Thursday, 5 October 2017

கோவை கலவரத்தில் எனது சாட்சியம் - இரண்டாம் பதிப்பு

ஜூன் 2016இல் ஆழி பதிப்பகத்தின் மூலம் முதல் பதிப்பைக் கண்ட “கோவை கலவரத்தில் எனது சாட்சியம்” நூல், இப்போது பாரதி புத்தகாலயத்தின் வெளியீட்டில் இரண்டாம் பதிப்பை அடைந்திருக்கிறது.



முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான (1996 - 2001, புவனகிரி தொகுதி, தமிழ்நாடு) ஏ.வி.அப்துல் நாசரின் நேரடி கள அனுபவங்களின் தொகுப்புதான் இந்நூல். அவரின் வாய் மொழிச் சாட்சியத்தை, நான் எழுத்தாக்கம் செய்துள்ளேன். கோவை கலவரம் (நவம்பர் 1997) மற்றும் குண்டுவெடிப்பின் (பிப்ரவரி, 1998) பின்னணி அரசியல் குறித்து, அதில் பாதிப்படைந்தவர்களுக்கான மறுவாழ்வு உதவிகளை மேற்கொண்டது குறித்தும் நாசர் இந்நூலில் விரிவாக பகிர்ந்துள்ளார்.




இந்நூலின் இரண்டாம் பதிப்பு, பாரதி புத்தகாலயத்தின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்.

தோழமையுடன்
பழனி ஷஹான்

No comments:

Post a Comment