும், எரித்து நாசப்படுத்திவிட்டு அதனை பெருமையாகக் கூறும் சாதிய அரக்கர்களின் கர்ஜிப்புகளையும் வெளிப்படுத்தியுள்ள இந்த ஆவணப்படம், ஆதிக்க சக்திகளின் திரைக்கிழிப்பாக, முகமூடிகளை உறித்தெடுப்பதாக உள்ளது. இந்த உன்னத பணியினை செய்திட்ட தோழர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும். மனித நேயத்தினை காத்திட நினைக்கும் பலரும் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டிய காட்சிப் பதிப்பு, “வெறி”.

நன்றி: கீற்று இணையதளம்
இணைப்பு தளம்:http://keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/26048-2014-01-23-16-54-39


- பழனி ஷஹான்

‘மஞ்சப்பை’ பேசும் அரசியல் – திரை விமர்சனம்



திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், ராகவன் இயக்கத்தில், ராஜ்கிரன்,விமல்,லட்சுமி மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் மஞ்சப்பை.
பெரும்பாலும் கதை அறியப்படுவது, தாத்தா பேரனுக்கு இடையே நிகழும் பாச நெறி என்பதுவே. தனது தாய், தந்தையை இழந்த கதாநாயகனான விமல், தனது தாத்தாவான ராஜ்கிரனால் வளர்க்கப்பட்டு, உயர்கல்விகள் கற்று சென்னையில் ஒரு பெரிய ஐ.டி கம்பெனியில், நல்ல சம்பளம் பெறும் நபராக வலம் வருகிறார். தனது உழைப்பினால், ஒரு புரோஜக்ட் மூலமாக அமெரிக்கா செல்லும் வாய்ப்பினையும், மேலும் அங்கேயே தொடர்ந்து வாழவும் கம்பெனி மூலமாக விமல் தெரிவு செய்யப்படுகிறார். இன்னும் மூன்று மாதங்களில், அமெரிக்கா சென்று பின்னர் அங்கேயே தங்கிவிட நேரிடும் என்பதனால், சென்னையில் இருக்கும் காலம் வரை தனது தாத்தாவோடு மகிழ்ச்சியாய் இருக்க எண்ணி அவரை சென்னைக்கு வரவழைக்கிறார்.
கிராமத்தில் வளர்ந்து, வாழ்ந்த தாத்தாவிற்கு பெருநகர வாழ்க்கை பற்றி ஏதும் தெரியாததாலும், இவரின் யதார்த்த நடைமுறைகளால் அப்பார்ட்மெண்ட் வாசிகள் அல்லலுறுவதும், கதாநாயகியான லட்சுமி மேனன் வெறுப்பதும் இதற்க்காய் காதலர்கள் பிரிவதும் தொடர்வாய் நடக்கும் விடயங்களாக அமைகிறது. பல பிரச்சனைகள் தொடர்ந்த போதும், விமல் தனது தாத்தாவினை ஒரு துளியும் கோபித்துக் கொள்ளாது கடந்து செல்கிறார். இறுதியாக தனது அமெரிக்கா செல்வதற்க்கான விசா மறுக்கப்படுகிறது, அதற்கு காரணம், தனது தாத்தா அமெரிக்க கொடியினை அவமதித்தாகச் சொல்லப்படுகிறது. இதனால் கடும் வெறுப்படைந்த விமல் சோர்வாய் வெளியேற, அந்நேரமும் கூட ராஜ்கிரன் ஒரு நபருடன் சண்டையிட்டுக் கொண்டிருக்க அதனை தடுத்து, தனது தாத்தாவின் மீது கடும் கோபத்தால் திட்டிவிடுகிறார். இதன் பின்னர் தனது காதல் என்ன ஆனது, அமெரிக்கா செல்கிறாரா இல்லையா, தனது தாத்தா என்ன ஆகிறார் போன்றவைகள்தான் கதையின் இறுதிகள்.
பெரும்பாலும் இது தாத்தா பேரன் கதையாக பலராலும் பார்க்கப்பட்டாலும், இதில் பார்க்கப்படாத, பேசப்படாத சில அரசியல்களை நாம் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது, அல்லது சொல்லியாக வேண்டியுள்ளது. இக்கதையினை வேறு கோணத்தில் ஆராய்ந்தால், அமெரிக்கா செல்கிறாரா இல்லையா என்பதும் கூட கதையின் இன்னொரு சாரமாக உள்ளது. காதலில் வெல்கிறாரா இல்லையா என்பது கூட ஏதோ சம்பிரதாயச் சடங்குதானே தவிர அது கதையில் பெரும் அழுத்தமே இல்லை. ஏதோ கதையை இழுக்க வேண்டும் என்பதற்க்காக ஏற்ப்படுத்தியுள்ள காட்சிகள்தான் காதல் காட்சிகள். ஆகையால் அமெரிக்க பயணத்தை மட்டுமே அழுத்தமாகவும், அரசியல் ரீதியாகவும் பார்க்க வேண்டியுள்ளது.
