வீழ்ந்து விடாதே
!
விடியல் கிட்டும்
சோர்வு கொள்ளாதே!
எழுந்து நின்றிடு
!
ஏணிப்படிகள் காத்திருக்கின்றன
தாழ்வு கொள்ளாதே !
ஒரு நாள் வரும்
உன் முகவரி உலகறிய
அதற்க்காவேனும்
தோழா
ஒரு நிமிடம் !
ஒரு நிமிடம் முயன்று
பார்
அது மாறும் ஒவ்வொரு
நிமிடமாய் !
உன்னை வாசிக்க
ஓர் உலகம் உண்டு
அதற்க்காவே
நீ சுவாசிக்க வேண்டும்
சோதனைகளை
முயற்சிகள் பல
கொண்டு !
வெற்றிகள் உண்டு
உன்னில்
வெற்றுக் காகிதமாய்
!
அதை நிரப்பிடு
தோழனே
தன்னம்பிக்கை எனும்
பேனாவில்
முயற்சி எனும்
மை ஊற்றி !
இலட்சியம் கைகொள்ள
ஆவலுண்டு
சாதனையை வென்றெடுக்க
முயற்சிகளுண்டு
பின் ஏன் இன்னும்
அச்சம்
அதில் முந்தியவர்களை
கண்டு !
அவ மதிப்புகளால்
மனத் தாழ்வுக்குள்
அகப்படாதே
நீ தழைத்தோங்க
உன்னை தாங்கப்
போகும்
ஆணி வேர்கள் அவை
!
பாறைகள் பல கடந்து
இடறுகள் பல தாண்டி
இரவு பகல் பற்பல
கழித்து
பெரும் நெடிய பயணம்
மேற்க்கொண்டே
நதிகள் வெல்லுகின்றன
கடலாய் மாறி !
சிற்சிறு கற்களும்
பொடி பொடி மண்
துகள்களும்
மெல்ல மெல்ல சேர்புகள்
கொண்டே
உயர்ந்து நிற்கின்றன
மலைத் தொடர்களாய் !
செய்வதற்க்கு ஏதுமில்லையென
வெறுமை ஏமாப்பு
கொள்ளாதே !
ஏதேனும் செய்திடு
வெற்றாய் கழிந்திடும்
காலத்திற்க்கு
விருந்தளித்திடு
அது உனக்கு பரிசளித்திடும்
!
பெரும் புத்தகத்திற்க்கு
தொடக்கம்
சிறு பொட்டு மை
துளிகளே !
பெரும் சாதனைகளின்
தொடக்கம்
தடுமாறி விழுவதிலேயே
!
தடுமாறி தடுமாறி
விழுந்திடு
ஆனால் தடம் மாறி
மட்டும் எழுந்திடாதே !
வழிகள் இல்லையென
கவலைகள்
களைந்திடு
நீ சென்றால் அதுவே
மாறும்
பாதைகளாய் !
தோழா !
ஒரு நிமிடம் முயன்று
பார்
அது மாறும் ஒவ்வொரு
நிமிடமாய் !
ஒவ்வொரு நிமிடமும்
உருமாறும்
நாளைய சாதனைக்
களமாய் !
(தூது ஆன்லைன் இணைய தளத்தில் வெளியான எனது படைப்பு)
(தூது ஆன்லைன் இணைய தளத்தில் வெளியான எனது படைப்பு)
- பழனி ஷஹான்
No comments:
Post a Comment