Friday, 31 May 2013

அழியா அனல் காடு – ‘சே’

 




“சே”
மரணித்த ஒருவனின்
மரணிக்காத ஓர் வடிவம்….

மனிதருள் மடிந்திட்ட
உரிமைக் கனலை, வல்லுணர்வை
மீளச்செய்த
ஓர் ஒற்றை எழுத்து !

புரட்சி எனும் மொழியை
பாரில் பலரை
பேச வைத்த எழுத்து

ஏட்டளவிலும் அகற்றிடு
ஏகாதிபத்தியத்தை
என்று
எல்லோரையும் முழங்க வைத்த எழுத்து !

அடிமைத்தனம்
எங்கு சூழ்ந்திடினும்
எதிர்த்து நின்றிடுவென
எளியோனையும் கூற வைத்திட்ட
கடலலைச் சீற்றம் !

எதேச்சதிகாரத்தின்
ஆணி வேரை உலுக்கி
பிடுங்கிய
உக்கிர எழுத்து

உலகம் முழுமைக்குமான விடுதலை
என்று உறுமி
அடிமை உள்ளங்களில் யாவும்
ஊக்கம் தந்திட்ட ஊன்று கோல்,

துணிவின் சுருக்கம் !

புரட்சி எனும் கொடி
ஏந்திய
யாவருக்கும் முகவரி
இந்த ஒற்றை எழுத்து !

அடக்குமுறையின்
அடிச்சுவடையே
அடங்க வைத்த அபாய ஒலி !

கொடுங்கோலனின்
கோட்டைக்குள் நுழைந்து
சொடுக்கிட்டு எச்சரித்த
தீப்பிழம்பு !

தோட்டாக்களை தோலுயர்த்தி
எதிர்த்து நின்ற
வீரத்தின் அகராதி !

வலைக்குள் சிக்குண்ட போதும்
அலட்டு சிரிப்பை உதிர்த்திட்ட
அஞ்சாமை !

பீரங்கிப் படையை
தெரித்தோடச் செய்த
தீரம் நிறைந்த செந்நிற
கூர் பார்வை கொண்ட
எரிகழல் மாந்தனின் முதன்மை
எழுத்து !

ஆர்ப்பரிக்கும் அகோரச் சின்னம் “சே”
என்றும்
அழியாத அனல் காடு !




 
தோழமையுடன்
பழனி ஷஹான்





.

No comments:

Post a Comment