முதலில் அமரிக்க மோகம் என்பது, தனது காதலையும், தன்னை வளர்த்து ஆளாக்கிய தாத்தாவினையும் வெறுக்க வைக்கிறது. இது இன்று பெருவாரியான நகரவாசிகளிடம் மேலோங்கியுள்ள மோகம், இதனால் வரும் இழப்புகளை மிக அழகாய் இறுதிக் காட்சியில் விளக்கியுள்ளார் இயக்குனர் ராகவன்.
ஒரு காட்சி இப்படி வருகிறது, “அமெரிக்கா செல்வதற்க்காக வேண்டி நேர்முகத் தேர்விற்க்காய், சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பு இடப்பட்டுள்ள சாலையோர தடுப்பில் வரிசையில் நிற்க்கிறார் விமல். அப்பொழுது அவரின் தாத்தா கேட்பது, ‘ஏன்ப்பா அமெரிக்கா போறதுக்கு பேச வந்திருக்கேனுட்டு, இப்புடி ரேசன் கடையில நிற்க்கிறாப்புல நிற்க்கிற, என வினவுகிறார்” அடுத்த காட்சிகளில் பேரன் சிரித்துக் கொண்டே வரிசையில் முன்னேறுகிறார்.
இந்தக் காட்சியினைக் குறிப்பிடுவது எதற்க்கெனில், இதுதான் இன்றைய நமது நிலை. மிகவும் செல்வந்தர்கள், நமது மண்ணில் உயர்வுடையவர்கள், மக்கள் மத்தியில் மதிப்பு பெற்றுள்ளவர்கள் என எவராயினும், அவர்களுக்கு நமது மண்ணிலயே நிகழ்த்தப்படும் மிகப்பெரும் அவமானம்தான் இது. மிகவும் உயர்வாகச் சொல்லப்படுகிற, அதிக செலவீனகள் செய்திட்டு செய்கின்ற பயணத்திற்கு நாம் ஒப்புதல் பெற வெயிலில் வரிசை கட்டி நிற்க்க வேண்டியுள்ளது. நமது மண்ணில் தங்கள் அலுவலகத்தினை அமைத்துக் கொண்டு, அவர்கள் நம்மை நடத்தும்விதம் மிகவும் இழிவானச் செயல். இதனை நாம் பலவாறாக கண்டு கொண்டுதான் உள்ளோம். என்ன செய்ய, நாம் அங்கு சென்றாக வேண்டுமே என்கிற நிலைக்கு தள்ளப்பட்டு, நவீன கால அடிமைத்தனத்தை நாகரீகப் போர்வையில் மறைத்துக் கொள்கிறோம். இதுவே ஒரு அமெரிக்கர்க்கு அவர்களின் நாட்டில் நாம் செய்திருந்தால், அல்லது நம் மண்ணில் இப்படி அவர்களைச் செய்திருந்தால், கூக்குரல்கள் சர்வதேசப் பிரச்சனையாக உருமாறுமல்லவா?
படத்தில் இக்காட்சிக்கு அடுத்தாக இன்னொன்று வருகிறது, “அமெரிக்கத் தூதரகத்தின் முன்பு உயரமாக பறக்கவிடப்பட்டிருக்கும் அமெரிக்க கொடியினை கண்டதும், ‘வெள்ளையனே வெளியேறு’ என முழக்கமிட்டும், அதனை கீழே இறக்கும்படியும் காவலாளர்களிடம் ராஜ்கிரன் சண்டையிடுகிறார். பிறகு இதற்க்காய் விமலும். தனது தாத்தாவும் கைது செய்யப்பட்டு ஜீப்பில் ஏற்றப்பட்டு செல்லும் பொழுது, ராஜ்கிரன் சொல்கிறார், இப்படித்தான் ஆரம்பிக்கும் அப்புறம் நம்மளையே அடிமையாக்கிவிடுவார்கள் பிரிட்டிஷ்காரங்க, நாம எவ்வளவு கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கியிருக்கிறோமென சொல்ல, ஐய்யோ தாத்தா இது பிரிட்டிஷ் கொடி இல்லை, இது அமெரிக்க கொடி என விமல் சொன்னது, பிரிட்டிஷ்க்காரனானலும், அமெரிக்கானாலும் அந்நியன்தானே என திரும்ப விமலிடம் கேட்க அந்த கேள்வியோடு காட்சி முடிக்கப்பட்டுவிடுகிறது.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது இந்தக் கேள்வியைத்தான். அதனால்தான் என்னவோ இந்தக் கேள்வியோடு காட்சி ஒரு அழுத்தத்தினைக் கொடுத்திட்டு அப்படியே நிற்க்கிறது. இது உண்மைதானே, பிரிட்டிஷ் ஆனாலும் அமெரிக்காவானாலும், அந்நிய நாட்டுக்காரர்கள்தானே? இதில் மாற்றேதும் உண்டோ?
