Wednesday, 10 April 2013

என்னை விடுவியுங்கள்




என்னை விடுவியுங்கள்
செய்யாத தவறுக்குத்
கூண்டுப்பறவையான என்னை
இந்த சிறு அறையில் பிணைந்திருக்கும்
இந்த முள் சங்கிலியிலிருந்து….


இந்த திகிலூட்டும் சிறையில்
பல குரல்களின் அருவி இல்லை
அவை நிறுத்தாமல் பேசும்
பறவைகளின் கீச்சொலி இல்லை
பொங்கி எழும் சிரிப்பொலியும் இல்லை
தாலாட்டின் இனிய ஒலியோ
இல்லவே இல்லை……

மார்பிலிருந்து குழந்தைகள் பிய்த்தெடுக்கப்பட்ட
அன்னையரின் அழுகையொலி
கணவரை பிரிந்த பெண்கள்
விதவைகளின் ஒப்பாரி பாடல்
பசுந்தழை நிறச் சீருடை அணிந்த இளைநர்கள்
தங்கள் கைகளால் எழுதியவை……

எரியும் பந்தைக் காண்கின்றேன் நான்
பரிசோதிக்கும் முயற்சியில்
ஈடுபட்ட அறிவு
தன்னை ஒரு பெருங் காட்சியாய்
காட்டிக்கொண்ட பின் வரும்
பாடழிவின் பயங்கர முகம் அது……….

செம்மாந்து போயினர் அவர்கள்
இன்பத்தைச் சுகிக்கும் அடிமைகள்
போதையில் கிறங்கியவர்கள்
உற்சாகக் கேளிக்கையில் மிதக்கையில்
அடிபணிந்துபோய்

மனதையையும் அறிவையும்
அவை இதழ் பிரியும் முன்னே இழந்தவர்கள்
அவர்கள் செல்வம் கெளரவம் இரண்டையும்
கால அலை வீச்சு
ஏழு உயர்மலைகளுக்கு அப்பால்
அடித்துச் சென்றாகிவிட்டது…….

வெகுதூரம் உள்ள மற்றவர்களுக்கு
இது ஒரு வரம்
பேடி ஆத்மாக்கள்
செயலற்றுப்போய்ப் பார்த்தபடி நின்றபோது
குதூகலத்துடன்
அறுவடை செய்கிறார்கள் விளைச்சலை……

இருளில் ஒளிரும் விளக்கைப் போல
வெகுசீக்கிரம் கழிந்துவிடும்
அரிய வாழ்க்கை இது
மரணமில்லா மரம் ஒன்றை நட
சாவா மருந்தை விதைக்க
என்னை அனுமதியுங்கள்…….

ஒரு பறவையைப் போல
அகிலத்தின் ஒவ்வொரு மூலைக்கும் பறந்து
வாழ்வு சாவை எதிர்கொள்ளும் சந்திப்பை எட்டி
மானுடத்தின் கானத்தை பாடவிடுங்கள்……


என்னை விடுவியுங்கள்
முள் சங்கிலியை அகற்றுங்கள்
தவறாக நினைக்காதீர்கள்
ஒரு கூண்டு பறவையின்
ஆசை இது ஒன்று மட்டும் தான் ...!

-    இரோம் ஷர்மிளா


நூல் : அமைதியின் நறுமணம்






No comments:

Post a Comment