கால்கள் பின்னோக்குகின்ற பொழுது
ஆத்மாவில் ஆழியின் சப்தம்
இடைவிடாது ஒலிக்கின்றது!
இட மார்பில் துளை உண்டாகி
ஏதோ கசிகின்றது!
நிசப்தமான சூழலிலும்
ஒருவித கூச்சல்
கதிரவனும் கருப்பாய்த் தெரிகின்றது!
ஆத்மாவில் ஆழியின் சப்தம்
இடைவிடாது ஒலிக்கின்றது!
இட மார்பில் துளை உண்டாகி
ஏதோ கசிகின்றது!
நிசப்தமான சூழலிலும்
ஒருவித கூச்சல்
கதிரவனும் கருப்பாய்த் தெரிகின்றது!
கால்கள் பின்னோக்குகின்ற பொழுது
கடந்து வந்த யாவும்
எதிர்ப்புகள் நிரம்பிய பாதைகளாய் தென்படுகின்றன!
கழிவுகள் தேங்கிய, காயங்கள் நிரம்பிய
குழிகள் அடர்ந்த பாதைகளாகவே தென்படுகின்றன!
கால்கள் பின்னோக்குகின்ற பொழுது,
ஆதரவிற்கான குரல்கள் தோன்றி,
அறிவுரை போதனைகள் சொல்லி,
அறிவிழியென வலுக்கட்டாயமாக கூற வைக்கின்றன!
கால்கள் பின்னோக்குகின்ற பொழுது,
காரியசித்தி, சுயநலக்காரன் என்று
நம்மை சடைந்து கொள்கின்றன!
புது உலகம் வரவேற்கா விட்டாலும்
பழைய உலகம் தூற்றுகிறது!
தூற்றிவிட்டு போகட்டும்
நாளை என் புகழ் பாடும் பெரு மழை!
நன்றி: மாற்று (maattru.com)இணையதளம்:
http://maattru.com/கால்கள்-பின்னோக்குகின்ற/#more-3413
-பழனி ஷஹான்

No comments:
Post a Comment