மேலும் இப்படித்தான் எல்லாம் ஆரம்பமாகும் பிறகு நாம் அடிமையாக்கப்படுவோம் என்பதனையே வசனத்திலும் சொல்லிவிடுகிறார் ராஜ்கிரன். இதுவும் உண்மைதான், அதேசமயம் நமது நாடு அடுத்து யாரின் கீழ் அடிமைப்பட்டும், அடிமைப்படவும் உள்ளது என்பதனை சூட்சகமாக சொல்ல முனைகிறது இக்காட்சி. இப்படித்தான் கிழக்கிந்திய கம்பெனி மூலம் தனது கூடாரத்தை இங்கு கட்டியது பிரிட்டிஷ். இப்போது அதனையே கார்ப்ரேட்டுகள், பன்னாட்டுக் கம்பெனிகள் எனும் பெயரில் நவீன கிழக்கிந்திய கம்பெனிகளாக அமெரிக்கா தனது மூக்கை இந்தியா எனும் கூடாரத்திற்குள் நுழைத்து அடுத்த கட்டங்களை நகர்த்தியும் விட்டது. இனி கூடாரத்தை (இந்தியாவை) கபளீகரம் செய்வதுதான் மீதம். பிரிட்டிஷ் வணிக வலையைத்தான் அமெரிக்காவும் கை கொண்டுள்ளது. தனது யுனைடட் ஃப்ரூட் நிறுவனம் மூலம் லத்தீன் அமெரிக்காவினையே தனது கைக்குள் அமெரிக்க வைத்தது, வைத்துள்ளது எல்லாம் உலகமறிந்தது. வியாபார வலை காலாவதியானால், அடுத்து அது பேராயுதம் எனும் குற்றச்சாட்டை வீசி, தாங்கள்தான் உலகத்தின் மீட்பர் எனவும், கட்டப்பஞ்சாயத்து செய்கிறேனென இறங்கி ஈராக், ஆப்கானிஸ்தானை அழித்ததினைப் போல அழிக்கவும் செய்யலாம். திரிகோணமலையை கைப்பற்றியுள்ளதின்படி பார்த்தால் அதன் முதல் இலக்கு தமிழகமாகத்தான் இருக்கிறது எனபது புலப்படும். இப்பொழுது பொருளாதார மேம்பாட்டுத் திட்டமென, அழிவை அழகாய் காட்டிக் கொண்டுள்ளனர், மீத்தேன், கூடங்குளம் அணு உலை, ஸ்டார்லைட் என நீளுகிறது அழித்தொழிப்பு. இதில் நாம் தெளிவு பெற்று தேசியப் போராட்டத்தில் இறங்கினால் நம்மை மிகச் சுலபமாக ஒடுக்கத்தான் திரிகோணமலையை தெரிவு செய்து கைவசப்படுத்தியுள்ளது அமரிக்கா. அட இது என்னப்பா, இந்தியாவிற்கு கீழாகத்தானே நாம் இருக்கிறோம், ஆனா அமெரிக்கா, அமெரிக்கா எனச் சொல்வதைப் பார்த்தால், யார் நம்மை ஆள்கிறார்கள் என்பது கேளிக்கையாக தோன்றலாம். நம்மை ஆள்வது இந்தியாதான், இந்த பொம்மைக்கு சாவி கொடுப்பது அமெரிக்கா, இந்த அமெரிக்காவை அசைப்பது இஸ்ரேல் எனது இது ஒரு உலக நெட்வொர்க். கவலைப்பட வேண்டாம் நம்மை அழித்தப் பிறகு அவர்ளின் அடுத்த இலக்கு மொத்த இந்தியாவும்தான். அப்பொழுது எட்டப்பனைப் போல, நமது ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் காலில் விழுந்து கும்பிட்டு பிழைத்துக் கொள்வார்கள், இப்பொழுதும் அப்படித்தான் உள்ளது.
சரி இதெல்லாமுமே படம் சொல்ல வருகிறதா என்றால், அப்படிச் சொல்வதற்க்கில்லை. இருந்தாலும் அக்காட்சியின் நீட்சியை தொடர்ந்து ஆய்ந்தால் இதெல்லாம் புலப்படும்.
இப்படி அமெரிக்க அரசியல் ஒருபுறமும், அதேசமயம் ஒருபுறம் ஐ.டி கம்பெனிகளின் (இவர்களும் அமெரிக்க கைப்பாவைகள்தானே!) அரசியலும் இங்கு பேசப்படுகிறது.
ஒரு காட்சி, அமெரிக்கா செல்வதற்க்காக இரவு முழுவதும் உறங்காது தனது புராஜக்ட்டை மடிக்கணினியில் முடித்துவிட்டு அதே களைப்போடு உறங்கிப் போய்விடுகிறார் விமல். காலையில் தனது தாத்தா விமலின் அயற்சியை மனதிற்க் கொண்டும், அதே சமயம் லேப்டாப்பினை தோசை செய்யும் மின்சார கருவியென (டிஸ்டர்) நினைத்து, தான் கடற்க்கரையில் இதனை பேரனிடம் கேட்டதினால் வாங்கி வந்திருக்கிறாரென நினைத்துக் கொண்டு, அதனை எடுத்து கேஸ் அடுப்பில் வைத்துவிடுகிறார். பின்னர் அது தீயினால் உருகி வெடித்து விடுகிறது. இதனை அறிந்த விமல் அதிர்ந்து போய், இதே நிலையோடு, அலுவலகத்திற்குச் சென்று தனது நிலையை விளக்குகிறார். ஆனால், அவைகளை ஏற்க்காது அதிகாரி தன்னை ‘வேஸ்ட்’ என திட்டி அனுப்பிவிடுகிறார். அந்த புராஜக்ட்டை வேறொருவரிடமும் கொடுத்துவிடுகிறார். அப்பொழுது விமல் கதாநாயகியிடம் இப்படி சொல்கிறார், ‘இத்தனை நாள் ஜீனியஸ்னு தூக்கி வச்சு கொண்டாடினானுக, சின்னதா ஒன்னு நடந்ததும் கசக்கி எறிந்த்துட்டானுக’ என வசனமிடுகிறார். இதுவும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். நாம் எப்படி நவீன காலங்களில், நமது இளைஞர்கள், ஐ.டி மோகத்தால் கொத்தடிமைகளாக உள்ளனர் என்பதனையும் இது குறிக்கிறது. பின்னர் கதாநாயகன் கெஞ்சிக் கெஞ்சி வேறொரு மடிக்கணினி மூலம் அதனை முடித்துக் காட்டுகிறார். அப்பொழுதும் இறுதிவரை மறுக்கப்பட்டு, வேறு நபர் இந்த புராஜட்டை முடிக்க முடியாமல் கால அவகாசம் கேட்கையில் அவரை உடனே தூக்கி எறிந்துவிட்டு அது மீண்டும் கதாநாயகனுக்கு வருகிறது.
இப்படி படத்தில் ஆங்காங்கே ஆழமான சில அரசியல்களை அறிந்தோ, அறியாமலையோ இயக்குனர் ராகவன் வைத்துள்ளார். இதுதான் இவரின் முதல் பெரியதிரை என்பதினாலோ என்னவோ, நல்ல கதையினை கொடுத்திருந்தும், திரைக்கதையில் சில இடங்களில் சறுக்கி இருக்கிறார்.
மூன்று முதன்மை பாடல்களும், ஆங்காங்கே சிலவரிப் பாடல்களும் படத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் பாராட்டிற்க்குறியது, பாடல்களில் இல்லாத ஆபாச நடனமும், நிகழ்கால சினிமாக்களில் வலம் வருவதைப் போன்ற மசாலாப் பாடல்களும் இல்லாதது. ஆபாசம் என்பது இல்லாமல் படத்தை வடிவமத்திருந்த அதே வேளையில், இரண்டு முத்தக் காட்சிகளை வைத்து கொஞ்சம் சறுக்கிவிட்டார். லட்சுமி மேனனோ முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேனென சூளுரைத்து, பின்னர் சறுக்கிய நடிகைகளின் வரிசையில் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் ஒரு காட்சியும், இதில் இரு காட்சியிலும் நடித்து சேர்ந்துவிட்டார். விமல் தனது இயல்பான நடிப்பிலிருந்து விலகியிருந்தாலும், கதைக்கேற்ற இடத்திற்கு பொருந்தியிருக்கிறார்.
என்னதான் கிராமத்தான் என்றாலும், காரை தள்ளி தனது பலத்தைக் காட்டி, கார் உடைந்ததினை பொருட்படுத்தாது கடப்பது, வேப்பங்குச்சி உடைப்பது, லேப்டாப்பை அடுப்பில் வைப்பது போன்ற சில காட்சிகள் கொஞ்சம் அதிக வர்ணனை என்றுதான் சொல்ல முடியும். இன்னும் சிலவற்றைப் பேசலாமெனினும் அவைகள் புளித்துப் போன சினிமாக் காட்சிகள் என்பதனால் தேவையற்றது என்றே நினைக்கிறேன்.
அமெரிக்க அரசியல், ஐ.டி அடிமை வாழ்வு, பெருநகரத்தில் மறந்து போன அல்லது மறுக்கப்பட பந்த,பாசம், காதல் வசத்தால் அப்படியே மதி மயங்காது தன்னை வளர்த்த தாத்தா-தான் முக்கியமென நவீன காலத்து நகர மோகக் காதலை சற்று உரசிப் பார்ப்பது அல்லது எடுத்துப் பேசுவதென படத்தில் இடம்பெற்றுள்ள சமூகக் கருத்துக்கள் அருமை.
தனது முதல் படத்தில் உள்ள இந்த நிலைகள் தொடர்ந்து வரவேண்டும் என்பதனை வலியுறுத்தி, இப்படத்திற்க்கான பாராட்டுக்கள் இயக்குநர் ராகவனுக்கு!

நன்றி: சிறகு வார இதழ்
இணைப்பு தளம்: http://siragu.com/?p=14281


தோழமையுடன்
- பழனி ஷஹான்

பாலைவனமாகும் காவிர் டெல்டா – மீத்தேனின் அழிப்பு அரசியல்



நிலத்தின் அடி ஆழம் வரை, ஆழ் துளைகளிட்டு, கிணறுகள் அமைத்து, பாறைகளுக்கிடையிலும், நிலக்கரிகளுக்கிடையிலும் இருந்து மீத்தேன் எனும் வாய்வினை எடுத்து வியாபாரம் செயலை, பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் எனும் அடிப்படையில் கடந்த திமுக ஆட்சியில், குஜராத்தின் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்திடம் ஒப்பந்தம் பதிவாகியது. இது தேர்ந்தெடுத்த இடம் தமிழகத்தின் நெற்க்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதிகளைத்தான். இந்த அழிவுப் பொருளாராதாரத் திட்டத்தினை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் தாய் தமிழகத்தில் இன்றும் நிகழ்ந்து கொண்டுள்ளது. இது ஒரு மக்கள் விரோத, விவசாய அழிப்புச் செயலென, டெல்டா வீதிகளில் போராடிய நிலையிலேயே தனது உயிரை இழந்தார், இயற்கை வேளாண் விஞ்ஞானி.நம்மாழ்வார் அவர்கள்.
இந்த மீத்தேன் குறித்தும், அதனின் அபாயங்கள் குறித்தும், இதனின் தமிழர் அழிப்புச் செயல்களை விளக்கியும் என மீத்தேனின் அழிப்பு அரசியலை தோலுரிக்கிறது, நிமிர் வெளியீடாக, மே-17 இயக்கத்தின் தயாரிப்பில், சரவணன் தங்கப்பாவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள, ‘பாலைவனமாகும் காவிரி டெல்டா’ எனும் ஆவணப்படம். இது சமீபத்தில் தஞ்சையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையில் வெளியிடப்பட்டது.

போராட்டக் களத்தில் உயிர் துறந்த போராளி.நம்மாழ்வார் அவர்களுக்கு இதனை சமர்ப்பித்தலோடு படம் ஆரம்பமாகி, போராட்டக் களத்தில் நம்மாழ்வார் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கும் ஒரு காணொளியோடு படம் நிறைவை பெற்றுள்ளது.

“நீரின்றி அமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே!
நீரும் நிலனும் புணரீ யோரீண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே”
எனும் புறநானூற்று வரிகளோடு தனது திரையை விரிக்கிறது படம். முன்னாள்.பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் மீத்தேன் திட்டத்தை மறைமுகமாகச் சுட்டிக் காட்டும் ஒரு காணொளியும், குஜராத் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்தின், பிரசாந்த் மோடியின் இத்திட்டம் குறித்தான பேச்சோடும் படம் மீத்தேனின் செயல் திட்டங்களையும், இன்னபிற முழுமைகளையும் பேசத் தாவுகின்றது.

நிலக்கரி இடுக்கிலிருந்து மீத்தேன் எடுக்கும் ‘சி.பி.எம்’ முறைதான் இங்கு பயன்படுத்தப்படப் போகின்றது. முதலில் 6000-அடிகளுக்கு ஆள் துழைகளிட்டு, அதனிலிருந்து பல்லாயிரம் அடிகளுக்கு பக்கவாட்டுத் துளைகளை இடுவர். இந்த துளைகளின் வழியே நச்சு இரசாணயங்களை மிக அதிக அழுத்தத்தோடு செலுத்தி, பாறைகளை வெடிக்கச் செய்து, அதிலிருந்து வெளிப்படும் மீத்தேன் இந்த இரசாயணங்களோடு கலந்து குழாய் வழியே வெளியேறும். இதிலிருந்து மீத்தேனை பிரித்து எடுப்பர்கள். என்ற வண்ணம் இந்த திட்டத்தின் செயல் வடிவத்தினை சற்று சுருங்க்ச் சொல்லிவிட்டு அப்படியே இதனின் 
அபாயங்களை மெல்ல மெல்ல விவரிக்கின்றது திரை.

கும்பகோணம் வட்டத்தில்: கொத்தங்குடி, பெரப்பட்டி, வண்வாஞ்சேரி, திருச்சேறை, துக்காச்சேரி, ஆமங்குடி, விட்டலூரும்,
குமாரமங்கலம் வட்டத்தில்: நாச்சியார் கோவிலும்,
திருவிடை மருதூரில்; மஞ்சமல்லி, நரசிங்கம்பேட்டையும்
ஒரத்தநாட்டு வட்டத்தில்: குலமங்கலத்திலும், குடவாசலில்;குடவாசல்,சித்தாடி,மேலப்பாளையம் மலுவச்சேரி, ஓகை, கீழப்பாளையூர், கமுகக் குடி, பத்தூர், மஞ்சக்குடி, வடவேர், செல்லூரிலும்,
வலங்கைமானில்; சாரநத்தம், மாணிக்கமங்கலம், கொட்டையூர், அனுமந்தபுரம், கீலவடமல், ராசேந்திர நல்லூர், நார்த்தாங்குடி, கோயில்வெண்ணி, ஆதனூர் கண்டியூரிலும், நீடாமங்கலத்தில்; பூவனூர், கீழவாந்தச்சேரி, அரிச்சபுரம், அனுமந்தபுரம், அன்னவாசல், காளாச்சேரியிலும், மன்னார்குடி வட்டத்தில்; கர்ணாவூர், வடபாதி, சேரன்குளம், மன்னார்குடி, அரவந்தூர், சவளக்காரன், மூவர் கோட்டை, பருத்திக்கோட்டை, களஞ்சிமேடும் ஆகியன பகுதிகளில்தான் மீத்தேன் எடுக்கும் திட்டம் முதலாவதாக செயல்பட உள்ளதாகவும். இது தற்சமயம் ஐம்பது கிணறுகள் எனவும், வருங்காலத்தில் இரண்டாயிரம் கிணறுகள் தஞ்சை டெல்டா பகுதிகளில் உருவாக்கப்பட உள்ளதாகவும் புள்ளி விவரங்களை விவரித்து ஆவணப்படுத்துகிறது காட்சிகள்.

இதற்காக காவிரி மட்டுமில்லை, ஒட்டுமொத்த தமிழகத்தின் நீர் நிலையங்களிலிருந்தும் நீர் உறிஞ்சப்படும் எனவும், இது தொடர்ந்தால் நீர் ஆதாரம் முற்றிலும் அழிந்துபோகும் அபாயம் உள்ளதென நீரின் அழிவை பலவிதமான காட்சி ஆதாரங்களோடு சொல்லப்படுகிறது. ஒரு மீத்தேன் கிணற்றிலிறுந்து மீத்தேன் எடுக்க மட்டும், 400-டேங்கர் லாரி மணலும், நீரும் வேண்டுமெனவும், இவைகளை எப்படி டெல்டா பகுதிகளில் மட்டுமே எடுக்க முடியுமெனவும், ஒன்றிற்கே இந்நிலை எனில் இரண்டாயிரம் எனில் தாய் தமிழக இருக்குமா என்கிற நியாயமான கேள்விகளையும் படம் முன்வைக்கிறது. நீருக்கு இந்நிலை எனில் மணலுக்கு என்ன நிலை என விளக்குகின்றது. இதுமட்டுமல்லாது மீத்தேன் எடுக்க வேண்டுமெனில் தொடர்ந்து நிலத்தடி நீரை வெளியேற்றியாக வேண்டும் என்பதனால், நிலத்தடி நீர் குறைந்து தரை கீழிறங்கும் அபாயமும், இதன் எதிர்காலம் கட்டிடங்கள் இடிவும், கடலோர கிராமங்கள் கடலில் கலக்கும் கோரமும் நிகழும் எனவும் எச்சரிக்கிறது ஆவணமாக.

மீத்தேன் எடுத்து நிலைத்தையும், மண்னையும் பாழ்படுத்தி பாலைவனமாக்குவது ஒருபுறமெனில், இதில் பயன்படுத்தப்பட்ட நச்சு கழிவுகளை வெளியேற்றி எப்படி பாதுக்காக்கப் போகிறார்கள் என்ற கேள்வியோடு, இதற்கு இதுவரை எந்த நாடும் சரியான வழிமுறையை கையாளவில்லை எனவும், இதுபோன்ற நச்சுக்கள் நீர் ஆதாரங்களோடு கலந்து, மக்கள் பயன்பாடுகளுக்கு குழாய் வழியே வெளியேறி பலவிதமான அழிவுகள் நிகழும் எனவும் சொல்கிறது. இப்படித்தான் அமெரிக்காவில் ஒருநாள் அதீத மழை பெய்து இந்த நச்சுக் கழிவுகளெல்லாம், பலவாறு கலந்துவிட்டன. இதனால் அங்கு பலருக்கும் புற்று நோய், பிறவிக் கோளாறுகள் தொற்றிக் கொண்டன. இந்த மீத்தேனானது எளிதில் தீப்பற்றக் கூடையது. ஆகையால் மக்களின் பயன்பாட்டு நீரில் இது கலந்தால், நிலைமை என்னவாகும் என்ற வினவலோடு, மீத்தேன் கலந்த நீரில் தீப்பற்றி எரிவதை சோதனை செய்து நிரூபிக்கும் காட்சிகள் திரையாகின்றன.

இப்படி மணல், நீர் இரண்டையும் கடந்து, இத்திட்டத்திற்க்காக நிலத்தின் குறுக்கே பதிக்கப்படும் குழாய்களைப் பற்றி சொன்னால் அதன் அபாயம் நீளும் எனவும், ஒருமுறை தனது நிலத்தில் குழாய் பதிக்க அனுமத்திதுவிட்டால், அப்புறம் ஆயுள் முழுவதும் குழாயை நிலத்தார்தான் பாதுகாக்க வேண்டும், இதில் சிறு கோளாறு என்றால் கூட அத்தனை பழியும் நிலத்தில் உடைமையாளர் மீது சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை முதல் தூக்குவரை இடுவதற்கு சட்டமசோத உள்ளதாகவும் காட்சிகளில் எடுத்துப் பேசப்படுகிறது.
இதெல்லாம் மீத்தேன் திட்டத்தின் அபாயங்களாகப் பார்க்கப்பட்டாலும், 

இவைகளையெல்லாம் இந்த அரசு ஏன் ஆதரிக்கின்றது என்கிற பார்வையை இன்னும் கூர்திட்டி இது ஒரு தமிழின விரோதச் செயலென விளக்கமளிக்கிறது. இந்த திட்டம் குறித்த ஆய்விற்க்காக தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின், எம்.எஸ்.சுவாமிநாதனும் உள்ளாராம். இவர்தான் நமது விவசாயத்தின் பாரம்பரிய விதைகளை வெளிநாடுகளுக்கு விற்று, நவீன அமோக விளைச்சலென்று சொல்லி நவீன ரக விதைகளை புகுத்தியவராம். மேலும், மீனவர்களின் வாழ்வாதரங்களுக்கு எதிராக மசோத தாக்கல் செய்தது, கடலோர நிலப்பரப்பை சூறையாடுவது, 2009-இறுதி ஈழப்போரில் வடக்கின் வசந்தம் என குறிப்பிட்டு இராஜபக்சேவிற்கு துணைநின்ற இராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் எனவும் படம் விவரித்து, இப்படிப்பட்ட தமிழின எதிர்ப்பு நிலை கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆய்வை எப்படி நம்ப முடியும் ஆகவே, இந்த விடயத்தில் தமிழக அரசின் முதலமைச்சரையும் சந்தேகிக்க உள்ளது எனக் கூறியதோடு, தமிழக முதல்வர் சென்ற ஆட்சியின்போது தேர்தல் பிரச்சாரத்தில் மீத்தேனை எதிர்த்துப் பேசியதும், தான் இவைகளைத் தடுப்பேன் எனக் கூறியதையும் காட்சிப்படுத்தியுள்ளனர். 

இதேபோல கூடங்குளம் எதிர்ப்பு போராளிகளை அழைத்துப் பேசி தான் இவைகளை ஆதரிக்கமட்டேனென கூறியதையும், பின்னர் ஆட்சிப் பொறுப்பில் வந்தவுடன் அப்போராளிகளை ஒதுக்கியதனையும் நினைவிற்க்குள் கொண்டுவந்து, துணைக்கு இடிந்தகரை போராளியான.சுந்தரி எனபவரின் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர்.
எப்படி தற்போதைய முதல்வரை கேள்வி எழுப்பியுள்ளனரோ, அதேபோல திட்டத்தினை கொண்டுவந்த திமுக அரசையும், காங்கிரஸ் அரசையும், இதற்கு எதிர்விப்பு தெரிவிக்காது மெளன ஆதரவிலிருக்கு பாஜக-வினையும் நம்புவதற்கு இல்லை எனவும், மாற்றை நயமபட சொல்லி நகர்கிறது. அதேசமயம் ஆளும் தற்போதைய அதிமுக அரசினை இவர்கள் சாடியுள்ள விதம், மிகவும் மென்மைப் போக்காக உள்ளது என்பது குறை விமர்சனத்தில் சேர்க்கலாம். டி.ஆர்.பாலு, எம்.எஸ் சுவாமிநாதன் போன்றோரை பகிரங்கபடுத்தியயவர்கள், ஏன் முதலமைச்சர்.ஜெயலலிதா அவர்களை மட்டும் மென்மையாகக் கடந்து போகின்றனர் என்பது மனது எழுப்பும் கேள்வி.

தமிழகத்தில் தொடர்ந்து நிகழும் பலவிதமான அழிப்புச் செயல்களால் போராட்டக்காரர்கள் ஒன்றிலிறுந்து ஒன்று தாவிக் கொண்டே போக, முந்தியவைகள் மறந்துவிடப்படுகின்றன. அரசும் திசை திருப்புவதின் மூலம் தனது மக்கள் விரோதத் திட்டங்களை செயல்படுத்திவிடுகின்றனர். ஆனால் இந்த இடத்தில் படக் குழுவினர் ஒரு பொதுக் குறீயீட்டை, ஈழ இறுதிப் போரில் மக்கள் கொல்லப்படும் காட்சிகளையும், பாலச்சந்திரன் கொல்லப்பட்டக் காட்சிகளையும் சொல்லுவதன் மூலம் முன்வைக்கின்றன. அது இவைகளுக்கெல்லாம் தீர்வு தனித் தமிழர் தேசம் என்பதாக உள்ளது. இடிந்தகரையானாலும் சரி, மீத்தேன் ஆனாலும் சரி இது தமிழர் அழிப்பு செய்ல்கள்தான் என படத்தில் சிலரின் கருத்துக்கள் வலுப்பெற்று சொல்லப்படுகின்றது. தங்கள் நிலங்களை இழந்து, வறுமையில் மாளப்போகும் மக்களுக்கு அரசு மாற்று என்ன வைத்துள்ளது எனவும், ஈழத்தில் எப்படி கொன்று குவித்து விரட்டி அடித்தார்களோ, அதேபோலத்தான் இங்குள்ளவர்களை வாழ வழிகற்றவர்களாக்கி வெளியேற்றப் போகிறார்கள் என்கிற ஒன்றையும் படத்தின் காட்சிகள் முன்வைக்கின்றன.

ச.காந்தி,(தமிழ்நாடு மின்பொறியாளர் சங்கம்), த.ஜெயராமன்(மீத்தேன் எதிர்ப்பு கூட்டியக்கம்), வ.சேதுராமன்(இனைச் செயலாளர் தமிழ்நாடு அறிவியல் குழுமம்), கணேச மூர்த்தி(டெல்டா புலிகள்), திருநாவுக்கரசு(தாளாண்மை இயக்கம்), ரா.லெனின்(பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்), பாரதிச் செல்வன்(மருத்துவர்), சுந்தராஜன்(பூவுலகின் நண்பர்கள்), பெ.மணியரசன்(தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி), உமர்(மே-17 இயக்கம்), குடந்தை அரசன்(விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி), போன்றோர் இந்த ஆவணப்படத்தில் தங்களின் மீத்தேன் எதிர்ப்புக் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். மேலும் இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் ஒரு பத்திரிக்கை பேட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கான வீர்யமான காட்சியாக இது அமைந்துள்ளது.

வேங்கடப் பிரகாசின் பின்னனியில், விஜயகுமார் மற்றும் முத்துக்குமாரின் படத்தொகுப்பில், நவீன் பவுல்ராஜ்ஜின் பாடலில், யாழ் பிரபாகரனின் இசையில், ரூபன் லோபஸின் ஒளிப்பதிவில், அருண்குமார், மற்றும் மதரா.கழுகுமலையின் கருத்தாக்கத்தில், நிமிர் வெளியீட்டில், மே-17 இயக்கத்தின் சார்பில், சரவணன் தங்கப்பாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது இந்த ஆவணப்படம்.

40-நிமிடங்கள் காட்சி ஓடுகிறது. இறுதியில் உத்வேகமான பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படத்தில் பலவிதமான அரசியல்கள் பேசப்படுகிறது. அதேசமயம் சொல்ல மறந்த கதையாக சிலயவைகள் விடப்பட்டும் உள்ளன. ஆனாலும் அதீதம் சொல்ல வேண்டியவைகள் இடம்பெற்றுத்தான் உள்ளன.

மீத்தேன் எதிர்ப்புப் போராட்டக் களத்தில் இந்த ஆவணப்படம் நிச்சயம் ஒருவித போராட்டக் கருவியாகப் பயன்படும் என்பதில் மாற்றமில்லை. இதற்க்காக இக்குழுவினர் அதிக சிரமங்களை மேற்க்கொண்டும், காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு மீண்டது போன்ற வலிகளையும், பொருளாதார நலிவுகளையும், எட்டு மாத காலச் செலவுகளையும், மே-17 இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் இப்பட வெளியீட்டின் போது குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நல்ல போராட்ட யுக்திகளை சிரமேற்று செய்திருக்கும் படக் குழுவினருக்கு பாராட்டுக்கள்!

நன்றி : கீற்று இணையதளம்
இணைப்பு தளம் : http://keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/26735-2014-06-23-23-56-26


தோழமையுடன்

- பழனி ஷஹான்